உயிர் பறிக்கப்பட்ட பொன்முருகன் குடும்பத்தார்க்கு உரூ 5 கோடி இழப்பீடு வழங்குக!

   பொன்முருகன் செய்தியாளர்களிடம் செல்வாக்குள்ள வளர்ந்து வரும் இதழாளர் ஆவார்.   ‘இன்றைய வணிகம்’ நாளிதழ் ஆசிரியர், ‘அரசியல் சதுரங்கம்’ மாத இதழ் ஆசிரியர் என இதழாசிரியப் பணியாற்றி வந்தவர்.  இந்தியன் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் ஆகத் தொண்டாற்றி யவர்.    30.4.2014 அன்று இரா. பொன்முருகன் சென்னை சோழவரம் நெடுஞ்சாலையில் துள்ளுந்து (மோட்டார் சைகிள்)வண்டியில் சென்றபோது மாலை 6.30 மணியளவில்  பாலத்தில் வண்டி மோதி மிகவும்  வலுத்த அடி ஏற்பட்டுவிட்டது. அவசரப்பண்டுவத்திற்காக, அம்பத்தூர் நிலா மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் பார்க்கப்பட்டது. பின்னர் 2.05.2014…

இதழாளர் பொன் முருகன் நினைவேந்தல் – படத்திறப்பு

19.05.2014 அன்று பொன்.முருகனின் நினைவேந்தல் நிகழ்வு பெரும்புலவர் கி.த.பச்சையப்பனார் தலைமையில் சென்னை திருவல்லிக்கேணி சிவ இளங்கோ இல்லத்தில் நடைபெற்றது.   அவ்வமயம், கவிஞானி அ. மறைமலையான் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தலைவர் திரு. ஏ.எம். விக்கிரமராசா அவர்கள் பொன்முருகனின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார்.   பேராசிரியர் மறைமலை இலக்குவனார், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சித் தலைவர் திரு. பெ. மணியரசன், பாவலர் தமிழேந்தி(மா.பெ.பொ.கட்சி),  சங்கப்பலகைத் தலைவர் தஞ்சைத் தமிழ்ப்பித்தன் மூத்த இதழாளர் டி.எசு.எசு.மணி, பொன் முருகனின் தந்தை அன்றில் இறைஎழிலன் ஆகியோர்…

சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகம்- ஐம்பெரு விழா

தொண்டை மண்டல வேளாளர்களின் சார்பு அமைப்பான சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகம் நடத்தும் ஐம்பெரு விழா! தொண்டை மண்டல வேளாளர்களின் சார்பு அமைப்பான சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகம் நடத்தும் ஐம்பெரும் விழா, சென்னை புரசைவாக்கத்தில் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள தொண்டை மண்டல வேளாளர்களின் சங்கத்தில் வரும்  சூன் 2 ஆம் நாளன்று  காலை 9 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. சேக்கிழார் பெருமானின் குருபூசை, திருமண வரன் விவரத்திற்கு புதிய இணைய தளம், அன்மையில் மறைந்த நீதியரசர் எசு….

வெள்ளாளர் கல்வி விழா!

கன்னியாகுமரி வெள்ளாளர் பேரவை நடத்தும் மாபெரும் வெள்ளாளர் கல்வி விழா! 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பொறியியல் கல்லூரியில் ‘தங்க விருது’ பெற்றவர்கள், அரசு/தனியார் பள்ளிகள/தொழில் நுட்பக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா எனக் கல்வி சார்ந்த அனைத்தையும் உள்ளடக்கி மாபெரும் ‘வெள்ளாளர் கல்வி விழா’, கன்னியாகுமரி வெள்ளாளர் பேரவை வரும் மே 31ஆம்  நாள் மாலை 4 மணிக்கு நகர்கோவில், வடசேரியில் உள்ள  இலெட்சுமி மகாலில் நடத்தப்படுகிறது. இவ்விழாவிற்கு, சான்றுரை வழக்குரைஞர் திரு. என். சிதம்பரதாணு…

வளைகுடா வானம்பாடியின் சித்திரைக் கூட்டம்

குவைத்து வளைகுடா வானம்பாடியின் திங்கள் கூட்டம்,  அன்னையர்  நாள் சிறப்பு நிகழ்வாக சித்திரை 27, தி.பி.2045 10-05-2014 அன்று காலை 10 மணிக்கு,  பஃகாகில் சரவணபவன் உணவகத்தில் மிகச் சிறப்பாக நடந்தது. வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. செல்வி அனுசுரேசு திருக்குறள் கதை சொல்ல, கூட்டத்திற்கு,  பொறியாளர் நடராசன், பொறியாளர்  முனைவர் பால் மனுவேல், பொறியாளர் திரு சேகர் அவர்கள்  முன்னிலையேற்றார்கள். விழாவில்  கவிஞர்கள், பாடகர்கள்,  அன்னையர் நாளைச்  சிறப்பித்து, கவிதை, சிறப்புச் சொற்பொழிவு, பாடல் எனத் தங்களின் படைப்புகளை வழங்கினார்கள். விழாவில்…

சிட்டினி நகரில் திருக்குறள் மாநாடு

  ஆசுதிரேலியாவில் பேரா.மறைமலை இலக்குவனார்     ஆத்திரேலியா சிட்டினி நகரில்  சித்திரை 13, தி.பி.2045 / ஏப்பிரல் 26, கி.பி. 2014 சனிக்கிழமை திருக்குறள் மாநாடு நடைபெற்றது. பேராசிரியர் மறைமலை இலக்குவனார், ஈழப் பேராசிரியர் சிவகுமாரன் மயிலாடுதுறைப் பேராசிரியர் சிவச்சந்திரன் முதலான பலரும் கலந்து கொண்டனர். ”திருக்குறள் ஒரு பல்துறைக்கலைக்களஞ்சியம்”என்னும் தலைப்பில்  பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் சொற்பொழிவாற்றினார். குறள் பரப்பாளர் எழுத்தாளர் மாத்தளை சோமு அங்குள்ள தமிழன்பர்களுடன் இணைந்து இம் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.  

கவிஞர் மு.முருகேசிற்கு இரண்டு இலக்கிய விருதுகள்

        வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு  ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு.   இவர், புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகருணத்தில் பிறந்தவர்.  இவருக்கு, புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில்  (மார்ச்சு 2014)கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிதை விருது வழங்கினார்.          இவ்விழாவிற்கு, தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் தலைமையேற்றார். விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் தி.அமிர்தகணேசன் அனைவரையும் வரவேற்றார்.          புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் முதன்மைச் சீடர்களில் ஒருவரும், சென்னை புதுக்கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியரும், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான   கவிஞர் ஈரோடு தமிழன்பனின் 80-ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரியிலுள்ள விவேகானந்தா மேனிலைப்பள்ளியில்…

பாவேந்தர் பாரதிதாசன் – முனைவர் மறைமலை இலக்குவனார்

[புதுவைக் காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம் 03.04.2045 – 16/4/14 அன்று நடத்திய தேசியக் கருத்தரங்கில் வழங்கப்பெற்ற எழுத்துரை] வள்ளலார், மேதை வேதநாயகர், மனோன்மணீயம் சுந்தரனார் என்னும் மூன்று பெரியார்களே தமிழ் மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்கள் எனும் உண்மையைத் தமிழ் ஆய்வாளர்களும் மாணாக்கரும் எஞ்ஞான்றும் மறத்தலாகாது. இக்காலத்தில் விரிவுறப் பேசப்படும் பெண்ணியம், ஒடுக்கப்பட்டோரியல், சமயப் பொதுமை, சமநிலைச் சமூகம் ஆகிய கருத்தியல்களை வள்ளலார் பாடல்களில் பரவலாகவே காண்கிறோம். தம்மை மறந்து இறைமையில் கரைந்து உலகியல் துறந்து வாழும் தாமரையிலைத் தண்ணீராக வள்ளலார் எஞ்ஞான்றும் சமூகத்திலிருந்து ஒதுங்கிச்சென்றதாகக்…

திருமலை மன்னரின் அரிய சிற்பங்கள் கண்டுபிடிப்பு

  மதுரை உசிலம்பட்டி அருகே மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னன் வேட்டைக்குச் செல்லும் அரிய சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ம.திருமலை தெரிவித்துள்ளார். “தமிழக அரசு நல்கைத் திட்டமான “தென்கல்லக நாட்டின் தொன்மையும் சிறப்பும்” என்ற ஆய்வுத்திட்டக் களப் பணிக்காக, தமிழ்ப் பல்கலைக் கழகக் கல்வெட்டியல்-தொல்லியல்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பா.செயக்குமார்  கள ஆய்வுமேற்கொண்டார். அப்பொழுது மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கொடிக்குளத்தில், திருமலை(நாயக்க) மன்னரின் (கி.பி.1623- 1659) அரிய சிற்பங்கள் கண்டறியப்பட்டன எனத் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் திருமலை…

சிங்கப்பூரில் முத்தமிழ் விழா

   தமிழ் மொழித் திங்கள் விழாவின் அங்கமாக சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏப்பிரல் 5, 2014 அன்று உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் முத்தமிழ் விழாவினை மிகச் சிறப்பாக நடத்தியது.   தமிழ் வாழ்த்துடன்  விழா தொடங்கியது. சிங்கப்பூர் சுற்றுப்புற நீர் வளத்துறை அமைச்சர் விவியன் பாலகிருட்டிணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அடுத்த அங்கமாகக் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் உரை நிகழ்த்தினார். பின்னர் மாணவமணிகள் கலந்து கொண்ட மாறு வேடப்…

வளைகுடா வானம்பாடிகளின் ஏப்பிரல் கூட்டம்

      குவைத் வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா 11-04-2014 வெள்ளி அன்று மாலை 5.00 மணி முதல் மங்கப் விழா அரங்கில் மிகச்சிறப்பாக நடந்தது. விழாவிற்குப் பெருமை சேர்க்கும் விதமாக  திரு.நீலமணி, திரு.பால் மனுவேல் திரு. அரவணைப்பு இளங்கோவன் ஆகிய மூன்று முனைவர்கள் கலந்துக்கொண்டு பெருமை சேர்த்தனர். வழக்கம் போல் மண்ணிசைப்பாடல்கள், மெல்லிசைப்பாடல்கள், தனிக்கவிதை வாசித்தல், சிறப்புச் சொற்பொழிவுகள் எனப் பல நிகழ்வுகளை ஆண்களும், பெண்களும் சேர்ந்து மிகச் சிறப்பாகச் செய்தனர். நிகழ்ச்சிக்குப் பல அமைப்பின் நண்பர்களும், குவைத்…

தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்

 தமிழ்க்காப்புக்கழகமும் சென்னை மாநிலக்கல்லூரித் தமிழ்த்துறையும்  பிற தமிழ்க்காப்பு அமைப்புகளுடன் இணைந்து  தமிழ் எழுத்தொலிகளுக்கான  ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடலை நிகழ்த்தியது.   சென்னை மாநிலக்கல்லூரியில் உள்ள பேராசிரியர் பவெல் அரங்கத்தில்,தி.பி.2045 பங்குனி 23 / கி.பி.2014 ஏப்பிரல் 6 ஞாயிறு முற்பகல் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. திரு அன்றில் இறையெழிலன் வரவேற்புரை ஆற்றினார். திரு இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை தாங்கினார். முனைவர் ப.மகாலிங்கம் தொடக்கவுரை ஆற்றினார். முனைவர் க.ப.அறவாணன், பேராசிரியர் முனைவர் ந.தெய்வசுந்தரம், முனைவர் கு.பாலசுப்பிரமணியன், முனைவர் மா.பூங்குன்றன், முனைவர் மு.கண்ணன்,  முனவைர்…