இதழ்களின் நிலை என்ன?
இன்று வெளிவரும் பெரும்பாலான இதழ்களின் நிலை என்ன? மக்களிடம் பொறிநுகர் உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழும்படிச் செய்வதையே குறிக்கோளாக் கொண்டு செயல்படுகின்றன. நல்லறிவு கொடுத்து மக்களைத் திருத்தி நல் வழிப்படுத்தவேண்டிய கடமை இதழ்களுக்குண்டு. அக்கடமையைப் பலவும் மறந்து விடுகின்றன. நாட்டில் பெரும்பாலான மக்கள் வளர்ச்சியற்ற நிலையிலேயேயிருந்து வருகிறார்கள். ஆகவே, அவர்களின் நிலைக்கு இறங்கிச் சென்று தங்களின் அறிவை விற்றால்தான் பணம் சேர்க்க முடியும் என்று கருதி அவ்விதமே செய்கிறார்கள். நான் அவர்களைக் குறைகூற வேண்டுமென்பதற்காக இவற்றைக் கூறவில்லை. செய்தி இதழ்களில் புலவர்களுக்கும் போதிய விளம்பரம் கொடுப்பது கிடையாது….
நாணுத்தரும்
– முனைவர் ஔவை நடராசன் ஒரு மொழி வருவதனால் பிறிதொரு மொழி கெடும் என்பார் கூற்றினைச் சிலர் எள்ளி நகையாடுகின்றனர். தமிழ்மொழியோடு வடசொற்கள் கலந்தமையாலேயே மலையாளம், கன்னடம் முதலான மொழிகள் தோன்றின என்பது மொழி நூலாரின் முடிபு. இன்றும் சிலர் ஆங்கிலச் சொற்களையும் பிற மொழிச் சொற்களையும்
காப்பாற்றுங்கள்……….!
– களப்பாள் குமரன் எங்கே தமிழ்……. எங்கே தமிழ்…..? கல்விக்கூடத்தில் தமிழ் உண்டா… கடைத்தெருவில் தமிழ் உண்டா….? ஆலயத்தில் தமிழ் உண்டா….? ஆட்சியில் தமிழ் உண்டா தொலைக்காட்சியில் தமிழ் உண்டா…. திரைப்படத்தில் தமிழ் உண்டா….. தமிழ்நாட்டில் தான் தமிழ் உண்டா….எங்கே தமிழ்… தமிழ் எங்கே….?
எது சொந்தம்?
– இன எழுச்சிக் கவிஞர் கவிஞர் இராமச்சந்திரன் விளைந்தபயிர் வளைந்தபடி குனிந்த வாறே வீடெல்லாம் துடைப்பத்தால் பெருக்கி நின்றாள்! கலைந்தபடி கிடந்திருந்த குப்பை கூட்டி காலடியில் அவள்குவித்தாள்! கட்டில் மீது
சோர்விற்கு விடைகொடு!
– தத்துவக் கவிஞர் இ பத்ருத்தீன் அலைபேசி : 9444272269 இளைஞனே ! வெட்டுவதும், துண்டிப்பதும் தான் வேலையென்றாலும், கத்தரிக்கோலை எவரும் கைது செய்யக் கோருவதில்லை ! அடிப்பதற்குச் சம்மட்டியை அருகிலேயே வைத்துக்கொண்டு – சிறு தீப்பொறியை வெங்கனலாக ஊதிப் பெருக்குவதே வேலையென்றாலும் – பட்டறைத் துருத்தியை எவரும் பழிப்பதில்லை !
இனி வேண்டா எதிர்மறை எண்ணங்கள்
இனி வேண்டா எதிர்மறை எண்ணங்கள் – சு.கிருட்டிணன் காட்சி – 1 சேரன் : டேய்! சேந்தன் என்ன இது புது மிதிவண்டியா? அருமையாக இருக்கிறதே! எப்பொழுது வாங்கினாய்? சேந்தன் :நேற்றைக்குத்தான்! எங்க மாமா எனக்குப் பிறந்த நாள் பரிசாக வாங்கித் தந்திருக்கிறார்.
மருமகள்
மருமகள் – க.தமிழமல்லன் “இனி ஒரு நொடி கூட நான் இங்கிருக்கமாட்டேன். உங்க அப்பாவுக்குக் கொஞ்சங் கூட நாகரிகமே தெரியவில்லை. இவ்வளவு முதுமையிலும் கீழ்த்தரப்பண்பு போகவில்லையே! ஒன்று நான் இருக்க வேண்டும் அல்லது அவர் இருக்க வேண்டும். உடனே வழிபண்ணுங்கள்”
களம் வெல்வாய்!
அகர முதல இணைய இதழே! பிற மொழிக்கொலை தடுக்க அறிவு தா! ! கொப்பழிக்கும் எரிமலை தரும் வீரம் நீ! காற்று துப்பி விழுங்கும் சூறாவளியின் ஈரம் நீ !
காக்கும் எம்மொழி ஆள்வோர் அறிக
பூத்திடும் மழலையர் பள்ளிகள் எல்லாம் புதைத்திடும் ஆங்கில மொழியின் மோகம் புத்தன் நெறிசொல் இலங்கை மண்ணில் புதைகுழி வாழ்வாய் தமிழர் வாழ்க்கை நாத்திக ஆத்திகம் பேசும் நம்மோர் நயத்தகு மேடையில் நடன ஆட்டம் தீத்திறம் இல்லா நம்மோர் செயலால் திக்கற் றோராய் நம்தமிழ் மக்கள் தலைமை தலைமை என்றே நம்மோர் தலைவர் என்றே அனைவரும் உள்ளார் தலைமை காக்கும் தலைமை இல்லை தவநெறி போற்றும் தொண்டர் இல்லை அவனிவன் எனறே குறையாய் மொழிவான் அவனியே போற்றும் நிறையை எள்ளுவான் தவநிறை நம்மின் தடத்தை மறக்க…
