மங்கலதேவிக் கோட்டம் – நூல் அறிமுகம் : தொல்காப்பியன் தங்கராசன்

மங்கலதேவிக் கோட்டம். நூல் அறிமுகம். காப்பிய ஆக்கம்; சிங்கப்புரம்(சிங்கப்பூர்) கோ.அருண்முல்லை. ஆனி 29, 2045 / சூலை, 13,2014 ஞாயிற்றுக் கிழமை சிங்கப்பூர் பொது நூலகத்தில் 5,ஆம் தளத்தில் நடக்கவிருக்கிறது பூம்புகார், கடலில் மூழ்கிவிட்டது. பண்பாட்டு அடையாளம் யாவும் அதில்தொலைந்துபோனது என்று எவ்வளவு காலந்தான் சொல்லிக்கொண்டிருப்பது? அதை ஆய்வுசெய்தால் என்னவெல்லாம் நிகழும் என்ற கற்பனையே இந்தக் காப்பியம்.சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சிறப்பித்த பூம்புகார் காட்சியை காட்சியைஇன்றும் கண்டார்கள் என்பதாகக் கற்பனை செய்து அதைக் காப்பியமாகவடித்ரிருக்கிறார். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோவில்எழுப்பிச் சிறப்பித்தான் என்பது வரலாறு.இன்று தங்களுடையது,…

“தமிழ்படிப்போம்” நூல் வெளியீட்டு விழா:

ஃசுகார்பரோ குடிமை நடுவத்தில் (Scarborough Civic Centre) நடைபெற்ற “தமிழ்படிப்போம்” என்னும் நூல் வெளியீட்டு விழா: புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ்மொழியைப் பிள்ளைகள் விரும்பும் வகையில் எளியமுறையில் எப்படிக் கற்பிக்கலாம் என்பதை எடுத்துக்காட்டும் “தமிழ்படிப்போம்” என்னும் நூல் வெளியீட்டு விழா வைகாசி 30, 2045 /13-06-2014 அன்று ஃசுகார்பரோ குடிமை நடுவத்தில் (Scarborough Civic Centre) நடைபெற்றது. விழாவிற்கு வாழ்நாட்பேராசிரியர் சண்முகதாசுஅவர்கள் தலைமை தாங்கினார். சிந்தனைப்பூக்கள் பத்மநாதன் தொடக்கவுரைநிகழ்த்தினார். பேராசிரியர் சந்திரகாந்தன், பேராசிரியர்இ.பாலசுந்தரம், விரிவுரையாளரான திருமதி செல்வம் சிறிதாசு, கவிஞர் கந்தவனம்பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் திருமதி….

“தூறல்” இதழின் ஐந்தாம் ஆண்டு நிறைவு – செந்தமிழினி பிரபாகரன்

ஆனி 6, 2045 /சூன் 20, 2014 அன்று கனடா மண்ணில் வெளிவரும் வண்ண அட்டை இதழான “தூறல்” இதழின் ஐந்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. பெரும் திரளான மக்கள் குழுமிய ஒரு சிறப்பு நிகழ்வாக இருந்த இந்த நிகழ்வுக்கு இங்குள்ள தனியார் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பிறர் போலன்றி அழகு தமிழ்ப் பெயராக “தமிழ் மழை” எனப் பெயர் வைத்தமைக்கும் நிகழ்வை முற்று முழுதாக தமிழ் மணம் கமழும் வண்ணம் சிறப்புற வடிவமைத்தமைக்கும் இதழாசிரியர் சிவாவுக்கும் நிருவாக ஆசிரியர் மோகனுக்கும்…

மெய்யப்பனார் பிறந்தநாள்விழா

மணிவாசகர் நூலக நிறுவனர் மெய்யப்பனார் பிறந்தநாள்விழாவில் ஊரன் அடிகளார் சிறந்த தமிழறிஞர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார் மணிவாசகர் நூலக நிறுவனர் மெய்யப்பனார் பிறந்தநாள்விழாவில் ஊரன் அடிகளார் சிறந்த தமிழறிஞர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். ஆனி 07, 2045 / 21/6/14 அன்று சென்னையில் தினமணி விழா உட்பட ஐந்து பெரும்விழாக்கள்.எனினும் மெய்யப்பனார் அன்பர்கள் திரளாக வந்து விழாவைச்சிறப்பித்தனர்.(முன்னால் சிலம்பொலியார் பின்னால் ஆத்திரேலியா அன்பர்சிரீகந்ததாசா நெல்லைசு.முத்து, உதயைமு.வீரையன், முனைவர் அறவாணன், எழுகதிர்அரு.கோ.எனப் பல சான்றோர்கள் வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர். (படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்) தரவு: …

திங்கள் இலக்கியக் கலந்துரையாடல்

நிகழ்ச்சி நிரல் தமிழில் காலக்கணித இலக்கியம் உரை: கலாநிதி பால. சிவகடாட்சம் கருத்துரை வழங்குவோர் கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் மருத்துவக் கலாநிதி இ. (இ)லம்போதரன் திரு.சிவ.ஞானநாயகன் திருமதி (இ)லீலா சிவானந்தன் மே மாத இலக்கிய நிகழ்வுகள் தொகுப்புரை – தீவகம் வே.இராசலிங்கம் ஐயந்தெளிதல் அரங்கு நாள்:  ஆனி 14, 2045 / 28-06-2014 நேரம்: மாலை 3:00 முதல் 6:00 வரை இடம்: மெய்யகம் 3A, 5637, Finch avenue East, Scarborough, M1B 5k9 தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316 அனைவரையும் அன்புடன்…

நாணல் நண்பர்களின் 3ஆவது ‘நம்ம வரலாறு’

நாணல் நண்பர்கள் குழு ஒருங்கிணைக்கும் 3ஆவது ‘நம்ம வரலாறு’ நிகழ்வு கடந்த ஆனி 1. 2045 / 15.06.2014 ஞாயிறு, மாலை 4.30 மணிக்கு மதுரை பாண்டி முனீசுவரன் கோவிலில் நடந்தது. இம்முறை ‘நம்ம வரலாறு’ நிகழ்வில் “நாட்டார் தெய்வங்கள்” குறித்துஎடுத்துரைக்கபட்டது. நம்ம வரலாறு நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு. சா. கான்சா சாதிக்கு, திரு சே.சிரீதர் நெடுஞ்செழியன் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்கள். நாட்டார் தெய்வமான பாண்டி முனீசுவரன் கோவில் இடத்தை நாட்டார் தெய்வங்கள் குறித்து பேசத் தேர்வு செய்ததில் இருந்தே புரிந்து…

தூறலின் தமிழ் மழை

தூறலின் 5ஆவது ஆண்டை முன்னிட்டு, பெருமையுடன் வழங்கும் கவிப்பேரரசு முனைவர் வைரமுத்து கலந்து சிறப்பிக்கும் “தூறலின் தமிழ் மழை”.

முனைவர் நா.இளங்கோவுக்குப் பாவேந்தர் விருது.

புதுச்சேரி, சங்கரதாசு சுவாமிகள் இயல் இசை நாடகசபாவின் 174 ஆவது மனோன்மணீய நாடக வைர – பொன் விழாவில் ( ஆனி 1, 2045 / 15-06-2014) புதுச்சேரி பட்ட மேற்படிப்பு மைய இணைப் பேராசிரியரான முனைவர் நா.இளங்கோ அவர்களுக்குப் பாவேந்தர் விருது வழங்கப்பட்டது. விருதளிப்பு மேனாள் நீதிபதி சேது.முருகபூபதி. உடன் பேராசிரியப் பெருமக்கள் மு.சாயபு மரைக்காயர், சா.நசீமாபானு.

மெய்வல்லுநர் போட்டி 2014

மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் சிசியாலாந்து (Sjælland) மாநிலத்திற்கான மெய்வல்லுநர் போட்டி ஆனி 1, 2045 / 15-06-2014 அன்று நடைபெற்றது.இப்போட்டி ஆல்பக்கு (Holbæk) நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் சிசியாலாந்து (Sjælland) மாநிலத்தைச்சேர்ந்த மாணவர்கள் பங்குபெற்றனர். இப்போட்டிகள் தென்மார்க்கு கொடியேற்றல், தமிழீழத் தேசியக் கொடியேற்றல், அகவணக்கம், ஒளிச்சுடரேற்றல், மாணவர்களின்அணிவகுப்பு போன்றவற்றுடன் தொடங்கின. மாணவர்கள் ஓட்டம், தடைஓட்டம், பழம்பொறுக்கல், படம்பொருத்துதல், சமநிலைஓட்டம், கயிறடித்தல், குண்டெறிதல், நீளம் பாய்தல் போன்ற விளையாட்டுகளை மிகவும் ஆர்வத்துடன்விளையாடினர். இவ்விளையாட்டுகளை விளையாடிய அனைத்து வீரர்களுக்கும்வீராங்கனைகளுக்கும் வெற்றிப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவீரர்களும்…