சார்சாவில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி

 

சார்சா இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் திருச்சி சாதிக்கு அலி தலைமை வகித்தார்.

’என்னைத் தேடி’ என்ற சிறுகதை நூலை இனிய திசைகள் ஆசிரியர் பேராசிரியர் சே.மு.முகமதலி வெளியிட முதல் படியைச் சாதிக்கு அலி பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் இந்த நூலை நசீமா இரசாக்கு திறம்பட வடிவமைத்துள்ளார். அவர், “தியான வாழ்வின் மூலம் வாழ்வில் வசந்தத்தைக் காண முடியும் என்பதை இந்த நூலின் மூலம் சிறப்பாக விளக்குகிறார். இதுபோல் இன்னும் பல நூல்களை வெளியிட்டு இலக்கிய உலகில் அவரது பயணம் இன்னும் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில்  இதழாளர் முதுவை இதாயத்து, திருச்சி சாவித்து முதலான பலர் கலந்து கொண்டனர்.