சாதி வெறி எதிர்ப்புக் கண்டன ஆர்ப்பாட்டம் – சுப.வீ.

காதலுக்கு எதிரான சாதி வெறியை எதிர்த்துக்  கண்டன ஆர்ப்பாட்டம் சுப.வீரபாண்டியன் அறிக்கை   அண்மைக்காலமாக காதலுக்கு எதிரான சாதிய வெறி மிகுதியாகிக் கொண்டே போகிறது. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அணி திரட்டல்கள் நடைபெறுகின்றன. தங்கள் வீட்டுப் பெண்களைக் காதலிக்கும் இளைஞர்களைப் படுகொலை செய்வது கை, கால்களை வெட்டுவது போன்ற மனிதநேயமற்ற காட்டுவிலங்காண்டிக் காலச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தருமபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராசு, விழுப்புரம் செந்தில் என்று பட்டியல் நீள்வது வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியதாக உள்ளது.   இவைபோன்ற சாதிய வெறியாட்டங்களைக் கண்டித்து,…

ஞானாலயா கிருட்டிணமூர்த்தி 75 ஆவது பிறந்த நாள்

நண்பர்களே, நம் பாரதத் திருநாட்டின் விடுதலைத் திருநாளில் பிறந்தவர்தான், ஞானாலயா கிருட்டிணமூர்த்தி அவர்கள்.   எதிர்வரும் ஆடி 30, 2046 / 15.8.2015, இவரது 75 ஆவது பிறந்த நாள் ஆகும். இவரது பிறந்த நாளினை, பவள விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடிட, கவிஞர் முத்து நிலவன் அவர்களும், மற்ற தமிழன்பர்களும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்கள்.   மகத்தான மனிதருக்கு, ஓர் சிறப்பான விழா! உன்னத மனிதருக்கு ஓர் உயரிய விழா! நாமும் பங்கெடுப்போமா நண்பர்களே,   பவள விழா சிறக்க வாருங்கள், வாருங்கள்…