சங்கம் 4 : வெள்ளப்பேரிடர்தடுப்பு உரையரங்கம்
அறிவு மறுமலர்ச்சியே சமூக – அரசியல் மாற்றத்திற்கான விசை, தமிழர் அறிவு மறுமலர்ச்சிப் பேரியக்கம் தை 20, 2047 முதல் தை 24, 2047 வரை பிப்பிரவரி 03, 2016 முதல் பிப்.07 2016 வரை இராசரத்தினம் கலையரங்கம், சென்னை
என்று தமிழ்..? – புதுவைத் தமிழ்நெஞ்சன்
இந்தியினை எதிர்க்கின்றோம் அறுபதாண்டாய் என்கின்றீர் ஏற்றமென்ன தமிழுக்குச் செய்துவிட்டீர்? வந்த இந்தி ஆங்கிலத்தால் சொந்தத் தமிழ் தானழியும் வடுநீக்க வழியென்ன கண்டு விட்டீர்? எந்த மொழி வளமளிக்கும் என்றெண்ணிப் படிக்கின்றீர் எம்தமிழை அதனாலே அழித்து விட்டீர் செந்தமிழைக் காப்பதற்குப் பிறமொழிகள் பிணிநீக்கிச் செந்தமிழில் கல்வியினைக் கற்கவேண்டும் எதிர்க்கின்றோம் இந்தியினை என்றுசொன்னால் இந்நாள்மட்டும் எம்தமிழை மீட்பதற்கு என்ன செய்தீர்? எதிர்ப்பதொன்றே கொள்கையாக எண்ணாமல் இன்பத் தமிழ் எம்நாட்டில் விளைவதற்கு வழியும் செய்வீர்! கதிரொளியால் மறைந்தோடும் காலைப்பனி போலயிங்குக் கனித்தமிழில் கற்றாலே கசப்பு மாறும் கதிர்மணியை நிலமேற்கும்…
மூச்சே நம் மொழி! – மின்னூர் சீனிவாசன்
குழல்து ளைகளில் மேவும் செம்மொழிகுயில் குரலின் நெடிலிசை கூவும் செம்மொழி! மழலை மொழிக்கிளி பேசும் செம்மொழிமுடி மன்னர் மக்களோ டுயர்ந்த நம்மொழி! தாயாம் இயற்கையே தந்த செம்மொழிஇது தன்னோர் யானைவெண் தந்தச் செம்மொழி! ஓயாக் கடலொலி இழிழாம் எண்ணுவீர்நாம் உணர்ந்து வளர்த்தது தமிழாம் எண்ணுவீர்! முத்தமிழ்க்கலை யறிந்த செம்மொழிசுடர் முத்து அமிழ்கடல் செறிந்த நம்மொழி! வித்தாம் அறிவியல் போற்றும் செம்மொழிபுகழ் விரியும் விசும்புடைக் காற்றும் செம்மொழி! கண்ணோர் திருக்குறள் யாத்த செம்மொழி – சிலம்புக் கலையின் களஞ்சியம் படைத்த செம்மொழி! நண்ணும் மானுட வெற்றிச்செம்மொழி…
நிறை இலக்கிய வட்டத்தின் ஐந்தாம் ஆண்டு கம்பர் விழா
கவிமாமணி இளையவன் ஐதராபாதில் பல ஆண்டுகளாக ‘நிறை இலக்கிய வட்டம்’ நடத்தி வருகிறார். இளையவன் கையால் தொடப்பட்டு வளரும் இளம் கவிஞர்கள், பேச்சாளர்கள் மிகப்பலர். இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் நானும் இருக்கிறேன். என்னுடைய 17ஆவது வயதில் பாரதி கலைக்கழகத்தில் நான் கவிதை படிக்கக் காரணமாக இருந்தவர் கவிமாமணி இளையவன். இம்முறை வரும் ஃபிப்ரவரி 7ம் தேதி ஐந்தாவது ஆண்டு கம்பர் விழாவை நிறை அமைப்பு நடத்துகிறது. முழுநாள் விழா. அழைப்பிதழை இணைத்திருக்கிறேன். நாளின் இறுதி நிகழ்ச்சியாகப் பட்டிமண்டபமொன்று நடைபெறுகிறது. ‘கம்ப காவிய மேன்மைக்குப்…
இலக்கிய வீதி : மறுவாசிப்பில் விக்கிரமன்
அன்புடையீர் வணக்கம்.. இலக்கியவீதியின், இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில், இந்த ஆண்டின் முதல் நிகழ்வாக தை 19, 2047 / 02-02-2016 அன்று மறுவாசிப்பில் விக்கிரமன் உறவும் நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்! என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 18: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 17: தொடர்ச்சி) 18 தேர்தல் என்றால் தேடி ஓடுவர். அனைவரும் மயங்கும்படி வாக்குறுதிகளை அள்ளி வீசுவர். இடிந்த கோயிலை எழுப்புவேன் என்று சொல்வர். காலில் விழுந்து வணங்குவர். இரவு பகல் பாராது ஓயாமல் உழைப்பர். உள்ள பொருளை எல்லாம் இழப்பர். உழைப்போர் மகிழ ஒன்றும் ஈயார். தம்முடைய பெயர் விளம்பரம் ஆக வேண்டும் என்பதற்காக வேண்டுவன எல்லாம் செய்வர். வசதியற்றுத் துன்புறும் ஏழை மாணவர்க்கு வேண்டும் உதவியைச் செய்ய விழையார். இதனை, ‘ தேர்தல் என்றால்…
மறைமலையடிகளாரின் பன்முகப்பார்வை – திறனாய்வு
தை 19, 2047 / பிப்.02, 2016
அண்ணா! – இனியொரு நாள் நீ வந்தால் ….: சரசுவதி பாசுகரன்
அண்ணா! – இனியொரு நாள் நீ வந்தால் …..….. இனியொருநாள் நீ வந்தால் இதயநிறை பக்தி யினால் மனித குலம் முழுவதுமே மண்டியிடும் உன் முன்னால் தனி மனித மானத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு முனிவன் என நீநின்று முடிபான வழி சொன்னாய் ! மீண்டும் இங்கு நீ வந்தால் மீண்டு வரும் நல்வாழ்வு ; வேண்டுகின்ற நல மனைத்தும் வேகமுறப் பல்கி விடும் ; மூண்டு பெருகி நிற்கும் மூடப் பழக்க மெலாம் பூண்டோடு அழிந்து பின்னர் பூத்து வரும் நல்லுலகு…
சட்டப்பஞ்சாயத்து, திருச்சிராப்பள்ளி
தை 24, 2047 / பிப்.07, 2016 காலை 9.30 – பிற்பகல் 1.30
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு, கொளத்தூர்
தை 15, 2047 / சனவரி 29, 2016
முகைதீன் நிசார் அன்வரின் ‘காதல் சூழல்’ – சிறுகதைநூல் வெளியீடு
மாசி 01, 2047 / பிப்.13, 2016 சிங்கப்பூர்
இலக்கு தவறிய மொழிப்போர் 50 மாநாடு – இலக்குவனார் திருவள்ளுவன்
தடம் மாறிய தமிழ்த்தேசியப் பேரியக்கம் 1938 மொழிப்போர் என்பது அறிஞர்கள், தலைவர்களின் பெரும்பங்கும் ஆங்காங்கே தொண்டர்களின் பங்கும் கொண்டதாக இருந்தது. ஆனால், 1965 மொழிப்போர் என்பது உள்நாட்டுப்போருக்கு இணையான மக்கள் போராக இருந்தது. கட்சி வேறுபாடின்றி நாடு முழுவதும் மாணாக்கர்கள் திரண்டு நடத்திய இப்போரால் காவல் துறையாலும் பேராயக்கட்சியாகிய காங்கிரசுக்கட்சியினராலும் தாக்குதலுக்கு உள்ளான மாணாக்கர்களின் பெற்றோர்களே களத்தில் இறங்கியதால் மக்கள் போரானது. இதனால் தமிழ்நாட்டிலிருந்து அடித்து விரட்டப்பட்ட பேராயக்கட்சி 50 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றுவரை ஆட்சிக்கட்டிலில் ஏற இயலவில்லை. ஆனால்,…