சனவரி 25 இல் தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாடு, திருச்சிராப்பள்ளி
தை 12, 2049 வியாழன் சனவரி 25, 2018 மாலை 3.00 உலகமய ஆதிக்கத்திற்கு எதிராக, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு ஒற்றை இந்திய ஆட்சிக்கு எதிராக…… மொழிப்போர் ஈகியர் நாளில் தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு இடம்: தமிழ்நாடு பல்நோக்கு சமுகப்பணி மையம், பாரதியார் சாலை, திருச்சிராப்பள்ளி பொதுவுடைமைக்கட்சி (மா.இலெ.) மக்கள் விடுதலை 9443079552/7299999168
மறைமலை நகரில் பொங்கல் புத்தாண்டுப் பெருவிழா
தை 13, 2049 வெள்ளி 26.01.2018 மாலை 5.00 முதல் பொங்கல் புத்தாண்டுப் பெருவிழா சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் விழா புலவர் புஞ்சனையரசன் அரங்கம் திருவள்ளுவர் மன்றம் மறைமலைநகர் சிறப்புரை: பேரா.க.அருணன் தமிழிசை நடனம் திருக்குறள் ஓதல் பாராட்டுகள் பரிசு வழங்கல்
பிரித்தானியப் பாராளுமன்றில் பொங்கல் விழா!
பிரித்தானியப் பாராளுமன்றில் முதல் தடவையாகத் தைப் பொங்கல் விழா! தனிச் சிறப்பு மிக்க தொன்மை வாய்ந்த மொழி, பண்பாடு, வரலாறுடன் கூடிய தமிழினத்தினை அடையாளப்படுத்தும் பல கூறுகள் உள்ளன. இயற்கையின் சமநிலையைக் குழப்பாத உற்பத்தி முறைகள், அதற்கு முதன்மையான நிலம், நீர், ஆதவன், விலங்குகள் போன்றவற்றைக் காலங்காலமாக நன்றியுடன் நினைவு கூரும் பண்டிகைகள், பழக்க வழக்கங்கள் இன்றளவும் தொடர்கின்றன. அவை உலகெங்கும் தமிழ்கூறும் நல்லுலகை அடையாளப்படுத்தவும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கவும் வழிவகுத்துள்ளன. தம் நிலத்தையும் பரம்பரை இனத்துக்கான அடையாளங்களையும் நிலைக்க…
உருசிய நாட்டுத் தமிழறிஞர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும்
உருசிய நாட்டிலுள்ள தமிழறிஞர்கள் சிலர் தமிழாய்வு தொடர்பான சில திட்டப் பணிகள் தொடர்பாகத் தமிழகம் வந்துள்ளனர். மாசுகோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் உருசிய நாட்டின் மூத்த தமிழறிஞருமான பேராசிரியர் அலெக்சாண்டர் துபியான்சுகி (Prof Alexander Dubyanskiy)அவர்களின் தலைமையில் வருகை தரும் இவர்களுடன் சந்திப்புக்கும் கலந்துரையாடலுக்கும் ஆசியவியல் நிறுவனம், தை 10, 2049செவ்வாய்க் கிழமை 23-01-2018 அன்று முற்பகல் 10.30 மணிக்கு (செம்மஞ்சேரியில் அமைந்துள்ள) ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்றுத் தங்கள் அரிய கருத்துகளை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்…
உலகத்திருக்குறள் பேரவையின் 3ஆம் ஞாயிறு
ஞாயிறு தை 08, 2049 சனவரி 21, 2018 மாலை 4.30 வள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளி தாம்பரம் (பேருந்துநிலையம் அருகில்) உலகத்திருக்குறள் பேரவையின் 3ஆம் ஞாயிற்றுக் கூட்டம் கவியரங்கம் வாழ்த்தரங்கம் கருத்தரங்கம் சிறப்புச்சொற்பொழிவு: புலவர் தெ.தட்சிணாமூர்த்தி அன்புடன் புதுகை வெற்றிவேலன் பேசி 9444521773
சைவ முன்னேற்றச் சங்கத்தின் தைப்பொங்கல் திருநாள்
அன்புடையீர், அருள்மிகு சிவகாமி அம்பாள் இணை சிதம்பரேசுவரர் ஆலயத்தில் சைவ முன்னேற்றச் சங்கத்தின் தைப்பொங்கல் திருநாள் தை 01, 2049 ஞாயிற்றுக்கிழமை 14.01.2018 மாலை 6.00 மணிமுதல் சிறப்பாக நடைபெறவுள்ளது. தமிழர் திருநாளை – உழவர் திருநாளை உற்சாகமாகக் கொண்டாட அனைவரையும் வரவேற்கிறோம். திருவாட்டி தயாளன் செயற்பொறுப்பர் சைவமுன்னேற்றக்கழகம், ஐக்கிய அரசு.
திருவள்ளுவர் சிந்தனை உயராய்வு எழுச்சி மாநாடு
தை 02-3, 2049 சனவரி 15-16, 2018 காலை வள்ளுவர் கோட்டம், சென்னை திருவள்ளுவர் சிந்தனை உயராய்வு எழுச்சி மாநாடு உலகத்திருக்குறள் மையம்
இலண்டன் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா
ப. பழனிச்சாமி எழுதிய அஞ்சலைக்கு அஞ்சலி நாடக நூலின் வெளியீட்டு விழா
அன்புடையீர், வணக்கம். 14.01.2018 தைத் திருநாள் முதல்நாளன்று மாலை 3.30 மணிக்குச் சென்னைப் புத்தகக் காட்சி வளாக அரங்கில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்), மொரிசியசுத் தமிழர் திரு. ப. பழனிச்சாமி அவர்கள் எழுதிய அஞ்சலைக்கு அஞ்சலி நாடக நூலின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. உங்கள் வருகை, தமிழர் நலனையும் பண்பாட்டையும் பேண உழைக்கும் மொரிசியசுத் தமிழர் திரு. பழனிச்சாமி அவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும். அன்புடன் காந்தளகத்துக்காக, சசிரேகா பாலசுப்பிரமணியன்
நாகரத்தினம் கிருட்டிணாவின் ‘இரணகளம்’ நூல் வெளியீட்டு விழா
நாகரத்தினம் கிருட்டிணாவின் ‘இரணகளம்’ நூல் வெளியீட்டு விழா மார்கழி 28, 2048 – வெள்ளி – சனவரி 12, 2018
18 ஆவது பொங்கல் விழா, இலண்டன்
18 ஆவது பொங்கல் விழா, இலண்டன் தை 01, 2049 ஞாயிற்றுக்கிழமை சனவரி 14, 2018 பிற்பகல் 3.00 – இரவு 7.00 கீழைஆம் (East Ham) தமிழ்க்குமுகாயம்
2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்
2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் – யாழ்பாவாணன் வெளியீட்டகம் படத்திற்குக் கவிதை எழுதுங்கள் படத்தைப் பார்த்தீர்களா? நம்ம பிள்ளைகள் பூங்காக்கள் போய் காதலில் மூழ்கித் தங்களை மறந்து தவறு செய்த பின், செய்த தவற்றின் பரிசாகக் கிடைத்த குழந்தைகளைத் தெருவில் போட்டுச் செல்கின்றனர். இந்நிலை மேற்கத்தியப் பண்பாட்டில் இருந்து தமிழ் பண்பாட்டிற்குத் தொற்றிய நஞ்சு தான். இந்த நஞ்சுப் பழக்க வழக்கங்களைத் தமிழ் பண்பாட்டிலிருந்து விரட்ட வேண்டும். இந்தப் பணியை மேற்கொள்ளப் பாவலர்கள்/கவிஞர்கள்…
