வெல்வீர் இனி… – புதுவைத் தமிழ்நெஞ்சன்

  மதுவிலக்கு மாணவப் போராளிகள் நந்தினி, சோதிமணி….. தமிழகத்தைச் சீரழிக்கும் மதுக்கடையை மூடு – அன்றே தலைநிமிர்ந்து தன்மானத்தோடு நிற்கும் தமிழ்நாடு மதுக்கடையை மூடாவிட்டால் நாட்டை விட்டே ஓடு – நீ மக்களுக்குச் செய்கின்றாய் இன்றுவரை பெருங்கேடு மது அருந்துவது உடல்நலத்திற்குத் தீங்கானது – என்று விளம்பரம் செய்து மதுவிற்பது கேடானது தமிழினத்தைச் சிந்திக்காது செய்வதற்கே மதுபோதை- அடடா திராவிடம் காட்டுகின்றது அறிவழிக்கும் தீயபாதை சிந்தனைக்கு வைக்கின்றார் மதுவாலே வேட்டு – தமிழா சிந்தித்து தெளிந்து போடடா கடைக்குப் பூட்டு மானமுள்ள தமிழனென்று உலகிற்குக்…

நடராசர் கோயில் தீர்ப்புக்கு அரசின் பொறுப்பின்மையே காரணம் : கருணாநிதி

   சிதம்பர நடராசர் கோயில் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு தமிழக அரசின் கவனமின்மையே  காரணம் என திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பரம் நடராசர் கோயிலைப் பொது தீட்சிதர்களே நிருவகிக்கலாம் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்தக் கோவில் நிருவாகத்தைத் தமிழக அரசு ஏற்று நடத்தலாம் என்று சென்னை உயர் நீதி மன்றம் ஏற்கெனவே இசைவு அளித்துப் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதி மன்றம் தற்போது  நீக்கியுள்ளது.   அ.தி.மு.க. அரசு…

தொல்காப்பிய விளக்கம் – 8 (எழுத்ததிகாரம்)

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 36. நெட்டெழுத்து இம்பரும் தொடர்மொழி ஈற்றும் குற்றியலுகரம் வல்லாறு ஊர்ந்தே. நெட்டெழுத்து  இம்பரும் =  நெட்டெழுத்தினது பின்னும், தொடர்மொழி ஈற்றும் = இரண்டு எழுத்துகளுக்கு மேற்பட்ட எழுத்துகளால் ஆன சொல்லின் இறுதியிலும், குற்றியலுகரம் = க குறைந்த ஒலியையுடைய உகரம்(ஒரு மாத்திரையில் குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கும் உகரம்), வல்ஆறு ஊர்ந்து = வல்வலின மெய்களாம் க், ச், ட், த், ப், ற் என்பனவற்றின்மீது பொருந்தி வரும். குற்றியலுகரம், மொழியிறுதியில் நிற்கும் வல்லின மெய்களைப் பொருந்தி வரும். இரண்டு…

அழகு மங்கை

 –  அன்பு    இன்று மாலை  தெரிந்து விடும், யாருக்கு விருது என்று? தனக்குத்தான் கிடைக்கும் எனச் சிலரும், தனக்குக் கிடைக்குமா எனச் சிலரும், அவளுக்குக் கிடைக்கும், இவளுக்குக் கிடைக்கும் என்பதுபோல் சிலரும்,  இன்னாருக்குக் கிடைக்கக்கூடாது எனச் சிலருமாக எண்ணிக் கொண்டும் பேசிக் கொண்டும்  இருந்தனர். என்ன விருது என்று எண்ணுகிறீர்களா? ‘அழகு மங்கை’ விருது. உலக அழகி, நகர அழகி என்றெல்லாம் வழங்குவதுபோல், மங்கையர்க்கரசி பள்ளியில்   அழகியைத் தேர்ந்தெடுத்து, அழகி விருது வழங்குகிறார்கள். முதலில் ‘செல்வி மங்கை’ எனப் பட்டம் வழங்குவதாகத்தான் முடிவெடுத்தார்கள்….

இலங்கை அமைச்சர் பெரிசு தில்லி வர இசைவளிக்கக் கூடாது :இராமதாசு

  இனப்படுகொலை தொடர்பான உசாவல் நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் இந்தியா வரும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்  பெரிசு, தில்லி வர இடம்தரக்கூடாது என்று பாமக நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,    இலங்கையில் ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழர்களை இனப்படுகொலை செய்த இராசபக்சேவும் அவரது கூட்டாளிகளும் தண்டிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.    இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து கடந்த ஆண்டு ஆகசுட்டு மாதம் நேரில் விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் அவரது…

பிரணாப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தோர் மீதான கொடுந்தாக்குதலை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம்!

2009-2009இல், தமிழீழத்தில் இனப்படுகொலைப் போர் நடந்து கொண்டிருந்த போது, இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றி, அப்போரை சிங்களத்துடன் இணைந்து வழி நடத்தியப் போர்க்குற்றவாளி பிரணாப்பு.  இன்று இந்தியக் குடியரசுத் தலைவராக உள்ள அவர், திசம்பர் 20 அன்று, சென்னை இலயோலாக் கல்லூரியில் நடைபெறும் ஒரு விழாவிற்கு வந்தார். அப்பொழுது அவருக்குக் கருப்புக் கொடி காட்ட முயன்றதாகத், தமிழின உணர்வாளர்கள் மீதும், மாணாக்கர்கள் மீதும் தமிழகக் காவல்துறை கொடுந்தாக்குதலை நடத்தியது. திசம்பர் 19 ஆம் நாள், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், இன உணர்வாளருமான திரு….

திருக்குறளும் புதிய பார்வைகளும் – பேரா.மறைமலை பொழிவு

      7/1/14 செவ்வாய் மாலை சென்னை ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தில் “திருக்குறளும் புதிய பார்வைகளும்” என்னும் தலைப்பில் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் பொழிவு நிகழ்ந்தது. துறைமுகப்பொறுப்புக் கழக மேனாள் அலுவலர் புலவர் வீரமணி தலைமை தாங்கினார். அமெரிக்காவிலிருந்து வந்திருந்த முனைவர்.பிரான்சிசு சவரிமுத்து சிறப்பு விருந்தினராகப் பாராட்டப்பட்டார். வரவேற்புரை  பட்டிமன்றச் செயலர் பொறி. பக்தவத்சலம்               தலைமையுரை புலவர் வீரமணி

இயற்கை எழில் !

வான்மிதந்து  சென்றடையும்  கதிரவனைத் தான்தழுவி  ஒளிஉமிழும்   தண்நிலவில் கண்நிறைந்த  காட்சிகாண  கடல்வெளியில் மண்மீது  படுத்தேன்என்  கண்முன்னே தொங்கிச்  சுழலும்இப்   பூமிப்பந்தில் தங்கிவாழும்  மக்கள்குலம்   தழைக்க பொங்கிவழியும்   அழகுடன்நம்  பூமித்தாய் இங்கிருக்கும்  மக்களுக்கே  படைத்தாள் குறிஞ்சிமுல்லை  குறையாத  மருதத்துடன்நாம் அறிந்த  நெய்தல்பாலை  எனப் படைத்தாளே ! ஐவகைநிலத்தை   அழகுடன்    பார்த்தேன் மூவகைத்   தமிழுடன்   முத்திரைபதித்து பாவகையுடன்  பைந்தமிழ்ப்  புலவர்கள் பாடக்கேட்டேன்  இயற்கை  எழில்பற்றி ! எங்கு   பார்க்கினும்   மக்களெல்லாம் பொங்கும்  மகிழ்ச்சியால்  பூரித்ததையும் வறுமையைப்  புறந்தள்ளி   வாழும் வளமையும்  கண்டேன்  நாட்டில் ! இயற்கை    அன்னை …

மக்கள் குரல்கொடுத்தால்தான் பேரறிவாளன் விடுதலை ஆவான்! – தாயார் அற்புதம்

பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மையார் தூத்துக்குடியில் 07.01.14 திங்கள்கிழமை அன்று வந்திருந்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: “இராசீவு கொலை வழக்கில் என் மகன் பேரறிவாளனுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்த வழக்கின் உசாவல் அலுவலர் அதிகாரி தியாகராசன் தற்போது உண்மையை வெளியிட்டுள்ளார். அதன்மூலம், நாங்கள் இத்தனைக் காலம் கூறி வந்தது உண்மைதான் என்பதை மக்கள் புரிந்துள்ளனர்.”  “சிறையில் இருந்து என் மகன் மிக விரைவில் விடுதலையாகி வெளியே வருவான். அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன்.  வழக்கு அதிகாரி உண்மையை வெளியிட்ட உடனே என் மகன் விடுதலை…

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 7

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)   311. அளவைகளும் எடைகளும்  பல்வேறு அளவைகளும், நிறைகளும் பயன்பாட்டில் கண்டயறிப்பட்டுள்ளன.  பயன்பாட்டின் போது பெயர்களின்  ஒலிகள் மாறுவது தொடர்பான விதிகளை அவர் ஒழுங்குபடுத்தியுள்ளார். (எழுத்து: நூற்பாக்கள் 164, 165, 166, 167, 168, 169, 171, 239, 240) 171 ஆம் நூற்பாவிலிருந்து அளவைகள், நிறைகளின் பெயர்கள் க, ச, த, ப, ந, ம, வ, அ, உ ஆகிய தொடக்க எழுத்துகளைக் கொண்டு உள்ளமை அறியலாம். உரையாசிரியர் நச்சினார்க்கினியார் பின்வருமாறு அவற்றின் பெயர்களைக் குறிப்பிடுகின்றார். அளவைகள்:…

புத்தாண்டு வாழ்த்தும் வேண்டுகோள்களும்

  திருவள்ளுவர் ஆண்டு 2045, நடைமுறை ஆண்டு 2014 ஆகியன பிறக்க உள்ளன. அல்லன நீங்கி நல்லன நடைபெறவும் எண்ணியன எய்தவும் வரும்ஆண்டு துணை நிற்க வாழ்த்துகள்.   தமிழ் ஈழம்  தனியரசாகித் திறமையும் வலிமையும் மிக்க ஈழத்தமிழர்கள், துயரம் மறந்து மகிழ்ச்சிக்கடலில் திளைக்க வாழ்த்துகள்!   நாள் குறிக்கப் பெறும் அனைத்து இடங்களிலும் திருவள்ளுவர் ஆண்டைக் குறிக்க வேண்டுகின்றேன். அரசாணைகள், தமிழ் இலக்கிய இதழ்கள் தவிர, வேறு இடங்களில் திருவள்ளுவர் ஆண்டு குறிக்கப் பெறுவதில்லை. தமிழ்த்துறைகளில் இருப்பவர்களின் அழைப்பிதழ்களிலும் திருவள்ளுவர் ஆண்டைப் பார்க்க…

பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் கௌதமன் காலமானார்

முன்னாள் முதல்வர்  பேரறிஞர் அண்ணா(துரை) அவர்களின்  வளர்ப்பு மகன் கா.ந.அ. கௌதமன் சென்னையில் காலமானார். அவருக்கு  அகவை 67.  இவரது மனைவி துளசி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால், சென்னை செனாய் நகரில் உள்ள மகள் சரிதா வீட்டில் கௌதமன் வசித்து வந்தார். அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை அவரது உடல்நிலை மோசமானது. இந்நிலையில், இன்று 29.12.13 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கௌதமன் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். செனாய் நகர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த கௌதமன் உடலுக்குத்…