செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-4(2010): இலக்குவனார் திருவள்ளுவன்
(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-3(2010): தொடர்ச்சி) செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-4(2010) 11.ஆந்திரா, பீகார், தில்லி (2 இடங்கள்), கேரளா, மகாராட்டிரா, ஒரிசா, இராசசுதான், உ.பி., குசராத் ஆகிய மாநிலங்களில் சமசுகிருதப் பல்கலைக்கழகம் இயங்க மத்திய அரசின் முழு நல்கை வழங்கப்படுகிறது. வாழ்வு கொடுக்கப்பட்டு வரும் மொழியான சமசுகிருதத்திற்கு முழுநல்கை வழங்கப்படுவது போல், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்படும்; தமிழ் மக்கள் 50,000 எண்ணிக்கைக்குக் குறையாமல் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழ்ப் பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கானல்நீராகப்…
க0. 1938 – ஆம் ஆண்டு தொட்டு இன்றுவரை நீடித்துவரும்‘இந்தி’ எதிர்ப்பினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட நன்மை, தீமைகள்
௯. வரலாற்றையே மாற்றும் வந்தேறிகள் தொடர்ச்சி) க0. 1938 – ஆம் ஆண்டு தொட்டு இன்றுவரை நீடித்துவரும்‘இந்தி’ எதிர்ப்பினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட நன்மை, தீமைகள் (முதல் பரிசு பெற்ற கட்டுரை) முன்னுரை கடலால் கொள்ளப்பட்ட குமரிக்கண்டத்தில் முதல், இடை, கடை என்ற முத்தமிழ்க் கழகங்கள் நிறுவி தமிழ் ஆய்ந்தனர், தமிழ் அரசர்களான பண்டையர் (பாண்டியர்). தமிழ் தோன்றிய காலம் வரையறுத்துக் கூறற்கரிதாயுள்ளது. ‘இலமூரியா’க் கண்டம் என்ற குமரிக்கண்டம் ஐந்துமுறை கடலால் கொள்ளப்பட்டது. இந்துமாக்கடல் பரப்பில் இப்பொழுது காணப்படும் சிறு…
வெருளி நோய்கள் 494-498: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 489-493: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 494-498 எதிரொளிப்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் எதிரொளிப்பு வெருளி.கண்ணாடி தவிர, நீர்ப்பகுதி, பளபளப்பான பகுதி முதலிய பிறவற்றில் எதிரொளிப்பது குறித்து மிகை பேரச்சம் கொள்கின்றனர்.00 எதிர்காலம் குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்வது எதிர்கால வெருளி.பேரிடர், நேர்ச்சி போன்றவற்றால் யாரையோ எதையோ இழந்தவர்களுக்கு எதிர்கால வெருளி மிகுதியாக வருகிறது.எதிர்காலம்பற்றிய அச்சம், நம்பிக்கையின்மை, தன்னம்பிக்கையின்மை போன்றவற்றால் எதிர்கால வெருளிக்கு ஆளாகின்றனர்.00 எதிர்ம எழுது பலகை(boogieboard) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் எழுது பலகை வெருளி.எதிருரு ஒளிர்வுக் காட்சி முறையில் எழுதப்பெறும்…
சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- இலக்குவனார் திருவள்ளுவன்
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! அன்புமிகு சான்றோர் பேரவை உறுப்பினர்களுக்கும் நிகழ்ச்சியினை நேரடியாக கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் இப்பதிவொலி வழியாக கேட்க இருப்பவர்களுக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அறிமுக உரையாற்றி இந்நிகழ்ச்சியினை எனக்கு அளித்த அரவிந்தன் அவர்களுக்கும் என் வணக்கமும் நன்றியும். தலைப்பைக் கேட்டுச் சிலருக்கு ஆனா உரூனா ஐயாவுடைய தமிழ்ச் சான்றோர் பேரவை இந்த தலைப்பிலா நிகழ்ச்சி நடத்துகிறது என்று எண்ணலாம். “சமற்கிருதத்திற்கு மிகக் கூடுதல் நிதி ஒதுக்கீடும் பிற மொழிகளுக்கு மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடும்” என்றுதான் பேசச் சொன்னார்கள். இரண்டு்ம் ஒன்றுதான். என்று…
வெருளி நோய்கள் 484-488: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 479-483 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 484-488 உமிழ்நீர் அல்லது எச்சில் துப்புவது குறித்த காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் எச்சில் வெருளி.தங்கள் மீது பிறர் எச்சில் படுவதால் மட்டுமல்ல, தங்கள் எச்சில் வடிந்து தங்கள்மேல் பட்டாலும் அளவுகடந்த பேரச்சம் கொள்வர்.வாயிலிருக்கும் உமிழ்நீர் தானாக வெளியேறும் பொழுது எச்சில் வடிதலாகவும் நாமாக வெளியேற்றும் பொழுது எச்சில் துப்புவதாகவும் அமைந்து விடுகிறது.பயணங்களில் அடுத்தவர் மீது விழும் வகையில் எச்சில் வடியத் தூங்குபவர் உள்ளனர். எனவே, அடுத்து இருப்பவர் பேரச்சத்திற்கு ஆளாகிறார். எனினும் இது துயில்எச்சில் வெருளி(aquadormophobia)…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 11 : Conference Call – பன்முகஅழைப்பு : இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 10 : conference, seminar, symposium – தமிழில் . . . -தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 11 Conference Call – பன்முகஅழைப்பு Conference Call என்றால் என்ன? Conference Call என்றால் நேர் பெயர்ப்பாகப் பலரும் மாநாட்டு அழைப்பு என்றே பயன்படுத்துகிறார்கள். சிலர் கலந்துரையாடல் அழைப்பு என்கிறார்கள். சிலர் கூட்டுத் தொலைபேசி உரையாடல் என்கிறார்கள். இது பேசுவதாகவும் இருக்கலாம், காணுரையாகவும் இருக்கலாம். இடைக்கால இலத்தீனிலும் இடைக்கால் ஃபிரெஞ்சிலும் con- என்றால்…
சட்டச் சொற்கள் விளக்கம் 1006-1010 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 1001-1005 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1006-1010 1006. Authorities அதிகார அமைப்புகள் ஒரு பொருண்மை தொடர்பில் செயற்பட, முடிவுகளை எடுக்க, உத்தரவுகளைப் பிறப்பிக்க, இசைவுகளை வழங்க, முறையான சட்ட பூர்வ அதிகாரம் கொண்ட அமைப்புகள் 1007. Authority inferior கீழ்நிலை அதிகாரி எந்தப் பதவியாக இருந்தாலும் அந்தப் பதவிக்குச் சார்நிலையிலுள்ள அதிகாரி 1008. Authority, power and அதிகாரமும் அதிகார உரிமையும் Authority என்றால் சான்று வலிமை, இசைவு, அதிகாரமுடையவர், அதிகாரக்குழு,…
சாதி எதிர்ப்புப் போராளி சிவகங்கை இராமச்சந்திரனாரின் முன் மாதிரிச் செயல்.
பகுத்தறிவுச் சுடர் சிவகங்கை இராமச்சந்திரன் சாதிக்கு எதிராக வாய்ப்பேச்சு மட்டும் பேசவில்லை. பிள்ளைகள் சான்றிதழ்களிலேயே சாதியைக் குறிப்பிடவில்லை. தன் மகன் தியாகராசன் சான்றிதழில் அவர் சாதியைக் குறிப்பிடவில்லை. எனினும் பிராமணர் அல்லாதார் எனக் குறிப்பிட்டுள்ளார் அவருடைய பள்ளி இறுதி வகுப்புச்சான்றிதழ் இதோ மேலே உள்ள சான்றிதழின்படி.
தொல்காப்பியமும் பாணினியமும் – முன்னுரை: இலக்குவனார் திருவள்ளுவன்
தொல்காப்பியமும் பாணினியமும் முன்னுரை கனடாவில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (2024-09-20, 2024-09-21, 2024-09-22) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் சிறப்பாக நடைபெற்றது. கனடாத் தொல்காப்பிய மன்றமும் (தமிழ்நாட்டின்) இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து இதனை நடத்தின. அதன் கருத்தரங்கத்தில் வாசிக்க நான் ‘தொல்காப்பியமும் பாணினியமும்’ என்னும் கட்டுரையை அனுப்பியிருந்தேன். நான் பொதுவாகக் கருத்தரங்கங்களில் பங்கேற்கும்போது விரிவான கட்டுரையை அனுப்பிவிட்டு அதன் பின்னரே சுருக்கத்தை எழுதியனுப்புவது வழக்கம். ஏனெனில்…
வெருளி நோய்கள் 226 -230 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 221 -225 – தொடர்ச்சி) வெருளி நோய்கள் 226 -230
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 5
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 4 தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 5 இவ்வாறு செய்திகளில் அடிக்கடி இடம் பெறும் தொடர்கள் சிலவற்றைப் பார்ப்போம். 50. ஊழியர்களைத் தேர்வு செய்தனர். 51. 16 பேரைக் கைது செய்தனர். 52. புதிய ஆட்களைத் தேர்ந்தெடுத்தனர். 53. நடவடிக்கையைக் கைவிடு. 54. விடுமுறையைக் குறை. 55. புதுமுறையைப் பின்பற்று. 56. நடைமுறையைக் கவனி. 57. அமைப்பைச் சேர்ந்தவர்கள். 58. கோசுட்டியைச் சேர்ந்தவர்கள். 59. கும்பலைச் சேர்ந்தவர்கள். 60. தமிழகத்தைக் கடும் வெயில் வாட்டுகிறது. 61. நிதியுதவியைப் பெற்றுக் கொண்டார். 62. ஆகியவற்றைப் பார்வையிட்டார். 63. போட்டியிடாததைத் தொடர்ந்து … 64. பெயரைப் பரிந்துரைத்தால் … 65. பயிர்களைச்…
க.பண்டைத் தமிழர் கண்ட அறிவியல் நுணுக்கங்கள் – திருத்துறைக்கிழார்
(திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௪. தமிழுக்குச் சிறை?) ஆ. தமிழர்க.பண்டைத் தமிழர் கண்ட அறிவியல் நுணுக்கங்கள் பண்டைத் தமிழர் அறிவியலறிவு படைத்தவராக இருந்தனர் என்பதைத் தமிழ் இலக்கியம், இலக்கணங்களில் இலைமறைகாய் போலப் பரவலாகக் காணலாம். ஏன்? சில சொற்கள் கூட அறிவியல் கருத்துகள் பொதிந்தனவாக உள்ளனவென்பது நுணுகிக் காண்பார்க்குப் புலனாகும். தமிழ்ச்சொற்கள் யாவும் பொருள் குறித்தனவே என்பதை ஒல்காப்புகழ்த் தொல்காப்பியம் வலியுறுத்துகின்றது. காட்டாக, ஞாலம், ஞாயிறு, உலகம் என்னும் சொற்களைக் காண்போம். ஞாலம் என்றால் அசைதல் என்றும், ஞாயிறு என்றால் பொருந்தியிருப்பது என்றும்,…