காமாட்சியம்மன் கோவிலில் மின்திருட்டு

தேவதானப்பட்டி அருள்மிகு காமாட்சியம்மன்கோவிலில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் திருட்டு! செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க இறையன்பர்கள் வலியுறுத்தல்    தேவதானப்பட்டி அருகே உள்ள அருள்மிகு காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதற்குத் தனியாகச் செயல் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். தேவதானப்பட்டி காமாட்சியம்மன்கோவிலில் தற்பொழுது திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவில் மின்அலங்காரம், கோயிலைச்சுற்றியுள்ள கடைகளுக்கு மின்சாரம் கொக்கி மூலம் திருடப்பட்டுள்ளது. இவ்வாறு 10க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் கொக்கி போட்டுதிருடப்படுகிறது. மேலும் இவ்வாறு திருடப்படும் மின்சாரத்தில் இருந்து…

மிதியூர்தி(ஆட்டோ) சங்கத்தினர் அடாவடித் தண்டல்

காவல்துறை அதிகாரிகள் பெயரைக்கூறி மிதியூர்தி(ஆட்டோ) சங்கத்தினர் அடாவடித் தண்டல்   தேவதானப்பட்டியில் காவல்துறை அதிகாரிகள் பெயரைக்கூறி மிதியூர்தி(ஆட்டோ) சங்கத்தினர் அடாவடியாகப் பணம் பெறுகின்றனர்.   தேவதானப்பட்டியில் அரிசிக்கடை, வைகை அணைப் பிரிவு, பேருந்துநிலையம் முதலான பகுதிகளில் மிதியூர்தி(ஆட்டோ) நிறுத்தங்கள் உள்ளன. இப்பகுதியைச்சுற்றிச் சிற்றூர்கள் உள்ளமையாலும், புகழ்பெற்ற அருள்மிகு காமாட்சியம்மன் கோவில் உள்ளதாலும் ஏராளமான வெளியூர்ப் பயணிகள் நாள்தோறும் வருகை புரிகின்றனர். உட்கிடை ஊர்களுக்கும், காமாட்சியம்மன் கோவிலுக்கும் போதிய பேருந்து வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மிதியூர்தி, பங்கீட்டு மிதியூர்திகளில் பயணம் செய்கின்றனர். இதில் போதிய…

தேவதானப்பட்டிப் பகுதியில் நீரின்றி வாடும் நெற்பயிர்கள்

  தேவதானப்பட்டிப் பகுதியில் அறுவடைநேரத்தில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன.   தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி, மருகால்பட்டி, இரெங்கநாதபுரம், எருமலைநாயக்கன்பட்டி முதலான பகுதிகளில் அறுவடை நேரத்தில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகிவருகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி பகுதிக்குச் செல்கின்ற 13ஆவது மடையிலிருந்து 18 வரை மஞ்சளாறு அணை திறக்கப்பட்டபோது தண்ணீர் செல்லவில்லை. இதற்குக் காரணம் இப்பகுதியில் புறவழிச்சாலை பணிநடந்து கொண்டிருந்தது. அப்போது புறவழிச்சாலைக்கு பணிநடப்பதால் அப்பகுதியில் உள்ள கால்வாய்களில் மண், மணல், கற்கள் அடைத்துத் தண்ணீர் செல்லாமல் நின்றுவிட்டது.  …

காப்புறுதி அளித்துத் தன் காப்பை இழந்தவர் – கதையல்ல உண்மை!

பிணைக்கையொப்பம் இடுவோர் விழிப்பாக இருங்கள்!   “பனை மரத்தில் பாதி தூரம் ஏறுவதும் பிணைக் கையெழுத்திடுவதும் ஒன்று” என்பது முதியோர் வாக்கு. “நுங்கு தின்றவன் ஓடிப்போய்விட்டான். மட்டையை நோண்டித் தின்றவன் அகப்பட்டுக்கொண்டான்” என்பது பழமொழி. அவ்வாறு பிணைக் கையெழுத்திட்டு ஓய்வூதியக்காலத்தில் நிம்மதியாகக் காலத்தை ஓட்டாமல் மிகுந்த மனஉளைச்சலடைந்து, பணத்தையும் இழந்து, மனநிம்மதியையும் கெடுத்துக்கொள்கிறார்கள் பலர்.   திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டியின் மகன் சடையாண்டி. இவர் அஞ்சல்துறையில் உதவி அஞ்சல் தலைவராகப் பணிபுரிந்துள்ளார். அஞ்சல் துறையில்   இராசராசன்(குசிலியம்பாறையில் உதவி அஞ்சல் தலைவர்) என்பவரும்…

திருவரங்கம்: அ.தி.மு.க.விற்கு ஆதரவு – ஓய்வு ஆசிரியர் சங்கங்கள் முடிவு

திருவரங்கம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஆதரவு ஓய்வு ஆசிரியர் சங்கங்கள் முடிவு   திருச்சியில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கு ஓய்வுஆசிரியர் சங்கங்கள் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். பள்ளி கல்வித்துறையில் மடிகணிணி முதற்கொண்ட 14 வகை சலுகைகளை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்கிய அதிமுக அரசிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டது. திருச்சியில் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிப் பணி ஓய்வு இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நல்லாசிரியர் ஏ.சி.சிவபாலு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத்;தலைவர் திருமலைச்சாமி,…

திருவரங்கம் இடைத்தேர்தலில் மாநில அம்மா பேரவை

 திருவரங்கம் இடைத்தேர்தலில் மாநில அம்மா பேரவை சார்பில் அம்மா அவர்களின் சாதனைகளை விளக்கித் துண்டறிக்கைகளைத் தேனி மாவட்டக் கழகச் செயலர் டி.டி.சிவக்குமார் வழங்கியபோது எடுத்த படம். அருகில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர்   ஆர்.பார்த்திபன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்ச்செல்வன், தேனி மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறைச் செயலர் ஓ.பி.இரவீந்திரநாத்து குமார், தேனிமாவட்ட அம்மா பேரவைச் செயலர் வரதன், மாவட்டத் துணைச் செயலர் முருக்கோடை இராமர், பெரியகுளம் ஒன்றியச் செயலர் செல்லமுத்து, அப்துல்கபார்கான் முதலான பலர் உள்ளனர்.   திருவரங்கம் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து…

திருவரங்கம் தொகுதியில் தேனி இளைஞர்கள்

    திருவரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து தேனி மாவட்ட இளைஞர்கள் – இளம்பெண்கள் பாசறையினர் பரப்புரை மேற்கொண்டனர்.     செயலர் ஓ.பி.இரவீந்திரநாத்து குமார், 4ஆவது தொகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்கு கேட்டபொழுது எடுத்த படம். அருகில் மாவட்டச் செயலர் டி.சிவக்குமார், தேனித் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர். பார்த்திபன், முன்னாள் மக்களவை உறுப்பினர் எசு.பி.எம்.சையதுகான், நகர்மன்றத் தலைவர்கள் தேனி முருகேசன், சின்னமனூர் சுரேசு முதலான பலர் உள்ளனர்.     தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி.உதயக்குமார் நாச்சிக்குறிச்சி ஊரில்…

மஞ்சளாறு அணை மீன் விற்பனையில் மோசடி

மஞ்சளாறு அணை மீன் விற்பனையில் மோசடி மீன்கள் கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றம்   தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையில் மீன் விற்பனையில் முறைகேடு நடைபெறுகிறது எனப்பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  மணிமுத்தாறு, ஆழியாறு முதலான இடங்களில் இருந்து மீன் குஞ்சுகள் பொதுப்பணித்துறை மூலம் வளர்க்கப்பட்டு அதன்பின்னர் மீன்வளத்துறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கட்லா, ரோகு, மிருகாளி, திலேபியா போன்ற மீன்வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. மீன்களைப் பிடிப்பதற்கு 22 பரிசல்கள் மஞ்சளாறு அணையில் விடப்பட்டுள்ளன. இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களில் பங்குத்தொகையாக மீன்பிடிப்பவர்களுக்கு ஒரு பங்கும், மீன்வளத்துறைக்கு…

எச்சரிக்கைப் பலகை அமைக்கப்படாததால் நேர்ச்சிப் பேரிடர்!

வைகை அணைப்பகுதிச் சாலையில் எச்சரிக்கைப் பலகை அமைக்கப்படாததால் நேர்ச்சி(விபத்து) ஏற்படும் பேரிடர்   தேவதானப்பட்டியிலிருந்து வைகை அணை வரை செல்லும் சாலையில் எச்சரிக்கைப் பலகை அமைக்கப்படாமல் வேலைகள் நடைபெறுவதால் நேர்ச்சிகள் நிகழும் பேரிடர் ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டியிலிருந்து செயமங்கலம், வைகை அணை, முதலக்கம்பட்டி பகுதிகளில் சாலைகள் வேலை பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டு வருகின்றன.   வைகை அணைப்பகுதியில் பாலங்கள் அமைக்கும் பணியும், எருமலைநாயக்கன்பட்டி, செயமங்கலம் பகுதியில் சாலையின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. இதனால் ஆங்காங்கே…

நூலகம் இல்லாத திட்டச்சேரிப் பேரூராட்சி

  நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சியில் நூலகம் இல்லாததால் அப்பகுதியில் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் படிப்பதற்காகத் தொலைவிடங்களில் உள்ள நூலகங்களுக்குச் சென்று படித்து வருகின்றனர்.   ஏறத்தாழ 10,000 மக்கள் தொகை கொண்ட திட்டச்சேரி பேரூராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நூலகம் இருந்தது. நூலகக் கட்டடம் பாழடைந்ததால் நூலகம் அப்புறப்படுத்தப்பட்டது. இப்பகுதி மக்கள் நூலகம் அமைக்கவேண்டும் எனவும் அதற்காக வருவாய்த்துறைக்குச் சொந்தமான நிலங்களைக் காண்பித்தும் இதுநாள் வரை நூலகம் கட்டப் பேரூராட்சி முன்வரவில்லை.   திட்டச்சேரிப் பேரூராட்சியில் உள்ள ஏராளமான கவிஞர்கள், இலக்கியவாதிகள்,…

ஊர்விலக்கம் – வைகை அனிசு

ஊர்விலக்கம்   தமிழகத்தில் சாதிவிலக்கம் அல்லது ஊர் விலக்கம் என்று சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் பழக்கம் பண்டைய காலத்திலிருந்து இன்று வரை இலைமறைகாயாக இருந்து வருகிறது. சாதிவிலக்கம் ஒவ்வொரு சமூகத்திலும் அல்லது ஒவ்வொரு சாதியிலும் அல்லது ஒவ்வொரு மதத்திலும் ஏதாவது ஒரு காரணத்திற்காக நடைபெறுகிறது. சாதிவிலக்கத்தால் பாதிப்படைந்தவர்கள் இன்றும் பல ஊர்களில் உள்ளனர். இவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டவர்களிடம் யாரும் பேசக்கூடாது வீட்டு வாசலைக் கூட மிதிக்க கூடாது தண்ணீர் வாங்கிக் குடிக்க கூடாது எவ்விதக் கொடுக்கல் வாங்கலும் வைத்துக்கொள்ளக் கூடாது எந்த விழாக்களிலும் பங்குபெறக்கூடாது…

1 9 10