சிலம்பாறு – வே.முத்துவிசயன்

  ஆறு, சிற்றாறு, காட்டாறு, கிளையாறு, துணையாறு என்பதெல்லாம் என்ன? மதுரையில் எத்தனை ஆறுகள் உள்ளன? காடு அழிப்பினாலும், மணல் கொள்ளையாலும், தண்ணீர் வணிகத்தாலும் நம் ஆறுகள் பாலைவனமாக்கபடுகின்றன. நாம் பல ஆறுகளை மக்களுக்கு இன்னும் வெளிச்சபடுத்தவே இல்லை. மதுரையில் 10க்கும் மேற்பட்ட ஆறுகள் உள்ளமை நமக்கு தெரியுமா? வாருங்கள் அறிந்து கொள்வோம். நீராதாரங்கள் குறித்து மக்களோடு உரையாட உலகத் தண்ணீர் நாளன்று (22.03.15, ஞாயிறு) “ஆறுகளைத் தேடி” என்கிற பயணத்தைத் தொடங்க இருக்கிறோம். இந்தப் பயணத்தின் வழி மதுரையின் ஆறுகளை கண்டடைவோம் வாருங்கள்….

எழில் இலக்கியப் பேரவையின் ஐந்நிலை விழாக்கள்

பங்குனி 8, 2046 /  மார்ச்சு 22,2015 ஆவடி முதலாமாண்டு நிறைவு விழா உலக மகளிர் நாள்  விழா கவியரங்கம் விருது வழங்கும் விழா வாழ்த்தரங்கம் சிறப்பு விருந்தினர்கள் நீதிபதி மூ.புகழேந்தி ஏர்வாடி இராதாகிருட்டிணன்  

இலங்கையைப் புறக்கணிப்போம்!- ஆளுநர் மாளிகை முற்றுகை

இலங்கையைப் புறக்கணிப்போம்!  இந்திய அரசே! அரசுறவு, பொருளியல், கலை, பண்பாடு, விளையாட்டு, என அனைத்திலும் இலங்கையைப் புறக்கணி!  மாசி 29, 2045 / மார்ச்சு 13, 2015 வெள்ளி காலை 10.00 மணி – ஆளுநர் மாளிகை  நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து… ஆளுநர் மாளிகை முற்றுகை… தலைமை: தோழர் தியாகு, ஆசிரியர், தமிழ்த் தேசம். ஒருங்கிணைப்பு: தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம். அனைவரும் வருக!!

தகவலாற்றுப்படை

மாசி 29, 2045 / மார்ச்சு 13, 2015 தமிழரின் கடலோடிய  தொன்மையும் திறனும் ஒரிசா பாலு உரை   அன்புடன், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவரம் எதிரில் சென்னை – 25. தொ.பே: 2220 1012 / 13 மின் முகவரி: tamilvu@yahoo.com  

‘சிகரம் நம் சிம்மாசனம்’: இலக்கு – மார்ச்சு நிகழ்வு

வணக்கம்.. நலம். வளம் சூழ வேண்டுகிறோம்.. இந்த மாத இலக்கு நிகழ்வு மாசி 28, 2046 / 12.03.2015 அன்று மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சிற்றரங்கில் நிகழ இருக்கிறது. இளைய தலைமுறைக்கு, இலக்கு நிகழ்வுகள் உறுதியாய்ப் பயனுள்ளவையாக அமையும். உறவும் நட்புமாய் வருகை தர வேண்டுகிறோம்.    

பார்வையற்றோர் போராட்டத்திற்கான அழைப்பு!

ஒன்பது  கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற  மாசி 25, மார்ச்சு 9  அன்று  பார்வையற்ற மாணவர்கள்-  பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில், காலவரையற்ற உண்ணாநோன்பு அறப்போராட்டம்! நண்பர்களுக்கு வணக்கம்! வருகிற திங்கட்கிழமை அதாவது 09/03/2015 அன்று நடைபெறவிருக்கும் காலவரையற்ற உண்ணா நோன்பு அறப் போராட்டத்திற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்! ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்பது உண்ணா நோன்பு  ஈகையர்களால் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்திற்கு, உறுப்பினர்களிடமிருந்து  உற்சாக  ஆதரவு  வேண்டுகிறோம். பணி நாடுநர்கள், பணியில் உள்ளவர்கள், மாணவர்கள் என்ற மூன்று தரப்பினர்களையும் மையப்படுத்தியே இந்த ஒன்பது  கோரிக்கைகளும் கட்டமைக்கப்…

சமூக ஆய்வு வட்டம்

நிகழ்ச்சி நிரல் தலைப்பு : “தமிழகக் கோயில் கட்டக் கலையும் அங்க இலக்கணமும்” சிறப்புரை: சே.இரஞ்சித் காப்பாட்சியர் தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறை ஆர்க்காடு இடம்: பனுவல் புத்தக நிலையம், 112, முதல் தளம், திருவள்ளுவர் சாலை. திருவான்மியூர், சென்னை நாள்: மாசி 24, 2046 / மார்ச்சு 08, 2015. நேரம்: மாலை 5.30 முதல் 7.30 மணி வரை தொடர்புக்கு: திருமிகு. அ.கா. ஈசுவரன் 9283275513, திருமிகு. ஆ. பத்மாவதி 9884354133   மின்னஞ்சல்: samoogaaaivuvattam@gmail.com வலைப்பூ: http://samoogaaaivuvattam.blogspot.in  

புலர்வு

மாசி 30, 2046 – ஃசுகார்பரோ வணக்கம்.   அறிவகம் – கனடாத் தமிழ்க் கல்லூரி இணைந்து நடத்தும் புலர்வு நிகழ்வை ஊடகத்தினூடாக மக்களுக்கு அறியத்தந்து நிகழ்ச்சி வெற்றியடைய ஒத்துழைக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.   கனடா மண்ணில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பிக்க கடந்த பல ஆண்டுகளாக தம்மை ஒப்படைத்து அறிவகம், கனடாத் தமிழ் கல்லூரியில் பணியாற்றும் 200 இற்கு மேற்பட்ட தமிழாசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வாக இந்த விழா மிகப்பெரிய அளவில் நடைபெறவுள்ளது. இரவு விருந்துடன் இந்த நிகழ்வு நடைபெறும்.   நன்றி. உருக்சன்…

தமிழிசைப் பேரரங்க விழா, மலேசியா

தமிழிசையை மீட்க மலேசியாவில் ஓர் அரிய வரலாற்று நிகழ்வு ….தமிழிசைப் பேரரங்கம் …..தமிழியல் பாடகர் இரகுராமன் அவர்கள் முதன்முறையாகத் தமிழ் கீர்த்தனைப் பாடல்களைத் தமிழிசை முறைப்படி பாடவுள்ளார் ….தமிழ் நெறி ஞாயிறு பாவலர் அ.பு .திருமாலனார் அவர்களின் திருப்பாவிசை எனும் வண்ணப் பாடல்களையும் அவர்தம் மாணவர்களான திருமாவளவன் திருச்செல்வம் ஆகியோர் இயற்றிய தமிழியல் பாடல்களையும் தமிழ் மரபு வழுவாது இரகுராமன் அவர்கள் பாடவுள்ளார் . தலை நகர் சோமா அரங்கத்தில் மாசி 24, 2046 / மார்ச்சு 08, 2015 பிற்பகல் 2 மணிக்கு…