தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2 புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17, 18 – 2015 தமிழ் இணையப் பல்கலைக் கழகம் கலையரங்கம், சென்னை–25. கருத்தரங்கம் பற்றி   ஒரு மொழியில் எழுதுவதற்கும், படிப்பதற்கும் உகந்த வகையிலும், அம்மொழியை எழுதும்போதும், அச்சிடும்போதும், காட்சிப்படுத்தும்போதும் கவரும் வகையிலும் அம்மொழியின் எழுத்துருக்களை ஒழுங்கமைக்கின்ற கலையாகவும் தொழில்நுட்பமாகவும் விளங்குவது எழுத்துருவியல் ஆகும். எழுத்துருக்களை ஒழுங்கமைப்பது என்பது, எழுத்துருவின் வடிவங்கள், புள்ளிக் கணக்கில் அவற்றின் உருவளவு, வரியின் நீளம், வரிகளுக்கு இடையேயான…

தமிழை மறவாதிருக்க உறுதி ஏற்பிர்! விவரம் அனுப்புவீர்! – தமிழ்க்காப்புக்கழகம்

நாம் தமிழரெனில் உறுதி ஏற்போம்! பெயர் விவரம் வெளியிடப்பெறும். உலகத் தமிழன்பர்களே! தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும். நம் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாகத் திகழ வேண்டும். தமிழர் உலகெங்கும் முதன்மையிடம் பெற வேண்டும் எனில் தமிழ் எங்கெங்கும் தலைமையிடம் பெற வேண்டும். அதற்கு உழைப்பதே நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கு உடன்படுபவர்கள், பின்வரும் உறுதிமொழிகளை ஏற்க வேண்டுகிறோம்.   தமிழில் பிற மொழிச் சொற்களைக் கலந்து பேசவோ பிற மொழி எழுத்துகளைக் கலந்து…

தமிழ்வழிக்கல்வி குறித்து செய்திகள் 7 தொ.கா.வில் நான். . . .

  புரட்டாசி 11, 2046 / செப்.28, 2015 செய்தி 7 தமிழ்த் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு : இரவு 9.00 – 10.00 மணி கேள்விநேரம் நிகழ்ச்சியில் தமிழ்வழிக்கல்வி  குறித்து உரையாடுகிறேன். உடன் தோழர் தியாகுவும் உரையாடுகிறார். மறு ஒளிபரப்பு 12.01 இணையத்தில் காண : http://ns7.tv/ta நிகழ்ச்சியாளர் : செந்தில்;  ஒருங்கிணைப்பாளர் : அமீது அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

சாதிச்சான்றிதழுக்காக உரூ.50, 000 கொடுக்க வேண்டிய மலைவேடன் மக்கள்

 சாதிச்சான்றிதழுக்காக உரூ.50, 000  கொடுக்க வேண்டிய மலைவேடன் மக்கள்     தன் சொந்த நாட்டில் குடியுரிமை, சாதிச்சான்றிதழ் இல்லாமல் அலைக்கழிக்கப்படும் சமூகங்களில் ஒன்று மலைவேடன் சமூகம். இந்தியாவில் சாதியை வைத்தே அரசியல் செய்து கொண்டு வருகிறார்கள். அதே வேளையில் சாதிச்சான்றிதழுக்காகவும் அலைக்கழிக்கப்படுகிறது ஒரு சமூகம். தேனி மாவட்டத்தில் பரசுராமபுரம், மீனாட்சிபுரம் அதன் அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு முதலான பகுதிகளில் மலைவேடன் சமூகத்தைச்சேர்ந்தவர்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள கட்டக்காமன்பட்டி ஊராட்சியில் மலைவேடன் சமூகத்திற்காக ஒரு வகுதியும்(வார்டும்) ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும்…

பனுவல் வரலாற்றுப் பயணம் 4 : திருக்கோவிலூர்

பனுவல் வரலாற்றுப் பயணம் 4 : கீழ்வரும் திருக்கோவிலூர் சுற்றியுள்ள பகுதிகள் திருவெண்ணெய்நல்லூர் 2. கிராமம் 3.திருக்கோவிலூர் சண்பை(சம்பை) – விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்தில் ஜம்பை உள்ளது. இக்கல்வெட்டு உள்ள இடத்திற்குத் தாசிமடம் என்று பெயர். இது 198இல் தொல்பொருள் ஆய்வுக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது. காலம்: பொ.ஆ.1 ஆம் நூற்றாண்டு (தோராயமானது ) மொழி: தமிழ் எழுத்து: தமிழி (சங்க காலத்தமிழ் எழுத்து) வழிகாட்டி : ஆய்வாளர் பேரா. பத்மாவதி, மங்கைஇராகவன் நாள் : புரட்டாசி 17, 2046 / அக்டோபர் 4,…

காவிரி உரிமை மீட்புப் போராட்டம் – பனங்குடி

புரட்டாசி 11, 2046 – செப்டம்பர் 28, 2015 அன்பான தோழர்களுக்கு வணக்கம்!   தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும், 12 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும் பயன்பட்டுத், தமிழர்களின் தேசிய ஆறாக விளங்குவது காவிரி ஆறாகும்.   அதன் உரிமையை மீட்பதற்கான போராட்டத்தில், சென்னை முதன்மைப் பங்கு வகிக்க வேண்டும். ஏனெனில், வீராணம் ஏரியில் நிரப்பப்படும் காவிரி நீரே, சென்னைக்கு மிகப்பெரும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது என்பதை நாம் மறந்துவிடலாகாது! காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, வரும் புரட்டாசி 11, 2046…

இனப்படுகொலைக்கு எதிரான தமிழகத் தீர்மானமும் இந்திய நிலைப்பாடும் – நான் பங்கேற்கும் உரையாடல்

  அன்புடையீர், வணக்கம். ஆவணி 30, 2046 / செப்.16, 2015 புதன் கிழமை இரவு 7.00 மணிக்கு விண் தொலைக்காட்சி – WIN TV [எழுத்தாளர், தொகுப்பாளர், செவ்வியாளர் நிசந்தன் வழங்கும்] ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில்   இனப்படுகொலைக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானம், இந்திய நிலைப்பாடு, அமெரிக்க நிலைப்பாடு இந்திய நிலைப்பாடு தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்று ஈழத்தமிழர்க்கு உரிய நீதி வழங்க வேண்டி வலியுறுத்த உள்ளேன். மறு ஒளிபரப்பு செப்.17 இரவு – அஃதாவது செப். 18 வைகறை 1.00 மணி….

உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்! – மொத்தப் பரிசுத் தொகை உரூ.50,000!

“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை” “தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்” இணைந்து நடத்தும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்! மொத்தப் பரிசுத் தொகை உரூ.50,000! ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்! முதல் பரிசு உரூ.5,000 இரண்டாம் பரிசு உரூ.3,000 மூன்றாம் பரிசு உரூ.2,000 ஒவ்வொரு பரிசுடனும் “தமிழ்க்களஞ்சியம்“ இணையம் வழங்கும் மதிப்புமிகு வெற்றிக் கேடயம்! இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான மொத்தப் பரிசுத் தொகை உரூ.50,000! வகை-(1): கணிணியில் தமிழ்வளர்ச்சி- கட்டுரைப் போட்டி: கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வக்…

சென்னையில் ‘குடியம்’ ஆவணப்படம் திரையிடல்

புரட்டாசி 02, 2046 /19-09-2015  மாலை 05.00 தாகூர் திரைப்பட மையம் இராசா அண்ணாமலைபுரம்   திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரிலிருந்து 20  புதுக்கல் தொலைவில் உள்ள குடியம் எனுமிடத்தில் பழையகற்காலத்திலுள்ள மனிதர்கள் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. அந்தப் குதிகளிலுள்ள குகைகள், பாறையமைவுகள்   2 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை விளக்கும் ஆவணப்படமே இந்தக் ‘குடியம்’. இதன் மூலம் தமிழர்களின் தொன்மம் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறியலாம். இங்குள்ள ஒவ்வொரு பாறையும் 140  பேரடி(மீட்டர்) உயரமுள்ளவை. இதுகுறித்து ஆவணப்படத்தில் அறிஞர்கள் கருத்துரைகள் இடம் பெறுகின்றன. …

85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்

பெரும்பாலும் பெரும்பான்மைப் பதிவுகள் சரியில்லை.  இத்தகவலைப் பகிர்ந்த கரிசிற்காக(-பாவத்திற்காக)ப் பலரும் தளத்தினருடன் தொடர்பு  கொள்ளாமல் நம்மையே துன்புறுத்துகின்றனர். எனவே இணைப்பு முகவரிகளை எடுத்து விட்டோம். பட்டியல் தகவலுக்காகத் தரப்பட்டுள்ளது. எங்கும் கிடைத்தால் காணலாம். சித்தர் நூல்கள் தொடர்பாக் சில தளங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இணையத்தில் தேடிக்காண்க! –  அகரமுதல 85 சித்தர் நூல்கள்: இப்போது பதிவிறக்கம் செய்யலாம். உறவுகளே கீழே உள்ள நிறைய சித்தர் நூல்கள் மிகவும் அரிதான நூல்கள். …………….             …………..      ………….. …

பாராளுமன்றில் அறிஞர் அண்ணா – இந்து ஆங்கில நாளிதழ்

  பாராளுமன்றில் அறிஞர் அண்ணா   திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரும்பெருந் தலைவரான அறிஞர் அண்ணா அவர்கள் தமது பாராளுமன்ற முதற் சொற்பொழிவை வெறுப்பிற்கும், பகைமைக்கும், சினத்திற்கும் நடுவண் நிகழ்த்தினார்கள். அன்னார் முதற்பேச்சு இந்திய மேலவையின் வரலாற்றிலேயே ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். தமிழ்ப் பெருங்குடி மக்களால் ‘அண்ணா’ என்று அழைக்கப்படுகின்ற அரிய தலைவர் இவர். பிரிவினையாளர், இந்தித் திணிப்பின் இணையற்ற எதிர்ப்பாளர், சிறந்த சொற்பொழிவாளர் என்னும் புகழோடு இந்திய மேலவைக்கு வந்தார்.   அறிஞர் ஆங்கிலத்தில் நிகழ்த்திய முதற் பேச்சு ‘சொற்பெருமழை’ என்று பாராளுமன்ற…