(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 45 : நாவலர் ஆறுதல் உரை – தொடர்ச்சி)

பூங்கொடி
நாவலரின் முன்னை நிகழ்ச்சி

 யான்புரி அலுவலில் ஏன்விலக் குற்றேன்?

மீன்புலி கயலால் மேம்படு தமிழக
விடுதலை குறித்து விளிம்பினேன்; தமிழ்மொழி 50
கெடுதலை இன்றிக் கிளந்தெழப் புகன்றேன்,
இவையே யான்செய் தவறென இயம்பி,
நவைஎனப் பழிஎன நாணார் விலக்கினர்;

நாவலர் ஊக்கமூட்டல்

 மதுப்பூங் குழலி! `மாநிலத் தித்துயர்  
 பொதுப்பணி புரிவோர்க்குப் புதுவ தன்றே!   55
 விதுப்புறேல் நின்பணி வீறுற் றோங்கும்'

என்றவர் ஊக்கினர்; இவ்வுரை கேட்டாள்;
`நன்றுநன் றைய! நான்அய ரேன்இப்
பணியே உயிராப் பாரில் கொண்டுளேன்;

உலகியல் நிலைமை

 உலக மாந்தர் நிலைதான் என்னே! 60
 நிலையிலாக் கொள்கை, நேர்மை இன்மை

கலையெனக் கொண்டனர்; கருதின் ஒருநாள்
பெரியார் அறிஞர் என்றெலாம் பேசுவர்;
மறுநாள் மாறி `மதியே இல்லார்,
சிறியார்’ எனப்பழி செப்புவர் அந்தோ! 65

தொண்டர்தம் பெருமை

 நல்லன செயலே நாளும் ஆற்றும்

வல்லமை பூண்டு வழுவிலாக் குறள்நெறி
பரப்பிக் கடவுட் பள்ளியில் பைந்தமிழ்

சிறக்கப் பணிபுரி சீரியோர் மலையுறை

+++

 கிளர்ந்தெழ - வளர, நவை - குற்றம், புதுவது - புதியது, நாணார் - நாணம் இலராய், விதுப்புறேல் - அஞ்சாதே.   

+++
(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி