தை 15, 2050 செவ்வாய்  29.01.2019 மாலை 4.00

ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி

பேராசிரியர் ஈசுவரி () சொ சின் (Zhou Xin),

(துறைத் தலைவர்,
 தமிழ்மொழித்துறை,
அயல் மொழிப் பல்கலைக் கழகம்,
பீகிங்கு, சீனா)

தமிழன்பர்களோடு கலந்துரையாட உள்ளார்.

வாய்ப்புள்ள ஆர்வலர்கள் வருக!

முனைவர் சான் சாமுவேல்

நிறுவன இயக்குநர்

ஆசியவியல் நிறுவனம்,
செம்மஞ்சேரி, சோழிங்க நல்லூர்,
சென்னை 600 119
பேசி: 9840526834
இணையத் தளம் :  www.instituteofasianstudies.com

குறிப்பு: சீனாவில் பீகிங்கு நகரில் பீகிங்கு வெளிநாட்டு ஆய்வுப்பல்கலைக்கழகம் [Beijing Foreign Studies University (BFSU)] இயங்குகிறது. சீன மொழியில் இதனைச் சுருக்கமாகப் ‘பெய்வெய்’ என்று  அழைக்கின்றனர் தமிழில் அயல்மொழிப் பல்கலைக்கழகம் என்றும் குறிப்பிடுகிறோம்.

சீனாவின் வெளியுறவுத் துறையின்கீழ் இயங்கும் இப்பல்கலைக்கழகத்தில் வெளிநாடுகளைப் பற்றிய படிப்புகள் தரப்படுகின்றன. தமிழ் முதலான 84 மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன.

சீனர்களுக்குத் தமிழ் மொழியினைக் கற்றுத்தரும் திட்டம் ஆசியவியல் நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது. சீன நாட்டிலிருந்து பத்து மாணவர்கள் இங்கு 4 ஆண்டுப்படிப்பில் சேர்ந்து தமிழ்மொழியினைப் பயின்று வருகின்றனர்.

1941 இல் நிறுவப்பட்ட வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகத்தில் ஈராண்டுகளுக்கு முன்னரே தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது. சீனாவில் தமிழ் என்று மேம்போக்காகத் துள்ளுவதை விட அதனைப் பரவலாக்க மத்திய அரசையும் தமிழக அரசையும் கொடையாளர்களையும் வலியுறுத்த வேண்டும். அதற்கு இந்தக் கலந்துரையாடல் துணை புரியும்.