இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்! அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

சென்னை இந்திப் பிரசார சபை முன்பாக இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்! அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்! இடம்: இந்திப் பிரச்சார சபை, தியாகராயர் நகர், சென்னை. காலம்: தி.பி. 2048 – சித்திரை 25 (08.05.2017) திங்கள் காலை 10 மணி தலைமை : தோழர் கி. வேங்கடராமன் பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.    இந்தி மொழியைத் தமிழ்நாட்டின் கல்வி மொழியாக, பேச்சு மொழியாகத் திணித்திடப் பா.ச.க.அரசு கடற்புயல்(சுனாமி) வேகத்தில் செயல்படுகிறது. அதே வேகத்தில் தமிழைப் புறந் தள்ளித் தீர்த்துக் கட்டவும் முயல்கிறது. அண்மையில் பா.ச.க. அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்டமாக நடுவண் பள்ளிக் கல்விவாரியப் (C.B.S.E.) பள்ளிகளிலும், கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளிலும் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை இந்தி        கட்டாய மொழிப்பாடமாக்கப்படும் என்று…

செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ங

செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் – ங (2013 -14, 2014-15, 2015 – 16)   2013-14, 2014-15, 2015 – 16 ஆம் ஆண்டுகளுக்கான (மூன்று ஆண்டுகள்)  செம்மொழி விருதுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் சித்திரை 26, 2048 / 09.05.2017 செவ்வாய்க் கிழமை அன்று குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட உள்ளன.  இந்த மூன்று ஆண்டுகளுக்கான விருதுகள் பெறுவோரது  விவரம் வருமாறு:   தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞருக்கு ஒவ்வோராண்டும் சான்றிதழும், நினைவுப் பரிசும் உரூ.5…

‘முதல் மொழி தமிழே!’ – மின்னூல் பதிவு நாள் நீட்டிப்பு

‘முதல் மொழி தமிழே!’  – மின்னூல் பதிவு நாள் நீட்டிப்பு!   வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக ‘உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!’ என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் கேட்டிருந்தோம்.   எமது அறிவிப்பைப் பணிவோடு ஏற்றுத் தமிழ்ப் பற்றாளர்கள் ஒன்பதின்மர்  தமது படைப்புகளை அனுப்பி இருந்தனர். சிலர் கால நீடிப்புக் கேட்டிருந்தனர். எல்லோரது ஒத்துழைப்பும் அல்லது எல்லோரது கூட்டு…

செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பு! அயல்நாட்டுத்தமிழறிஞர்களுக்கு அவமதிப்பு!

செம்மொழித்தமிழுக்கான 2014-2015,  2015-2016 ஆம் ஆண்டுகளுக்குரிய குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு :- 2014-2015 தொல்காப்பியர் விருது – முனைவர் அ.தட்சிணாமூர்த்தி இளம் அறிஞர் விருதுகள் முனைவர் அ.சதீசு முனைவர் செ.முத்துச்செல்வன் முனைவர் ப.திருஞானசம்பந்தம்  முனைவர்  மா.வசந்தகுமாரி முனைவர் கோ.சதீசு 2015- 2016 தொல்காப்பியர் விருது – முனைவர்  இரா.கலைக்கோவன் இளம் அறிஞர் விருதுகள் முனைவர் மு.வனிதா முனைவர் வெ.பிரகாசு முனைவர் சிரீ. பிரேம்குமார் முனைவர் க.பாலாசி முனைவர்  மு.முனீசு மூர்த்தி வழக்கம்போல் இவ்வாண்டுகளிலும் அயல்நாட்டுத் தமிழறிஞர்களுக்கான குறள்பீட விருதுகள் அறிவிக்கப்படவில்லை. …

மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கக் கூடாது! – தாலின்

பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்: மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கக் கூடாது! தாலின் அறிக்கை  “தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அதிகாரம் அளிக்கும் அவசரத்தில் மாநிலங்களின் உரிமைகளைப்பறிப்பதையும், மாநிலங்களிலுள்ள ‘பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களை’ செயலிழக்க வைப்பதையும் நிச்சயம் ஏற்றுக் கொள்ளமுடியாது” என்று தி.மு.க.ச் செயல் தலைவர் மு.க. தாலின் விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தளபதி மு.க. தாலின்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- ‘தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு’ அரசியல் சட்டத் தகுதி அளிக்கும் 123 ஆவது அரசியல் சட்டத்…

மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017

மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017   வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக “உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழே!” என்ற மின்னூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக)ப் பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.   சிறந்த மூன்று பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம். அஃதாவது, நன்நூல்.கொம் ஊடாகத் தாங்கள் விரும்பிய நூல்களைப் பெறப் பத்து தாலர் பெறுமதியான வெகுமதி இதழ்கள் (Gift Certificates) சிறந்த மூன்று பதிவுகளை அனுப்பிய ஒவ்வொருவருக்கும்…

இலக்கிய ஆளுமைகளுடன் ஞாயிறுதோறும் சந்திப்பு, சென்னை

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இலக்கிய ஆளுமைகளுடன் ஞாயிறுதோறும் சந்திப்பு    போட்டித் தேர்வுக்கு  ஆயத்தமாகும் மாணவர்களுக்கென  இ.ஆப., இ.கா.ப., இ.வ.ப., (இந்திய வனப்பணி)  முதலான  அனைத்து இந்தியப் பணிகளில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள், துறை வல்லுநர்களுடன் சந்திப்பு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கோடைக் கொண்டாட்டம், சென்னை

குழந்தைகளுக்கான கோடைக் கால முகாம்   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாசகர்கள், குழந்தைகள் நலனுக்காகப் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  ‘கோடைக் கொண்டாட்டம்’ என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான கதை சொல்லி,    இசை, ஓவியம், கைவினைப் பொருட்கள் செய்தல், அறிவியல் செயல்திறன், பொம்மலாட்டம், ஓகம்(யோகா), ஞாபகத்திறன் பயிற்சி, சதுரங்கம், வினாடி வினா,  புத்தகங்களைப் பற்றிய அறிமுகம், படக்கதை எழுதும் பயிற்சி, காகிதத்தில் பொம்மை செய்தல் போன்ற நிகழ்ச்சிகளும் பயிற்சிகளும் பங்குனி 19,  2048 / 01.04.2017 முதல் வைகாசி 17, 2048 /  31.05.2017 வரை…

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சனிக்கிழமைதோறும் பொன்மாலைப் பொழுது

  பொன்மாலைப் பொழுது அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், ‘பொன்மாலைப் பொழுது’ என்ற தலைப்பில் புகழ்மிகு இலக்கிய ஆளுமைகளுடன் சந்திப்பு  வாரந்தோறும் சனிக்கிழமை அன்று மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறவுள்ளது.  ஏப்பிரல் மாதத்தில் கீழ் வருமாறு  ஆளுமைகளுடன் சந்திப்பு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்குனி 19,2048 / 01.04.2017 : திரு நெல்லை செயந்தா பங்குனி 26, 2048/08.04.2017 : திரு சு.வெங்கடேசன் சித்திரை 02, 2948/ 15.04.2017 : திரு எசு.இராமகிருட்டிணன் சித்திரை 09, 2948/ 22.04.2017 :…

காவல்துறையில் 2500-க்கும் மேல் காலிப் பணியிடங்கள்!

காவல்துறைப் பணிச்சேர்க்கை 2017 காவல்துறையில் 2500-க்கும் மேல் காலிப் பணியிடங்கள்! காவல்துறையில் சேர்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய விரும்புவோர் காவல்துறையில் உள்ள புதிய காலிப் பணியிடங்களைப் பற்றிய முழுமையான பட்டியலை இங்கு காணலாம். இந்திய அரசுப் பணிகள் வலைப்பூ காவல்துறையிலுள்ள எல்லாக் காலிப் பணியிடங்களையும் பற்றிய முழுப் பட்டியலை அண்மையில் வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்தத் தகவலை ’அகரமுதல’ இதோ உங்களுக்கெனத் தமிழில் வழங்குகிறது. துறை மொத்தப் பணியிடங்கள் பணி நிலை கடைசி நாள் முழு விவரம் சார்க்கண்டு காவல்துறை 1500 உதவிக்…

மத்தியப் பல்கலைக்கழகங்களையும் மாநில அரசின் அதிகாரவரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். – சீமான்

மத்தியப் பல்கலைக்கழகங்களையும் மாநில அரசின் அதிகாரவரம்பிற்குள் கொண்டுவரவேண்டும்.  ச.நே.ப. மாணவர் முத்துக்கிருட்டிணன் மரணத்திற்கு உரிய நீதி உசாவல் வேண்டும்.  – சீமான் வலியுறுத்தல் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  ‘தற்போதைய வரலாறு’ பாடத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த சேலம் மாணவர் முத்துக்கிருட்டிணன் தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினையும், ஆழ்ந்த மனவேதனையினையும் தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்து, அவர்களது குடும்பத் துயரத்தில் நாம் தமிழர் கட்சி…

ஓவியர் புகழேந்தியின் ‘நானும் எனது நிறமும்’ தன் வரலாற்று நூல் – சென்னையில் வெளியீடு!

ஓவியர் புகழேந்தியின்  ‘நானும் எனது நிறமும்‘ தன் வரலாற்று நூல் – சென்னையில் வெளியீடு!   தமிழீழ ஆதரவு – தமிழர் உரிமை ஆதரவு – மதவெறி எதிர்ப்பு எனப் பல்வேறு தளங்களில் தமது ஓவியங்களின் மூலம் அழுத்தமான தடம் பதித்துள்ள ஓவியர் கு. புகழேந்தி  எழுதியுள்ள ‘நானும் எனது நிறமும்’ – தன்வரலாற்று நூல்,  மாசி 28, 2048 / 12.03.2017 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது.   சென்னை எம்ஞ்சியார். நகர் மகா அரங்கில்,  நடைபெற்ற இவ்விழாவுக்குத்  தமிழீழ உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன்  தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் திரு. தஞ்சை இராமமூர்த்தி,  தோழமை…