தமிழ்நாட்டில் தீபாவளி உருவான வரலாறு!-இலக்குவனார்திருவள்ளுவன்
தமிழ்நாட்டில் தீபாவளி உருவான வரலாறு! தீபாவளி கொண்டாட்டத்திற்கான சுவையான கதைகள் என்னென்ன? இதன் தொடக்கம், காரணம், நோக்கங்கள் யாவற்றையும் அறிந்தால் பல புதிர்கள் விடுபடும். வரலாறு, இலக்கியம் சார்ந்து இந்தக் கட்டுரை சொல்லும் நுட்பமான அரிய தகவல்கள் தீபாவளியின் வரலாறு குறித்த ஒரு புரிதலைத் தருகிறது; விசய நகரப் பேரரசு தமிழ்நாட்டில் கி.பி. 15ஆம் நூற்றாண்டு நுழைந்தது. அப்பொழுது முதல் தான் தீபாவளி இங்கே கொண்டாடப்படுகிறது. அவ்வாறு தமிழகத்திற்கு வந்த தீபாவளி. நேரடியாக இல்லாமல் இருக்கின்ற விழாவை மாற்றி அமைக்கும் வகையில் புகுந்தது. பரதக்கண்டம்…
தோழர் தியாகு எழுதுகிறார் : தேரான் தெளிவு
(தோழர் தியாகு எழுதுகிறார் : ஈழத் தமிழர் முதுகில் குத்தும் இந்திய வல்லரசு!- தொடர்ச்சி) தேரான் தெளிவு ”தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்” திருக்குறள் 510 நடைபெறும் 2024 பொதுத் தேர்தல் குறித்துத் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்களிடையே பெருங்கவலையும் அக்கறையும் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. புலம்பெயர் தமிழர்கள் நடத்தும் ஊடகங்கள் இவ்வகையில் செய்தியும் கருத்தும் வெளியிட்டு வருகின்றன. சில காட்சி ஊடகங்ளுக்கு நான் செவ்வி கொடுத்துள்ளேன். சில இணைய இதழ்களுக்குக் கட்டுரையும் எழுதிக் கொடுத்துள்ளேன். உலகத்…
தோழர் தியாகு எழுதுகிறார் : ஈழத் தமிழர் முதுகில் குத்தும் இந்திய வல்லரசு!
(தோழர் தியாகு எழுதுகிறார் : நினைவுச்சுடர் வழிகாட்டும் ஒளிவிளக்கம்!- தொடர்ச்சி) இனக் கொலைக் குற்றவாளிக்கு இனிய வரவேற்பு:ஈழத் தமிழர் முதுகில் குத்தும் இந்திய வல்லரசு! ‘மாவீரர்நாள் உரை’ நிகழ்த்த அரிதாரம் பூசி வந்த பொய்த் துவாரகைக்குக் கட்டியம் பாடிய காசி ஆனந்தனார் பேசிய வசனத்தை மறந்திருக்க மாட்டீர்கள்: “இந்திய அரசின் துணையோடு துவாரகை அரசியலில் களமாடப் போகிறார்.” ‘துவாரகை’ நாடகத்தில் விரைவாகவே திரை விழுந்து விட்டதால் சூத்திரதாரிகள் இப்போது பிரகடனக் காய்களை உருட்டத் தொடங்கியுள்ளார்கள். முதலாவதாக ‘நான்கு தூண் கொள்கை’ப் புகழ் சிடிஎஃப் சுரேன்…
தோழர் தியாகு எழுதுகிறார் : நினைவுச்சுடர் வழிகாட்டும் ஒளிவிளக்கம்!
(தோழர் தியாகு எழுதுகிறார் : ஈழம் – . . . . பகைத்தது இந்தியாவா? . . . . ஈழமா? – தொடர்ச்சி) தமிழீழ மாவீரர் நினைவுச்சுடர்:வருங்காலத்துக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கம்! தமிழீழ விடுதலைக்காக இன்னுயிர் தந்து, தமிழீழத் தாயகத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, புலம்பெயர் தமிழுலகிலும் தமிழ் மக்களின் நினைவில் நிலைத்து விட்ட பல்லாயிரம் மாவீரர்களுக்குச் செவ்வணக்கம்! அயல் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்காகப் போராடித் தமிழீழ மாவீரர்கள் அடைந்த போர்க்கள வெற்றிகளின் அடித்தளம் சமூக விடுதலைக்கான போராட்டத்தில் அவர்கள் காட்டிய தெளிந்த உறுதியே…
தேராச் செய்வினை தீராத இன்னல் தரும் ! – பழ.தமிழாளன்
தக்கவர்க்கு வாக்களிப்பீர் தேராச் செய்வினை தீராத இன்னல் தரும் ! 1 சீரார்க்கும் எண்ணமுடன் திகழ்கதிராம் எழுச்சிநிறை உணர்வே பெற்றுச் செந்தமிழை இனம்நாட்டை நெஞ்சகத்தே வைப்பவரைத் தேரல் வேண்டும் ! தேராதே கட்சியையும் தேர்தலிலே நிற்ப ரையுந் தேர்ந்தெ டுத்தால் தீராத இன்னலையே இருகையால் வணங்கியுமே அழைத்தல் ஒக்கும் ! கூரான வாளெடுத்துக் கூடியுள்ள தம்முயி ரைச் செகுத்தல் போல குடியாட்சி மாண்பழிக்கும் கட்சிக்கே வாக்கினையே அளிப்போ மாயின் ஏரார்த்த தமிழ்மரபும் …
இலக்குவனாரை மக்கள் மறக்கவில்லை, அரசு நினைக்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனாரை மக்கள் மறக்கவில்லை, அரசு நினைக்கவில்லை! இன்றைய நாள் (03.09.2023) தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள். இதனை முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்பெறுகிறது. பொதுவாக இலக்குவனார் என்றால் பன்முக முதன்மை எண்ணங்கள் வரும். பள்ளியில் படிக்கும் பொழுதே தனித்தமிழில் கவிதைகள் எழுதியவர். புலவர் படிப்பு மாணாக்கராக இருக்கும்போது ‘எழிலரசி அல்லது காதலின் வெற்றி’ என்னும் தனித்தமிழ்ப்பாவியம் படைத்தவர். மாணாக்க நிலையில் தனித்தமிழ்ப்பாவியம் படைத்தவர்களில் முதலாமவராக இலக்குவனார் விளங்குகிறார். அது மட்டுமல்ல. இது மொழிபெயர்ப்புத் தழுவல் படைப்பாகும். அந்த வகையில் படிக்கும்…
இலக்குவனார் மாண்பும் இற்றைப் புலவரும் – பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
இலக்குவனார் மாண்பும் இற்றைப் புலவரும் வெள்ளம்போல் தமிழர்களின் கூட்டம் அன்று வீரத்தால் திரண்டெழுந்தபோது நம்மின் தெள்ளமுதத் தமிழ்ப்புலவர் என்ன செய்தார் திறனற்று வாய்மூடி இருந்தார்! ஆனால் கள்ளம்இல் குணம் கொண்டார் தமிழ்ப்ப கையைக் கனன்று எழுந்து தீய்க்கின்ற செந்தீ! அன்பை வள்ளல்போல் அளிக்கின்ற பெரிய ஆசான் வம்புக்குப் பணியாமல் குரல் கொடுத்தார்! சிறையினிலே அடைபட்டார்! இழந்தார் வேலை! செக்கிழுக்கும் மாட்டைப்போல் தமிழா சான்கள் குறைகொண்ட மதியாலே கண்டும் தம்மின் கும்பிஒன்று நிறைந்தாலே போதும் என்று முறையின்றிப் பேசாமல் இருந்தார்! மான மூச்சில்லை! இலக்குவனார்…
நூலாய்வு : சமற்கிருதம் செம்மொழியல்ல
நூலாய்வு:சமற்கிருதம் செம்மொழியல்ல வடமொழி ஒரு செம்மொழி அல்ல என்பது தொடர்பாக முனைவர் மருதநாயகம் எழுதிய ஆராய்ச்சி நூலின் ஆய்வுரையாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. வேதங்கள், உபநிடதங்கள், வால்மீகிராமாயணம், மகாபாரதம் மற்றும் பல்வேறு வடமொழி நூல்கள், நாடகங்கள், காப்பியங்கள், மனுநீதி, பதஞ்சலி யோக சாத்திரம் ஆகியவை எந்த வகையிலும் இலக்கியத் தரமற்றவை என்பது விளக்கப்பட்டுள்ளது தமிழ் மற்றும் பிற இந்திய மொழி நூல்களில் இருந்து நல்ல இலக்கியப் பகுதிகளை இடைச்செருகல்களாகப் பயன்படுத்தி இருப்தையும் எடுத்துக் கூறி, சமற்கிருதம் செம்மொழி அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.–…
இலக்குவனார் நெறியுரைக்கிணங்கத் தமிழ்நல அரசை அமைக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
கற்றறிந்த தமிழ்ப்புலவர்கள் வழி நடைபெறும் அரசு சிறப்புற்று ஓங்கும். தமிழ்ப்புலவர்கள் என்று கூறுவதன் காரணம், சங்கக்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் வழி அரசுகள் நடைபெற்றதால் சங்கக்காலம் பொற்காலமாகத் திகழ்ந்தது. இன்றைய தமிழ்ப்புலவர்கள், நடுநிலைமை உணர்வுடனும் துணிவுடனும் அரசிற்கு அறிவுரை கூறுவோர் அருகியே உள்ளனர். கட்சிச் சார்பற்று ஆன்றோர்கள் அறிவுரை கூறினாலும் கட்சிக் கண்ணோட்டத்துடன் கூறுவதாகக் கருதி அவற்றைப் புறக்கணிக்கும் போக்கே உள்ளது. யார் அறிவுரை கூறினாலும் அரசிற்கு எதிரான கருத்துகள் என்று புறந்தள்ளாமல் நல்லாட்சிக்கான வழிகாட்டி என்று ஏற்பார்கள் எனக் கருதுகிறோம். எனவே, தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர்…
உதிக்கும் சூரியனே! – க. இராசேசு
உதிக்கும் சூரியனே! பனியை உருக்க வரும் சூரியன்போல்பகலெல்லாம் உழைத்து ஓய்வெடுடாபனிமலையையே உருக்க நீ நினைத்தால்பகலவனாய் வானில் நீ எரிந்திடடா! சிறுகச் சிறுக வரும் வியர்வைத்துளிஉன் உழைப்பிற்குக் கிடைத்த பொன்துளிகள்பெருகி பெருகி வரும் ஊனின் வலிஉன் உடலை செய்யும் உறுதியடா! ஓடும் ஓட்டமும் ஓயாது வாழ்வுமுடியாப் பாதையின் தொடர்ச்சியடா,வாழ்வில் கடினப் பாதைகள் பலவுண்டுஅதைக் கண்கள் மூடாமல் ஓடிடடா,கடினப் பாதைகளில் ஓடிப் பழகிவிட்டால்இனி எந்தப் பாதையிலும் ஓடிடலாம்! சூழும் துன்ப இருளை நீ நீக்கிடவேபுது சூரியனாய் வானில் உதித்திடடா,சிகர தூரம் அது மிகத் தூரமில்லைஉன் புன்சிரிப்பால் அதை…
இலக்கியத்தில் நகைச்சுவையும் பழிப்புரையும் – தேமொழி
இலக்கியத்தில் நகைச்சுவையும் பழிப்புரையும் வெளிப்படையாகவோ குறிப்பாகவோ, தனிமனிதர் ஒருவர் அல்லது சமூகத்தின் குறையை, அவர்கள் உணருமாறு அவர்களுக்கு உறுத்தவேண்டும் என்று வசையாகவும், அதே நேரம் நயத்துடனும் நகைச்சுவையுடனும் சொல்வது அங்கதம் எனப்படும். அதாவது, ஒருவரது கீழ்மை குணத்தை நகைச்சுவை தோன்ற நயமாகப் பழித்துரைப்பதுதான் அங்கதம். இந்த இலக்கிய முறையை ஆங்கிலத்தில் ‘சட்டயர்’ (Satire) என்பர். நடுவுநிலைமை, நகைச்சுவை உணர்வு, சமுதாய அக்கறை என்பனவற்றை நோக்கமாகக் கொண்டு நகைப்பு, இகழ்ச்சி, நன்னோக்கம் ஆகிய மூன்றும் இயைந்து வரும் சிறப்பு கொண்டது அங்கதம். தாக்குதலும் நகையும் இணைந்தே…
தமிழே நீ வாழி! – சந்தர் சுப்பிரமணியன்
தமிழே நீ வாழி! தூய தமிழே நீவாழி!தொன்மைத் தமிழே நீவாழி!பாயும் அமுதின் ஊற்றைப்போல்பழகும் தமிழே நீவாழி!ஆய நூல்கள் அணிகலனாய்அணிந்த தமிழே நீவாழி!தாயின் சிறந்தாய் நீவாழி!தங்கத் தமிழே நீவாழி! கவிஞர் சந்தர் சுப்பிரமணியன் வலைத்தமிழ்