ப.சீ.த. (‘தடா’) சட்டத்தின் கொடுமை! பேரறிவாளன் குறிப்பேடு – தொடரும் வலி! பாகம் – 05

(பேரறிவாளன் குறிப்பேடு! பாகம் – 04 தொடர்ச்சி) ப.சீ.த. (‘தடா’) சட்டத்தின் கொடுமை! பேரறிவாளன்  குறிப்பேடு – தொடரும் வலி! பாகம் – 05 [வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!]   ஆடி 16, 1971 / 1940, சூலை 31 – இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் மறக்க முடியாத நாள். அன்றுதான் இங்கிலாந்து சிறையொன்றில் விடுதலைப் போராட்ட வீரர் ஒருவர் கொலைக் குற்றத்துக்காகத் தூக்கிலிடப்பட்டார்….

பாலியல் வன்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுவோம்! – இல.அம்பலவாணன்

பாலியல் வன்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுவோம்!  மீண்டும் அதே கூக்குரல்! அதே ஓலம்! அதே குற்றச்சாட்டுகள்! அதே  குறைகூறல்கள்! மீண்டும் அதே கருத்து வெளிப்பாடுகள்! அதே உணர்வுவயப்பட்ட நிலைமை! அதே முகங்கள்!  அதே குரல்கள்! மீண்டும், ஆம், மீண்டும்….!   கடந்த திசம்பர் மாதம் 2012இல்  நிருபயா மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக அதே குரல்கள் அதே குறைகூறல்கள், அதே குற்றச்சாட்டுகள்.  யாருக்கு எதிராக? யார் மீது? அதுவும் மீ;ண்டும், அதே போல –  குமுகாயத்தின் மேல், சட்டம் தரும் பாதுகாப்பு மேல், காவல்துறை மேல்,…

பசுவை வணங்கு…. கன்றுக்குட்டியைக் காயப்போடு! – புகழேந்தி தங்கராசு

பசுவை வணங்கு…. கன்றுக்குட்டியைக் காயப்போடு! பசு மாட்டை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள்…… எதை உண்பது, எதை உடுத்துவது என்பதைத் தீர்மானிக்க நீங்கள் யார்….. என்று பொரிந்து தள்ளியிருக்கிறார் வங்காளிகளின் ‘தீதி’ மம்தா பானர்சி.   பசு மாட்டு அரசியல் தான் விந்திய மலைக்கு அந்தப்புறம் கொடிகட்டிப் பறக்கிறது. மாட்டு இறைச்சி வைத்திருப்பவர்களைத் தூக்கிப் போட்டு மிதிக்க ஒரு கும்பல், மாட்டுத்தோல் வைத்திருப்பவர்களைக் கட்டிவைத்துப் பிளக்க இன்னொரு கும்பல் என்று வெறியுடன் திரிகிறது வட இந்தியா. மாட்டுத்தோலை உறிப்பதைத் தடுக்க, மனிதத் தோலை உறித்துக்…

திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 2/2 : மு. முத்துவேலு

(திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 1/2 தொடர்ச்சி) திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 2/2 குற்றங்களின் வரையறைகள்   இ.த.தொ. சட்டமும் திருக்குறளும் குற்றங்களை வரையறை செய்வதில் ஒத்திருக்கும் தன்மையுடையன. குற்றங்கள் பலவற்றுள்ளும் “திருடுதல்” என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் குற்றமாகும். இக்குற்றச் செயலை இ.த.தொ. சட்டம் வரையறுப்பது பின்வருமாறு அமைகின்றது. Theft – intending to dishonesty any movable property out of possession of any person without that person”s consent, moves that property…

தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி 2 / 4 – சி.சேதுராமன்

(தமிழுக்கு ஒளி தந்த தமிழ்ஒளி 1/4 தொடர்ச்சி) தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி  2 / 4   1945-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட தமது கவிதைகள் அனைத்தையும் திரட்டி இரண்டு தொகுதிகளாகத் தமிழ்ஒளி உருவாக்கினார். பாரதிதாசன் நண்பராக விளங்கிய திருவாரூர் டி.எம்.இராமன் என்பார், அத்தொகுதிகளை நூலாக வெளியிடுவதாகக் கூறி கவிஞரிடமிருந்து பெற்றுக் கொண்டார். பின்னர் அந்தக் கவிதைத் தொகுதிகள் இரண்டும் தொலைந்துவிட்டதாகப் பொய் சொல்லிவிட்டார். இது குறித்து மேலும் தகவல் அறிய முயன்ற போது “இருபது வயது இளைஞன் பேரால் இரண்டு கவிதைத் தொகுதிகள்…

கல்வியே கண் – கி. பாரதிதாசன்

“கல்வியே கண்”     செல்லும் இடமெல்லாம் சீர்களைச் சேர்த்திட வெல்லும் அடலேறாய் விஞ்சிட – தொல்லுலகில் யாண்டும் புகழ்பரவத் தீண்டும் துயரகல வேண்டுமே கல்வி விளக்கு! சாதிச் சழக்குகளை மோதி மிதிக்கின்ற நீதி நிலத்தில் நிலைத்திட! – ஆதியிலே ஆண்ட அறநெறிகள் மீண்டும் அரங்கேற வேண்டுமே கல்வி விதை! கல்வி உடையவரே கண்ணுடையர் என்றழகாய்ச் சொல்லி மகிழும் சுடர்க்குறளே! – முல்லைமலர்க் காடொளிரும் வண்ணம் கருத்தொளிர, எப்பொழுதும் ஏடொளிரும் வண்ணம் இரு! நல்லோர் திருவடியை நாடி நலமெய்த! வல்லோன் எனும்பெயர் வந்தெய்த! –…

ஆறு – அண்ணாமலை

ஆறு மலையில் பிறந்த நதி மண்ணில் குதிக்கிறது அலைகள் கொலுசுகட்டி அசைந்து நடக்கிறது நிற்க நேரமில்லை நெடுந்தொலைவு போகிறது மௌனம் உடைத்தபடி மனம்விட்டு இசைக்கிறது கல்லில் அழகாக கூழாங்கல் செய்கிறது தண்ணீர்ப் பாலாலே தாவரங்கள் வளர்க்கிறது நதிகள் கரையோரம் நந்தவனம் மலர்கிறது காயாமல் பூமியைக் காப்பாற்றி வைக்கிறது கல்லில் கிழிபட்ட காயம் மறைக்கிறது வெண்பல் நுரைகாட்டி வெளியில் சிரிக்கிறது இடையில் கோடுகளாய் எங்கெங்கோ பிரிகிறது கடல்தான் கல்லறையா கடைசியில் முடிகிறது நம்முடைய அழுக்குகளை நதிகள் சுமக்கிறது காரணம் இதுதான் கடல்நீர் கரிக்கிறது – திரைப்படப்…

இனிப்புத் தோப்பே! – ஆரூர் தமிழ்நாடன்

 இனிப்புத் தோப்பே கனவுகளின் தாயகமே… கவிதைகளின் புன்னகையே வைரத் தேரே!.. கண்வளரும் பேரழகே… கால்முளைத்த சித்திரமே இனிப்புத் தோப்பே.. . நினைவுகளை அசைக்கின்றாய்… நெஞ்சுக்குள் நடக்கின்றாய்… தேவ தேவி… நின்றாடும் பூச்செடியே… உன்பார்வை போதுமடி அருகே வாடி. பார்வைகளால் தீவைத்தாய்; பரவசத்தில் விழவைத்தாய்; தவிக்க வைத்தாய்! ஊர்வலமாய் என்னுள்ளே கனவுகளைத் தருவித்தாய் சிலிர்க்க வைத்தாய். நேர்வந்த தேவதையே நிகரில்லா என்நிகரே உயிர்க்க வைத்தாய். யார்செய்த சிற்பம்நீ? எவர்தந்த திருநாள்நீ? மலைக்க வைத்தாய். உன்பிறப்பை உணர்ந்ததனால் நீ பிறக்கும் முன்பாக நான் பிறந்தேன்; என் நோக்கம்…

தமிழுக்கு ஒளி தந்த தமிழ்ஒளி 1/4 – சி.சேதுராமன்

தமிழுக்கு ஒளி தந்த தமிழ்ஒளி 1/4     பாரதி, பாரதிதாசன் ஆகிய இருவரின் சுவடுகளைப் பற்றிக் கொண்டு ‘பாரதி கவிதா மண்டலத்தின்’ மூன்றாவது தலைமுறையில் முத்திரைப் பதித்த கவிஞர்தான் தமிழொளி. பாரதியையும், பாரதிதாசனையும் பலரும் பின்பற்றி அவர்களது சுவடுகளில் கால்பதித்து நடந்தாலும் அவர்களின் வழிநின்று பொதுவுடைமைக்குக் குரல் கொடுத்து இறுதிவரை பொதுவுடைமைவாதியாகவே வாழ்ந்து மறைந்தவர் கவிஞர் தமிழொளி.   தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடியை அடுத்த ‘ஆடூரில்’ சின்னையா – செங்கேணி அம்மாள் இவர்களின் தலைமகனாக 1924-ஆம் ஆண்டு செட்டம்பர் திங்கள் 21-ஆம்…

திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் -1/2 : மு. முத்துவேலு

திருக்குறளும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டமும் 1/2  திருக்குறளை அறநூல், அன்புநூல், அருள்நூல், அறிவுநூல், அகநூல் என்று பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் பலரும் ஆய்ந்து வந்துள்ளனர். திருக்குறளைச் ‘சட்டநூல்’ என்ற நோக்கில் அணுகினாலும் அதில் தமிழரின் சட்டநெறிகள் புலப்படக் காணலாம். அவ்வகையில், 1860-ஆம் ஆண்டில் இயற்றப்பெற்று இன்றளவும் இந்திய நீதிமன்றங்களில் பயன்பட்டுவரும் இந்தியத் தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின்(The Indian Penal Code) கூறுகள், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் தமிழர்களுக்குச் சட்ட நூலாக விளங்கிய திருக்குறளில் பொதிந்திருக்கின்றன என்பதைப் புலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். திருக்குறள்…

குற்றமற்றவர்களைக் கொல்லத் துடிக்கும் மனிதர்களை வரலாறு மன்னிக்கட்டும்! பேரறிவாளன் குறிப்பேடு! பாகம் – 04

(பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி: பாகம்-03 தொடர்ச்சி) குற்றமற்றவர்களைக் கொல்லத் துடிக்கும் மனிதர்களை வரலாறு மன்னிக்கட்டும்! பேரறிவாளன் குறிப்பேடு! பாகம் – 04 (வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!)   உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இறுதியானது மட்டுமே, குறையற்றது எனக் கொள்ள முடியாது. இதை நான் சொல்லவில்லை. சொன்னால், இந்திய நீதி அமைப்பு முறையைக் குற்றவாளியெல்லாம் குறை சொல்லலாமா எனச் ‘சிலர்’ கூக்குரல் எழுப்பவர்.   இந்தக்…

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு! – பழ. நெடுமாறன்

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு!   மறைமலையடிகள் 1916-ஆம் ஆண்டில் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவர் 20-ஆம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அவர் பிறந்த நாளான சூலை 15-ஆம் நாளில் தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம்.   வடமொழிக்கோ பிறமொழிகளுக்கோ அவர் எதிரானவர் அல்லர். தமிழ், சமற்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் புலமை மிக்கவர் அவர்.   ஒரு மொழியில் இயல்பாக உள்ள சொற்களைத் தவிர்த்துவிட்டு பிறமொழிச் சொற்களைக் கலந்து பயன்படுத்துவதன் மூலம், அம்மொழி அழியும்…