‘சென்னை நாள்’ குறித்து வாகைத் தொலைக்காட்சி WIN TV இல் பங்கேற்கிறேன்.

ஆவணி 08, 2046 / ஆகத்து 25, 2015 காலை 11.00 – 12.00 மணி நேரத்தில் வாகைத் தொலைக்காட்சி WIN TV இல் ‘நீதிக்காக’ நிகழ்ச்சியில் ‘சென்னை நாள்’ குறித்து நடைபெறும் கலந்துரையாடலில் பங்கேற்கிறேன். http://wintvindia.com  மின்வரியில் இணையத்திலும் காணலாம். வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன். நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கந்துவட்டி தலைதூக்கும் அவலம்

 கந்துவட்டி தலைதூக்கும் அவலம்   தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கந்துவட்டி மீண்டும் தலைதூக்குவதால் பல குடும்பங்கள் தற்கொலையின் விளிம்பிற்குச் செல்கின்றன.   தமிழக முதல்வர்அவர்கள் கந்துவட்டிக்கொடுமையிலிருந்து மீளவேண்டும் என நினைத்து அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தார். அதன்படி கந்துவட்டி, கடப்பாரை வட்டி, அலகு(மீட்டர்)வட்டி,   ஓட்ட(இரன்)வட்டி எனப் பலகோரமுகங்கள் செயல் இழந்தன. அதன்பின்னர் மீண்டும் கந்துவட்டி ஆசாமிகள் தங்கள் கோரமுகத்தைக் காட்டி 100க்கு 5 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரை வட்டி வாங்கி வட்டிக்கு வாங்கியவர்களின் வீடு, நிலம் போன்றவற்றைப்பறிக்கின்றனர்.   சில கந்துவட்டி…

மகிந்தவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – இலீ இரியன்னன்

மகிந்தவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – இலீ இரியன்னன் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த இராசபக்சேவைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும்” என்று ஆத்திரேலிய பேரவை(செனட் சபை) உறுப்பினர் இலீ இரியன்னன் (Lee Rhiannon) தெரிவித்துள்ளார்.  நடைபெற்றுமுடிந்த எட்டாவது நாடாளுமன்றத் தேர்தல்களின் பின்னர் அவர் தனது சுட்டுரையில்(டுவிட்டரில்) இந்தக் கருத்தைப் பதிவிட்டுள்ளார். தேர்தலில் அடைந்த தோல்வியானது, மகிந்த மற்றும் அவரது உடன்பிறப்புகளை     ஃகேக்கில் அமைந்துள்ள பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றில் போர்க்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முற்படுத்தக்கூடிய வாய்ப்பை அதிகரித்துள்ளது என்றும் அவர் அதில்…

மலைவேடன் சாதிச்சான்றுக்காக 20 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படும் சிற்றூர் மக்கள்

   தேவதானப்பட்டி அருகே உள்ள பரசுராமபுரம், மீனாட்சிபுரம் முதலான ஊர்களில் வசிக்கும் மக்கள் சாதிச்சான்றிதழுக்காக 20 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படுகின்றனர்.   தேவதானப்பட்டி அருகே மீனாட்சிபுரம், பரசுராமபுரம் என இரண்டு சிற்றூர்கள் உள்ளன. இவற்றில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இச்சமூக மக்கள் தங்கள் பரம்பரைத் தொழிலான வேட்டையாடும் தொழிலை விட்டுவிட்டுத் தற்பொழுது வேளாண்மை, கூலி வேலை எனச் செய்துவருகின்றனர். இம் மக்களுக்குச் சான்றிதழ் கடந்த 1984 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் இவர்கள், சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால்…

தேனி மாவட்டத்தில் சூறாவளிக்காற்றால் சேதமடைந்த நெற்பயிர்கள்

தேனி மாவட்டத்தில்   சூறாவளிக்காற்றால் சேதமடைந்த நெற்பயிர்கள்   தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியத்திற்குற்பட்ட குள்ளப்புரம் பகுதியில் சூறாவளிக்காற்றால் நெற்பயிர்கள் சேதம் அடைந்ததால் உழவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.   தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம் பகுதியில் ஏறத்தாழ நூற்றுக்கணக்கான காணி(ஏக்கர்) பரப்பளவில் நெல் பயிரிடல் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக மழையும், பலத்த சூறாவளிக்காற்றும் வீசுவதால் அறுவடைக்கு   ஆயத்தமாக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து பூமியில் விழுந்து உள்ளன. இதனால் பல நூறாயிரம் மதிப்புள்ள நெற்பயிர் வீணாயின. தேவதானப்பட்டிப் பகுதியில் இயற்கைச் சீற்றத்தால் வாழை, கரும்பு,…

கனடியத் தமிழ் இளையோர் நடத்தும் கிளித்தட்டு 2015 நிகழ்வு

கனடியத் தமிழ் இளையோர் நடத்தும் கிளித்தட்டு 2015 நிகழ்வு   கனடியத் தமிழ் இளையோர் நடத்தும் கிளித்தட்டு 2015 நிகழ்வு வெற்றிகரமாக 5 ஆம் ஆண்டாக இவ்வாண்டும் ஆவணி 13 / ஆகத்து மாதம் 30 ஆம் நாள் மாநாயகர்(மேசர்) அப்பாசு அலி பூங்காவில் காலை 9 மணிக்குத் தொடங்கி நடைபெற உள்ளது.  அழிந்து போகும் தமிழர் தாயாக மண்ணின் நினைவுகளை மீட்கும் தமிழீழத்தின் தேசிய விளையாட்டான கிளித்தட்டு விளையாட்டு கனடிய மண்ணில் இளையவர்களால் அணிகளாக அணி வகுத்து மாபெரும் விளையாட்டுப் போட்டி நிகழ்வாக…

26 அன்று உண்ணா நோன்பு: திரண்டு வாருங்கள்! – வைகோ

26 அன்று  உண்ணா நோன்பு: சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்கத் திரண்டு வாருங்கள்!  வைகோ வேண்டுகோள்! ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–   ஆந்திர மாநிலம் சேசாசலம் வனப்பகுதியில் ஆந்திர மாநில வனத்துறை சிறப்புக் காவல்படையினரால் 20 தமிழர்கள் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுச், சுட்டுக்கொல்லப்பட்டு, அந்தச் சடலங்களைக் காட்டுக்குள் கொண்டுபோய் வீசி எறிந்து  கிடங்கில்  வைக்கப்பட்டிருந்த பழைய செம்மரக்கட்டைகளை எடுத்துப் பக்கத்தில் போட்டுவிட்டு, தமிழர்கள் கள்ளத்துப்பாக்கி  முதலான ஆயுதங்களோடு காவல் துறையினரைத் தாக்கியதாகவும், அந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அப்பட்டமான பொய்யான கட்டுக்கதையைச்…

தமிழ்த்தேசமே என்கின்ற இலட்சியப் பாதை – கசேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்த்தேசம் என்கின்ற இலட்சியப் பாதையில் இருந்து நாம் விலகப்போவதில்லை – கசேந்திரகுமார் பொன்னம்பலம்!   எமது கட்சியின் கொள்கையை ஏற்று வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றியினைக் கூறிக்கொள்ளுகின்றோம். எமது கொள்கையினை முன்னெடுத்துச் செல்லும் எமது செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும். கடந்த காலங்களில் குறிப்பாகத் தேர்தல் காலங்களில் எமது பல செயற்பாடுகளுக்குப் பல்வேறு கோணங்களில் இருந்து அறைகூவல்கள் கொடுக்கப்பட்டிருந்தன. எங்களுடைய கருத்துகள் மக்கள் மட்டத்தில் செல்வதற்கும் பெரும் அறைகூவல்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது.  எங்களுடைய மக்களுக்கான அடையாளத்தினைக் கொடுக்கக்கூடியத் “தமிழ்தேசியம்” தமிழ் அரசியலில் இருந்து இல்லாது…

வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் கவர்வு – வைகை அனிசு

வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் கவர்வு   தேவதானப்பட்டிப் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களைக் கவர்ந்து கட்டடங்கள் கட்டி வருவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.   தேவதானப்பட்டி அருகே உள்ள மருகால்பட்டியில் சேமக்காடுகள் என்று அழைக்கப்படும் நிலங்கள் வனத்துறைக்குச் சொந்தமானவை. சேமக்காடுகள் பகுதியில் கால்நடைகள் மேய்ப்பதற்கும், அப்பகுதியில் உள்ள கனிமங்கள், மரங்கள் வெட்டுவதற்கும் வனத்துறை ஏற்கெனவே தடை விதித்துள்ளது.   இப்பொழுது மருகால்பட்டிப் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களைத் தனியர்கள் கவர்ந்து கட்டடங்கள் எழுப்பி வருகின்றனர். இவ்வாறு கட்டடங்களை எழுப்பிச் சேமக்காடுகள்…

தேவதானப்பட்டியில் ஆழ்துளைக் கிணறு போடாமல் மோசடி

தேவதானப்பட்டியில்  ஆழ்துளைக் கிணறு போடாமல் மோசடி தேவதானப்பட்டி ஊராட்சிப்பகுதிகளில்  ஆழ்துளைக் கிணறு மோசடி நடைபெற்றுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொள்ளவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.  தேவதானப்பட்டி அருகே உள்ள 17 ஊராட்சிகளுக்கும் வறட்சித் துடைப்புத்திட்டத்தின் கீழ்ச் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ்  உரூ1.50  இலட்சமும், ஆழ்துளைக்கிணறு,   தரைத்தொட்டி அமைப்பதற்கு  உரூ. 2.25  இலட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தக்காரர்களிடம் அதற்கான பணி வழங்கப்பட்டது. இதில் சில ஊராட்சிகளில் ஆழ்துளைக்கிணறு அமைக்காமல் ஏற்கெனவே ஊராட்சிகளுக்கு வரும் குடிநீர்க் குழாய் இணைப்பைத் தோண்டி அதிலிருந்து இயந்திரம்…

ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைய உதவுங்கள்!

ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைய உதவுங்கள்!   உலகின் மிகவும் புகழ் வாய்ந்த பல்கலைக்கழங்களில் ஒன்றான ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தனியாகத் தமிழ்துறை ஒன்று தொடங்கப்படவுள்ளது.   ஆறு பேராயிரம்(மில்லியன்) அமெரிக்க தாலர்கள் முதலீட்டில் இந்தத் துறை அங்கே தொடங்கப்படவுள்ளது என இந்த முன்னெடுப்பைச் செய்தவர்களில் ஒருவரான   மருத்துவர் விசயராகவன் சானகிராமன் பி.ஒ.நி. / பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.   அவரும் அவரது நண்பரும் மருத்துவருமான திருஞானசம்பந்தனும் ஆளுக்கு அரை நூறாயிரம் தாலர்களை இதற்காக அளித்துள்ளதாகவும், எஞ்சிய ஐந்து பேராயிரம்(மில்லியன்) தாலர்களை வட அமெரிக்காவில் வாழும்…

வைகை அனிசு தாயார் மும்தாசு பேகம் மறைவு

  ‘அகரமுதல’ இதழின் சிறப்புச் செய்தியாளரும் கட்டுரையாளரும், தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை உடையவருமான தமிழ்நாடு இதழ்கள் ஊடகச் செய்தியாளர்கள் ஒன்றியத்தின் தேனி மாவட்டச் செயலாளரும், இதழ்கள், தொலைக்காட்சிகளின் செய்தியாளரும், வரலாற்றுக் கட்டுரையாளரும் கல்வெட்டு ஆய்வாளரும் தொல்லியல் சார் படைப்பாளருமான வைகை அனிசு அவர்களின் தயாரும் காலஞ்சென்ற ஆசிரியர் அப்துல்வகாப்பின் மனைவியுமான ஓய்வு பெற்ற ஆசிரியர் மும்தாசு பேகம் அவர்கள் இன்று (ஆடி 31, 2046 / ஆகத்து 16, 2015) காலை 8.30 மணியளவில் இயற்கை எய்தினார். அவருடைய உடல் நல்லடக்கம் தேவதானப்பட்டி…