அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 1. அ. அறிவியற் கவிஞர் திருவள்ளுவர்

(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், பேச்சாளனின் எழுத்துரை – தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் 1. அ. அறிவியற் கவிஞர் திருவள்ளுவர் திருவள்ளுவப் பெருந்தகைக்குக் ‘கவிஞர்’ என்னும் சொல்லை அடைமொழியாக்கலாம். ஆக்கினால் அச்சொல் பெருமை பெறும். அதனுடன் ‘அறிவியல்’ என்பதை அடைமொழியாக்கினால் அடைமொழியாக்குவோன் திருவள்ளுவரின் அறிவியல் திறத்தை அணுகியவன் ஆகிறான். திருவள்ளுவர் கவிஞரா ? திருவள்ளுவரைப் ‘புலவர் திருவள்ளுவர்’, ‘மன்புலவன் திருவள்ளுவன்’, ‘முதற் பாவலர்’- எனப் புலவராகவும், பாவலராகவும் ‘மாலை’[1] சூட்டிப் போற்றினர். மணிமேகலை ஆசிரியர் சாத்தனாரும் ‘பொய்யில் புலவன்’[2] என்றார். முந்தையோர் ‘கவிஞர்’ என்று பாடவில்லை. கம்பருடனும், இளங்கோவுடனும் இணைத்துப் பாடிய நம் காலக் கவிமாமன்னன் பாரதி,…

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 11. திருமுருகாற்றுப்படை

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 10. மெய்ம் மலிந்து நகைத்தேன்-தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 8. திருமுருகாற்றுப்படை அறிமுகம் திருமுருகாற்றுப் படை, வீடுபேறு அடைதற்கு உரிய நல்லூழ் உடையான் ஒருவனை, அவ்வீடு பேற்றினை பெற்றான் ஒருவன், முருகக் கடவுளிடத்தே செல்க: சென்றால் வீடுபேறு பெறுகுவை” என வழி கூறியதாகப் பாடப்பட்டுள்ளது. பத்துப்பாட்டில் வரும் பொருநராற்றுப்படை முதலியன எல்லாம், பொருளைப் பெறுவோர் பெயரால் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் திருமுருகாற்றுப்படை பொருள் தரும் தலைவன் பெயரால் வழங்கும் சிறப்புடையது. இதற்குப் புலவராற்றுப்படை என்றோர் பெயரும் இருந்தது என்பது,…

சட்டச் சொற்கள் விளக்கம் 451-460 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 441-450 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 451-460 451. accreditation மதிப்புச் சான்றளிப்பு   குறிப்பிட்ட நிரல் அல்லது நிறுவனம், உரிய தரப்பாடுகளுக்குப் பொருந்தி வருகிறதா என மதிப்பிட்டுத் தரச் சான்றளிப்பது.   தூதரைச் சான்றளித்து அனுப்புதல், அதிகாரப்பூர்வச் சான்றளிப்பு. ஒன்றின் தகுதியைக் குறிப்பதால் தகுதிக் குறியீடு என்றும் சொல்வர். 452. accredited ஏற்கப்பட்ட மதிப்பு ஏற்கப்பட்ட   முறைப்படி ஒப்புக்கொள்ளப்பட்ட, பொதுஒப்புதல் பெற்ற எனவும் சொல்கின்றனர். எனினும் சுருக்கமாக ஏற்கப்பட்ட அல்லது மதிப்பேற்கப்பட்ட என்றே சொல்லலாம்….

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 56 : மலையுறையடிகள் வாழ்த்திய காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 55 : பூங்கொடியின் பூரிப்பு – தொடர்ச்சி) பூங்கொடி அத்தியாயம் 12 : மலையுறையடிகள் வாழ்த்திய காதை பூங்கொடி மலையுறையடிகளை அடைதல் தாயும் தோழியும் தன்னுடன் தொடர ஆயும் அறிவினர் நரைமுதிர் யாக்கையர் சாயா நாவினர் தங்கிடன் குறுகிக் காயாப் பூங்கொடி கண்ணீர் மல்க                   மலையுறை யடிகள் மலரடி வணங்கிக்  5 பூங்கொடி நிகழ்ந்தன கூறல்           காற்றலை வீசும் கடல்நகர்ப் புக்கதூஉம், ஆங்கவள் சிலரால் அருந்துயர் பெற்றதூஉம், தீங்கினை எதிர்த்துத் திருத்தி வென்றதூஉம், அழுக்கிலா வாழ்க்கை…

சட்டச் சொற்கள் விளக்கம் 441-450 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 431-440 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 441-450 441 .      accountancy      கணக்கியல் கணக்குப் பதிவியல், வணிகக்கணக்கியல் எனவும் குறிப்பிடுகின்றனர். 442.       accountant         கணக்காளர், கணக்கர் வணிக நிறுவனத்தின் அல்லது அலுவலகத்தின் வரவு செலவுகளை நாட்குறிப்பேட்டில் எழுதிப் பேணுநர். அவை தொடர்பான அனைத்தையும் மேற்கொள்பவர். பட்டயக் கணக்கர், சான்றிடப்பட்ட கணக்கர், நிதிநிலைக் கணக்கர், மேலாண் கணக்கர் என இவர்கள் பல வகைப்படுவர். 443.       accountant book             கணக்கேடு கணக்கு பேணப்படுகின்ற புத்தகம். 444.       Accountant…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியஇதழ்களும் ஆசிரியர்களும் – ங

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியஇதழ்களும் ஆசிரியர்களும் – க – தொடர்ச்சி) சொற்கள் வழங்கியஇதழ்களும் ஆசிரியர்களும் 22- 42 நிறைவுற்றது உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்

சிறந்த நூல் பரிசுத் திட்டத்தில் பரிசுகளை உயர்த்திய முதல்வருக்கு நன்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்

(காண்க-சிறந்த நூல் பரிசு விதிகளில் மாற்றம் தேவை-இலக்குவனார்திருவள்ளுவன்) சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசளிப்புத் திட்டத்தில் நூலாசிரியருக்கும் பதிப்பாளருக்கும் பரிசுத் தொகையை உயர்த்திய அரசிற்கு நன்றி! முதல்வர்,அமைச்சர் பெருமக்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் பாராட்டு! பிற வேண்டுகோள்களையும் ஏற்க வேண்டுகோள்! “சிறந்த நூல் பரிசு விதிகளில் மாற்றம் தேவை”  என ‘அகரமுதல’ இதழின் 26.06.2024 ஆம் நாளிட்டஇதழுரையில் வேண்டுகோள் விடுத்திருந்தோம். மகிழ்ச்சியான செய்தி. குறுகிய காலத்தில் முதல்வர் வேண்டுகோளில் பரிசு தொடர்பான வேண்டுகோளை ஒரு பகுதி  ஏற்றுள்ளார். கடந்த 26.06.2024 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்ட மன்றக்…

சட்டச் சொற்கள் விளக்கம் 431-440 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 421-430: இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 431-440 431. Account slip கணக்குத் தாள்   ஓய்வூதியக் கணக்குத் தாள், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாள், பொதுச் சேமிப்பு நிதிக் கணக்குத் தாள் எனப் பலவகைப்படும்.   குறிப்பிட்ட நிதிக்கணக்கில் செலுத்தப்படும் தொகை, வைப்பு, இருப்பு, வட்டி கடனாக எடுத்திருப்பின் கடன் திருப்பச் செலுத்தி விவரம்,  அக்கணக்கில் முன்பணம் பெற்றிருப்பின் அதன் விவரம் முதலியவற்றைப் பதிந்து அளிக்கும் சீட்டு. 432. account stated விவரிப்புக் கணக்கு  …

உ.வே.சா.வின் என் சரித்திரம் 94 : அத்தியாயம்-59 : திருவிளையாடற் பிரசங்கம்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 93 : அத்தியாயம்-58 : எனக்கு வந்த சுரம்-தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-59 திருவிளையாடற் பிரசங்கம் நானும் என் தந்தையாரும் நிச்சயித்தவாறே வைகாசி (1874சூன் மாதம்) மாத இறுதியில் என் பெற்றோர்களுடன் நான் செங்கணத்தைநோக்கிப் புறப்பட்டேன். முதலில் அரியிலூருக்குச் சென்றோம். அங்கே ஒருவேளை தங்கிச் சடகோபையங்காருடன் பேசினோம். பிள்ளையவர்களுடையவிசயங்களைப் பற்றி அவர் ஆவலுடன் விசாரித்தார். அரியிலூரில் முன்புபழகினவர்களெல்லாம் எங்கள் வரவை அறிந்து வந்து பார்த்துச் சென்றனர். செங்கண நிகழ்ச்சிகள் பிறகு நாங்கள் குன்னத்தின் வழியே செங்கணம் சென்றோம். அங்கேவிருத்தாசல ரெட்டியாரும் வேறு…

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், பேச்சாளனின் எழுத்துரை

(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், அணிந்துரையும் பதிப்புரையும்-தாெடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் பேச்சாளனின் எழுத்துரை வணங்கி மகிழ்கின்றேன். உலகம் அறிவியலின் உறைவிடம்;அறிவியல் உலகத்தின் உயிர்மூச்சு;“உலகம் தழீஇயது ஒட்பம்” 1 என்னும் திருவள்ளுவர் வாய் மொழி இவை இரண்டின் புதையல். இவ்வாறு எழுதுவதை மிகைபட எழுதுவதாகவோ ஆர்வத்தை மட்டும் வெளிப்படுத்துவதாகவோ கருதுவோர் நூலினுள் புகுந்து வெளிவரின் புதையல்தான்’ என்று ஒப்புவர். அறிவியல் திருவள்ளுவம், அறிவியல் திருமகனாரின் அணிந்துரையால் அழகில் திகழ்கிறது. – சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்பமை முனைவர் க. ப. பொன்னுசாமி அவர்கள் இவ்வறிவுப் பொலிவை…

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 10. மெய்ம் மலிந்து நகைத்தேன்

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 09 இறையனார் அகப்பொருள் உரை -தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 7. மெய்ம் மலிந்து நகைத்தேன் காடு சூழ்ந்த மலைநாட்டு மகன் ஒருவன், குறவர் குடிக் குமரி யொருத்தியைக் கண்டு காதல் கொண்டான். தங்கள் குலக் கடவுளாகிய முருகன் உறைவதால் பெருமைப் பெற்ற மலை உச்சியில் தோன்றிய அவன் நாட்டு அருவிகள், கீழே பாய்ந்து அவன் நாட்டுக் காட்டை வளமுறச் செய்வது போலேவே, ஆற்றல் அருள், முதலிய அரிய பண்புகளால் சிறந்த பெரியோனாய அவன், தன்பால் பேரன்பு…

சட்டச் சொற்கள் விளக்கம் 421-430 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 411-420 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 421-430 421. account of crime, Give an குற்ற வரலாறு கூறு/ கொடு   குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது குற்றவாளியின் முந்தைய குற்ற வழக்கு, தண்டனை விவரக்கணக்கைத் தெரிவித்தல். குற்றக் கணக்கு என நேர் பொருளாக இருந்தாலும் வழக்கிலுள்ள குற்றவரலாறு என்பதே சரியாக உள்ளது.   முதல் குற்றவாளியா, வழக்கமான குற்றவாளியா, சட்டவகையிலான குற்றவாளியா, ஒழுக்கக்கேட்டுக் குற்றவாளியா, மனநோய்க்குற்றவாளியா, நிறுவனக் குற்றவாளியா, வெள்ளாடைக் குற்றவாளியா(அழுக்குபடியாமல் குற்றம் செய்பவர்), தொழில்…