வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இலக்கியக் கூட்டம்
கொடு மணல் அகழாய்வு காட்டும் தமிழர் பண்பாடு
“கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்”
-பதிற்றுப் பத்து
ஈராயிரம் ஆண்டிற்கும் மேல் புவிப்பந்தின் மடிக்குள்ளே சுருண்டு கிடந்த நெல்மணிக் குவியல்களும், முன்னீர் கடந்து நானிலம் ஓடி வணிகம் செய்து கொணர்ந்த ஒளிரும் மணியும் கற்களும், செப்பிலே சிங்கச் சிலையும், இரும்பு உருக்கு உலையும், தாய் மொழியாம் தமிழி எழுத்துக் கொண்ட பானைகளும், நொய்யல் ஆற்றின் மடியிலே புரண்ட கொடுமணம் (கொடு மணல்) என்றோர் பேரூரில் கண்டெடுக்கப்பட்ட தமிழனின் எச்சங்கள்! அவன் பெரு வாழ்வு வாழ்ந்து முடித்து, விட்டு விட்டுப் போன பேரினத்தின் மிச்சங்கள்! தமிழினம் வாழ்ந்த நனி சிறந்த நல் வாழ்வின் சான்றுகள்!
 
உருண்டு கொண்டிருக்கும்
புவிக்குள்ளே
உலாவிக் கொண்டிருந்ததோர் இனம்- அது
உறங்கிப்போய்க் காலம் பல
போன பின்
உறக்கம் தெளிவித்து
உண்மையை உலகிற்குணர்த்தியோர்
ஓராயிரம் பேர்! ஓராயிரத்தில்
உங்களோடு ஒருவர் இங்கே
உரையாட வந்துள்ளார்!
பொருந்தல், கொடுமணல்,
பாலாறு, வைகைக் கரை,
பொருநைக் கரை என
நீரோடும் வழியெல்லாம் முன்னோரின்
ஊரைத் தேடிய உலகளந்தவர்!
ஆழியிலே அமிழ்ந்து கிடக்கும்
அன்னைத் தமிழரின்
சுவடுகளைத் தேடித் திரியும்
அகல் விளக்கு!
ஊர் போற்ற வாழ்ந்த
தமிழ் மறக்குடி தாங்கிய
கொடுமணல் குறித்து
உலகிற்குணர்த்த உரம் கொண்டவர்
உத்தமர் தம் உரையைக்
கேட்போம் வாரீர்!
 
தொன்மை நிறைந்த தமிழனின்
மேன்மையை நமக்கெல்லாம் கூற வரும்பேராசிரியர் கா.இராசன் அவர்களின் கொடுமணல் குறித்த உரையைக் கேட்க வாருங்கள்.
நாள்: ஐப்பசி 15, 2051 / அட்டோபர் 31, சனிக்கிழமை
நேரம்: இரவு 9 மணி (கிழக்கு)
 
எங்களோடு இணைந்து கொள்ள: tinyurl.com/FeTNA2020ik
கூட்ட எண் / Meeting id: 954 1812 2755
இப்படிக்கு,
பேரவை இலக்கியக் கூட்டக் குழு