வன்மை எனக்குஅருள்வாய் !

அன்புள்ள இறைவனே

என்வேண்டுதல் கேட்டருள்வாய்

வன்மை எனக்குஅருள்வாய் – நீ

எண்ணும் முடிவை ஏற்பதற்கு

பொறுத்தருள்வாய் என்னை நீ – நான்

வருத்தும் பாவம்ஏதும் செய்திருப்பின்

எனை அழைத்திடல் ஏற்றதென

நினைத்திடில் உடனே நீ

வலியும் உறுதியும் தந்திடுக- என்மேல்

கழிபேரன்பு கொண்டோர்க்கே

என்றனுக்கு உதவிடுவாய்

தன்னிரக்கப்பயணம் மேற்கொள்ளாமைக்கே

ஏனென்று கேட்பையோ

உன்விழைவே சாலச்சிறந்ததுஎன

ஏற்பதற்கும் நம்பிக்கை கொள்வதற்கும்

உதவிடுவாய்  ஓ இறைவா

அருள்கூர்ந்து எனக்கு உதவிடுவாய்

உன்னைப் பற்றுதற்கே – அப்பற்றும்

அச்சத்தினாலன்று

என்றென்றும் நம்பிக்கை உரம் கொள்வதற்கே

 

– இளவல்

குறிப்பு:  மரணப்படுக்கையில் இருந்த சிறுமியின் ஆங்கிலக்கவிதை  ஆங்கில இதழ் ஒன்றில் வந்திருந்தது. அதன் மொழிபெயர்ப்பு. சிறுமியின் பெயர், இதழின் பெயர் நினைவில்லை.