1744 இல் எழுதப்பெற்ற “London Bridge Is Falling Down” என்றொரு மழலைப் பாடலை அனைவரும் அறிவர். “வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்” என்னும் கலைஞரின் கருத்தை இப்பாடல் முறையில் பொருத்திப் பாருங்கள். பின்வரும் இனிய பாடல் கிடைக்கும்.

வேண்டிய மட்டும் வீழட்டும்! – மழை

வீழட்டும் வீழட்டும் – பாரில்

வேண்டிய மட்டும் வீழட்டும்!

             மழை

                                                எங்கெங்கும் வீழட்டும்!

                        நீயும் நானும் வீழ்ந்தாலும் – தமிழ்

                        வாழட்டும்! வாழட்டும்! – பாரில்

                        நீயும் நானும் வீழ்ந்தாலும் – தமிழ்

                        என்றென்றும் வாழட்டும்!

                                                தமிழ்

என்றென்றும் வாழட்டும்!

Rain Rain go away” என மழையை விரட்டாமல், பெய்தும் பெய்யாமலும் கெடுக்காமல், நமக்கு வேண்டிய அளவு மட்டும் மழை பொழிய வேண்டுவது பொருத்தமானதுதானே!