நாள்தோறும் நினைவில்: ஆதாரங்களைப் பயன்கொள்

ஆதாரங்களைப் பயன்கொள்! இடத்தைச் சுருக்கு ஆற்றலைச் சேகரி பொருட்களைப் பாதுகாக்க கருவிகளைக் கையாள் இயந்திரங்களை இயக்கு கட்டுப்பாட்டை வடிவமை மென்பொருள் எழுது செயல்முறையை நிறுவு உயிர்களுக்கு உதவு செய்திகளைப் பரிமாறு  – சுமதி சுடர், பூனா  

நாள்தோறும் நினைவில் : ஒன்றி வேலைசெய் – சுமதி சுடர்

ஒன்றி வேலைசெய் ஈடுபாட்டுடன் பணிசெய் விதிமுறைகளைக் கடைப்பிடி நேரத்தோடு இணைந்து செல் பாதுகாப்புடன் வேலைசெய் விளைவுகளைக் கவனத்தில் வை சமுதாயப் பங்கைஅளி கடமையில் கண்ணாயிரு வேலையில் நிறைவுகாண் நுட்பங்களைக் கற்றுக்கொள் நுட்பங்களைக் கற்பி ஐந்தொழில் செய்  – சுமதி சுடர், பூனா  

கலைச்சொல் தெளிவோம் 23 : எக்கர் – Sand hill; sandy

23 எக்கர் – Sand hill; sandy   மணற்குன்று எக்கர் என்பது பெருமணற்பரப்பை, மணற்குன்றைக் குறிக்கும் 54 பாடல்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. அவற்றில் சில : எக்கர் இட்ட மணலினும் பலவே (புறநானூறு: 43.23) நில வெக்கர்ப் பல பெயரத் (பொருநராற்றுப்படை: 213) தூஉஎக்கர்த் துயில் மடிந்து (பட்டினப்பாலை 117) படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர் (அகநானூறு 11.9) முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர்(நற்றிணை 15.11) sandy-மணல்மிகு எனப் பொறிநுட்பவியலிலும் மணல் கொண்ட எனக் கால்நடை அறிவியலிலும் பயன்படுத்துகின்றனர். அதைவிட எக்கர்…

கலைச்சொல் தெளிவோம் 22 : அட்டில்- cuisine

அட்டில்- cuisine தமிழில் சமையலறை எனப் பொதுவாகச் சொல்லப்படுவது ஆங்கிலத்தில் இருவகையாகச் சொல்லப்படுகிறது; kitchen-அடுக்களை, சமையலறை என வேளாண்துறையிலும் மனை அறிவியல் துறையிலும் கையாளப்படுகின்றது. cuisine-என்பதும் சமையலறை என்றே கையாளப்படுகிறது. அவற்றுக்குத் தமிழிலும் தனித்தனிச் சொற்களைக் கையாளலாம். புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில் – சிறுபாண் ஆற்றுப்படை 132 அறம்நிலைஇய அகன்அட்டில் – பட்டினப் பாலை 43 விருந்துண்டு ஆனாப் பெருஞ்சோற்று அட்டில் – பட்டினப் பாலை 262 அட்டில் ஓலை தொட்டனன் நின்மே –நற்றிணை 300.12 உதியன் அட்டில் போல ஒலிஎழுந்து –…

மாந்தர்குல வரலாறு – சுமதிசுடர்

  கடற்கோளால் சிதறுண்டு கடல்கடந்து சென்றோம்; கற்றறிவின் துணைகொண்டு சூழலுக்குள் வாழ்ந்தோம்; அடக்குமுறை கொள்கையாளர் ஆட்சியினைப் பற்றி அழித்துவிட்டார் பண்பாட்டுக் கூறுகளை மெல்ல; கடந்துவந்த பயணத்தை ஓரளவே பதிந்தோம்; காணாமல் விட்டவற்றை கண்டறிந்து பதிவோம்; அடங்காத உணர்ச்சிநிலை ஆய்வுகளால் பயன்என் ஆய்வுசெய்யும் சித்தனாகி அறம்செழிக்கச் செய்வோம்.                                                                             –  சுமதிசுடர், பூனா

எங்கேயும் நான் தமிழனாக இல்லை ! – கவிஞர் தணிகைச்செல்வன்

எங்கேயும் நான் தமிழனாக இல்லை ! எங்கேயும் நான் தமிழனாக இல்லை! நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே உயர்ந்தோங்கிய தூணோரம் ஒதுங்கி நின்று உள்ளே வரலாமா? என்று “இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டு ஐம்பதாண்டு காலமாக அடிதொழுது கிடக்கிறாள் என் தாய். பள்ளிகளின் வாயில்களுக்கு வெளியே வறியவள் போல் நின்று தான் பெற்ற குழந்தைகளுக்குத் தாய்ப் பாலூட்ட ஆங்கிலச் சீமாட்டியிடம் இசைவு கோரி கண்ணீரோடு காத்து நிற்கிறாள் என் தாய். ஆலயத்துக்குள்ளே நடக்கும் ஆறுகால பூசைகளில் ஒரு காலத்துக்கேனும் என்னை உள்ளே விடக்கூடாதா- என்று சமசுகிருத எசமானியிடம்…

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! – பெருஞ்சித்திரனார்

வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே! புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே! – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பெண்ணுரிமைக் காவலர் பேராசிரியர் இலக்குவனார்

பெண்ணுரிமைக் காவலர் பேராசிரியர் இலக்குவனார் மகன் என்னும் சொல்லைத் தெய்வப்புலவர்திருவள்ளுவர் கையாளும் இடங்களில் மகளைப் புறக்கணித்து மகனைமட்டுமேஉயர்த்தும் வகையில் அவர் எழுதியுள்ளதாகப்  பலரும்தவறானவிளக்கங்கள்அளித்துள்ளனர். இவற்றை மறுத்து மகன் எனக் குறிப்பிடும் இடங்கள் மகளுக்கும்பொருந்துவதைப் பேராசிரியர் விளக்குகிறார். சான்றோன் எனக் கேட்ட தாய், தந்தைமகற்காற்றும் நன்றி,  மகன் தந்தைக்காற்றும் உதவி, கொழுநன் தொழுதெழுவாள்முதலான குறளடிகளுக்கு ஆணையும் பெண்ணையும் இணையாகக் கருதிய அக்காலச்சூழலையும் திருவள்ளுவர் கருத்தையும் நன்கு விளக்கி யுள்ளார். இவ்வாறுபெண்களும் ஆண்களும் இணை என்ற பழந்தமிழ்நெறிக்கு மாறான பிறரின்  விளக்கங்களுக்குப் பேராசிரியர் தந்துள்ள மறுப்புகள் அனைவரும்…

தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார் – முனைவர் மறைமலை

தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார்   எண்ணற்ற பேராசிரியர்கள் தமிழுக்குத்தொண்டாற்றியுள்ளனர். தமது ஆய்வு நூல்களின் வழியாகவும் உரைகளின் மூலமும்சொற்பொழிவுகளின் வாயிலாகவும் தமிழ் இலக்கிய இலக்கணங்களின் பெருமையை எடுத்தியம்பியுள்ளனர். ஆனால் தமிழுக்குத் தீங்கென்று உரைக்கக் கேட்டமாத்திரத்திலே நரம்பெல்லாம் இரும்பாக்கி நனவெல்லாம் உணர்வாக்கிக் கிளர்ந்தெழுந்து உரிமைப் போர்க்களம் புகுந்த போராளியாகத் திகழ்ந்த ஒரே பேராசிரியர் இலக்குவனார் மட்டுமேயாவர். தமிழ் வளர்த்த பேராசிரியராக மட்டுமின்றித் தமிழ் உரிமைப் போராசிரியராகவும் அவர் திகழ்ந்தமையாலேயே என்னைப் போன்ற அவருடைய மாணவர்கள் நெஞ்சிலே அவர் நிறைந்துள்ளார்.   அவருடைய புதல்வர்களில் ஒருவன் என்னும்…

கலைச்சொல் தெளிவோம் 19: காழ்நீர் –coffee

   19:   காழ்நீர் –coffee   தேயிலையிலிருந்து ஆக்கும் நீரைத் தேநீர் எனச் சுவையாகச் சொல்கிறோம். ஆனால் காப்பி(coffee) என்பதற்கான சரியான சொல் வழக்கில் வராமையால் காப்பி என்பதே நிலைக்கிறது. காப்பிக் கொட்டையில் இருந்து உருவாக்குவதால் கொட்டை வடிநீர் எனச் சொல்லப்பட்டது வேறு வகையாகத் தோன்றி மக்கள் நாவில் இடம்பெறவில்லை. கன்றின் குளம்படி போன்று உள்ளதால் காப்பி எனப் பெயர் பெற்ற மூலச் சொல் அடிப்படையில் குளம்பி எனச் சொல்லப்பட்டதும் இதனால் குழம்பிப் போவதாகக் கூறிப் பயன்பாட்டுத் தன்மையை இழந்துள்ளது. காழ் எனில் கொட்டை…

கலைச்சொல் தெளிவோம் 18: சூட்டடுப்பு–oven

  18:   சூட்டடுப்பு–oven அடுப்புஎன்னும் சொல்லைப் புலவர்கள்   பின்வரும் இடங்களில் கையாண்டுள்ளனர். முரவுவாய்க் குழிசி முரிஅடுப்பு ஏற்றி (பெரு 99) ஆண்தலை அணங்கு அடுப்பின் (மது 29) கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பே! (பதி 18.6) அடைஅடுப்பு அறியா அருவி ஆம்பல் (பதி 63.19) உமண்சாத்து இறந்த ஒழிகல் அடுப்பில் (அக 119.8) தீஇல் அடுப்பின் அரங்கம் போல (அக 137.11) பல்கோட்டு அடுப்பில் பால்உலை இரீஇ (அக 141.15) உமண்உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின் (அக 159.4) களிபடு குழிசிக்கல் அடுப்பு ஏற்றி…

இலக்குவனார் குறள்நெறி நாளிதழ் தொடங்கியதன் காரணம்

 குறள்நெறி இதழ்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் திங்கள் இருமுறைதான் வந்தன. தமிழன்பர்கள் வார இதழாக மாற்றக் கூடாதா? பக்கங்களைக் கூட்டக்கூடாதா என்றெல்லாம் வேண்டினர். வாரஇதழாக மாற்றுவதைவிட நாளிதழாக மாற்றுவதே தக்க பணியாகும் எனப் பேராசிரியர் கருதினார். இதழ்கள் வாயிலாக மொழிக்கொலை நடைபெறுவதால் அதைத் தடுத்து நிறுத்தத் தாமே முன்முறையாக நன்முறையாக நற்றமிழில் நாளிதழ் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து குறள்நெறி நாளிதழும் தொடங்கினார். இதுகுறித்த நாளிதழ் ஆசிரிய உரை வருமாறு: “நற்றமிழில் உரையாட வேண்டும், எழுத வேண்டும் என்று கருதுபவர்களால்கூட நற்றமிழைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை…