வத்தலக்குண்டு நகரில் கலை இலக்கிய மாலை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் கலை இலக்கிய மாலை   திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு நகரில் வானொலித்திடலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்கம் சார்பாகக் கலை இலக்கிய மாலைமார்கழி 5, 2045 / 20.12.2014 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில் கருத்தரங்கம், ஊரகக் கலைகளான தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், பரம்பரைக் கலையான கோட்டைப்பட்டி தேவராட்டம், நையாண்டி மேளம், பள்ளி மாணவ, மாணாக்கியர்களின் கலைநிகழ்ச்சிகள் முதலானவை நடைபெற்றன.   பேராசிரியர் தண்டபாணி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.   திண்டுக்கல்…

‘சுயஉதவிக்குழு’ என்ற பெயரில் கந்துவட்டி

‘சுயஉதவிக்குழு’ என்ற பெயரில் கந்துவட்டி- காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட வேண்டும் தேவதானப்பட்டிப் பகுதியில் கந்துவட்டி தொடர்பான புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். தேவதானப்பட்டிப் பகுதியில் ஆண்கள் தன்னுதவிக்குழு, பெண்கள் தன்னுதவிக்குழு என்ற பெயரில் அரசின் ஏற்பு   பெறாமல் 10 முதல் 20பேர்வரை சேர்ந்து பணத்தைச் சேர்த்து வட்டிக்கு விடுகின்றனர். இவ்வாறு குழுக்களாகச் சேர்ந்து பணம் கட்டுபவர்களுக்குப் பணம் தேவைப்பட்டால் அரசின் விதிமுறையை மீறி 100க்கு 5 % முதல் 10 % வரை வட்டியை முதலில்…

முன்னாள் முதல்வர் எம்(ஞ்)சியார் நினைவு நாள்

முன்னாள் முதல்வர் எம்(ஞ்)சியார் நினைவு நாள் தேவதானப்பட்டியில் முன்னாள் முதல்வர் மக்கள்திலகம் எம்ஞ்சியார் நினைவு நாளையொட்டி அவரது தீவிர நம்பிக்கையாளர்கள் மொட்டையடித்து அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர்.   தேவதானப்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஞ்சியார் சிலை உள்ளது. இச்சிலைக்குப் பெரியகுளம் ஒன்றியப் பெருந்தலைவரும், ஒன்றியச் செயலாளருமான செல்லமுத்து மாலை அணிவித்தார். அப்போது அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை மொட்டையடித்துக்கொண்டனர்.   மாலை அணிவித்தலின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.பெரியவீரன், தேவதானப்பட்டி பேரூர் செயலாளர் சுரேசு, தேவதானப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் பி.ஆர்….

மனங்கவர் ‘மாங்கனி’ தந்த கண்ணதாசன்பகுதி 4 – இலக்குவனார் திருவள்ளுவன்

(மார்கழி 6, 2045 / திசம்பர் 21,2014 தொடர்ச்சி)   மனத்திலமர்ந்த மாங்கனி நாட்டிய நங்கை மாங்கனியைச் சேரன் அவையில் நுழைவதைக் கூறி அறிமுகப்படுத்துகிறார். அப்பொழுது அனைவர் சிந்தையிலும் அவளே நிறைந்துள்ளாள் என்பதை, மின்வெட்டுக் கண்கட்ட மேவி னாற்போல் மென்பட்டுப் பூங்குழலி பூமி தொட்டுப் பொன்கட்டிச் சிலைபோல ஊர்ந்து வந்தாள்; புத்தியெல்லாம் அவளானார் அவையி ருந்தோர்! (மாங்கனி : 2. சேரன் அவையில் .. 4: 1-4) என விளக்குகிறார். பெண்கள் தங்கள் பார்வையால் ஆண்களைத் தாக்கி வீழ்த்துவதால் அவர்களின் கூரிய விழிகளை வேல்விழி…

மனநிலை பாதிக்கப்படும் மாணவர்கள்

மனநிலை பாதிக்கப்படும் மாணவர்கள்   தேவதானப்பட்டிப் பகுதியில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளினால் மாணவர்கள் மனநிலை பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.   தேவதானப்பட்டிப் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இயங்கும்; அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கவேண்டும் என்றும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களைக் கசக்கிப்பிழிகின்றனர். இவ்வாறு தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களைக் கசக்கிப்பிழிவதன் மூலம் மாநில அளவில் மதிப்பெண் எடுப்பதோடு தங்கள் பள்ளியில் அதிகமான மாணவர்கள் சேருவார்கள் என்று…

கறவைமாட்டுக்கடன் திரும்பப்பெற முடியாமல் வங்கி அதிகாரிகள் தவிப்பு

தேவதானப்பட்டிப் பகுதில் கறவைமாட்டுக்கடன் திரும்பப்பெற முடியாமல் வங்கி அதிகாரிகள் தவிப்பு தேவதானப்பட்டிப் பகுதியில் வழங்கப்பட்ட கறவைமாட்டுக்கடனைத் திரும்பப் பெற முடியாமல் வங்கி அதிகாரிகள் திணறிவருகிறார்கள். தேசியமயமாக்கப்பட்ட பாரதஅரசு வங்கிகளில் கறவைமாட்டுக்கடன் வழங்கப்பட்டது. தேவதானப்பட்டி, செயமங்கலம், குள்ளப்புரம் முதலான இடங்களில் உள்ள பாரத அரசு வங்கிக்கிளைகளில் கறவைமாட்டுக்கடன் வழங்கப்பட்டது. ஒவ்வொரு வங்கியிலும் தொண்டுநிறுவனங்களின் மேற்பார்வையில்தான் கடன் வழங்கப்பட்டது. அப்போது தொண்டுநிறுவனத்தினரும் வங்கி அதிகாரிகளும் இணைந்து புனையாளாக (பினாமியாக ஆட்களை) வைத்துப் பல கோடி உரூபாய் கடன் வழங்கினார்கள். உணவுப்பொருள் அட்டையின் படி, கடவுச்சீட்டு அளவுப்படம் ஆகியவற்றை…

திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 3

 (மார்கழி 6, 2045 /  திசம்பர் 21,2014 தொடர்ச்சி) 10.0. திருவள்ளுவமாலை அகச்சான்றுகள்            திருவள்ளுவமாலையில் சொல்நுட்பங்கள் நிறைந்து உறையினும், விரிவுஅஞ்சி முன்குறிப்பிட்டவாறு அறுவர்பாடல் சான்றுகளை மட்டுமே இங்கு நுண்ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறேன். எஞ்சியவற்றை நுண்ஆய்வு மேற்கொள்ளப் பிறரை இவ்ஆய்வுக்கட்டுரை தூண்டுமாயின், அத்தூண்டுதல் என்னை மேலும் ஆய்வுக்கட்டுரை எழுதத்தூண்டுமென நம்புகின்றேன்., 10.1. அருவப்பாடல்— 01 [அசரீரிப்பாடல்]      [உருவம்இல்லாததெய்வஒலி]  சொல்தொடர்: தெய்வத்திருவள்ளுவர் திருவள்ளுவமாலையின் முதற்பாடலில் வரும் தெய்வத்திருவள்ளுவர் என்னும் சொல்தொடர், நுட்பம்நிறைந்தது. தெய்வஆற்றல் மிக்கவர் திருவள்ளுவர் எனப் பொருளால் சிறந்தது. நுட்பங்கள்.      திருக்குறள் உலகுதழீஇய…

தமிழ் இலக்கியக் கலைவிழா

  உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை  உலகத் தமிழ் மையம்,  இலண்டன் மலேசியத் தமிழ்ச்சங்கம்  மலேசிய இந்தியப் பண்பாட்டுக் குழு தமிழ் இலக்கியக்கலைவிழா    மார்கழி 10, 2014 / திச.25,2014 சென்னை -28  

உழைக்கும் மாற்றுத்திறனாளி சேகரனுக்கு உதவி தேவை.

தன்னம்பிக்கையுடன் தொழில் செய்யும் மாற்றுத்திறனாளி திண்டுக்கல் மாவட்டம், கே.சிங்காரக்கோட்டையைச்சேர்ந்தவர் சேகரன். இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இரண்டு கால்களும் செயல் இழந்துள்ள. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இக்குழந்தைகளைக் கெங்குவார்பட்டியில் உள்ள  ஏதிலியர் இல்லத்தில் படிக்க வைத்துள்ளார். இவர் கால்நடைகளான குதிரை,  மாடுகளுக்குக் குளம்பாணி(இலாடம்) அடிக்கும் தொழில் செய்து வருகின்றார்.  இத்தொழிலின் பொருட்டு இவர் திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்குச் சென்று தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.   கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் இயந்திரங்களின் பயன்பாடு அரிதாக இருந்தது. அப்பொழுது  வேளாண்மைக்குக் கால்நடைகள் பயன்படுத்தப்பட்டன. நிலத்தை உழுதல்,…

“செல்லமே மாற்றத்தை உருவாக்குவோம்” விருதுகள் வழங்கும் விழா

‘செல்லமே’ மாத இதழ் சார்பில் 2014 ஆம் ஆண்டிற்கான “செல்லமே மாற்றத்தை உருவாக்குவோம்” விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.   தமிழில் பெற்றோருக்காக வெளிவருகின்ற வார இதழான ‘செல்லமே’ தன்னுடைய முதலாவது பிறந்தநாளினை முன்னிட்டுத் தமிழ்நாட்டில் பல்வேறு திறமைகளைக்கொண்டு, மக்களுக்காகத் தங்களை ஒப்படைத்துக்கொண்ட, மற்றவர்களால் அறியப்படாத 10 அருவினையாளர் (சாதனையாளர்)களுக்கு விருது வழங்கும் விழா சென்னை, கந்தன் சாவடியில் நடைபெற்றது.  இவ்விழாவில், விருது வழங்கப்பட்ட அருவினையாளர்களில் 12 அகவை யோகேசு என்ற சிறுவனும் அடக்கம். இவர் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் மின்னணுத்துடைப்பான் ஒன்றினைக்…

நரேந்திரர்(மோடி) இந்து வெறியர் அல்லர்!

நரேந்திரர்(மோடி) இந்து வெறியர் அல்லர்!   நரேந்திர(மோடி)யையும் அவர் சார்ந்த இராசுட்டிரிய சேவா சங்கம் என்னும் அமைப்பையும் இந்து   வெறி பிடித்தவர் என்றும் இந்து வெறி அமைப்பு என்றும் பலரும் கூறி வருகிறோம். உண்மையில் அவரோ அவர் சார்ந்த அமைப்போ இந்து சமய வளர்ச்சிக்கான குறியீடு அல்ல. இத் துணைக் கண்டத்தில் எவ்வாறு பல்வேறு இன மக்களையும் இந்தியர் என அழைக்கிறார்களோ அதுபோல்தான் பல சமயங்களின் கூட்டே இந்து என்னும் சமயமும். எவ்வாறு, அரசியல் அடிப்படையில் நாம் இந்தியர் எனப்பட்டாலும் வரலாற்று அடிப்படையில் இந்தியர்…