தலைப்பு-உதகமண்டலத்தின் உண்மைப்பெயர் :thalaippu_uthagaiyinpeyar_ooty

உதகமண்டலத்தின் உண்மையான பெயர்!


  ஆடு மாடுகள் கூட்டமாகத் தங்குமிடம் மந்தை எனப்படும். வட ஆர்க்காட்டில் வெண் மந்தை, புஞ்சை மந்தை முதலிய ஊர்கள் உள்ளன. நீலகிரியில் தோடர் எனும் வகுப்பார் குடியிருக்கும் இடத்திற்கு மந்து என்பது பெயர். மாடு மேய்த்தலே தொழிலாகக் கொண்ட தோடர் உண்டாக்கிய ஊர்களிற் சிறந்தது ஒத்தக்க மந்து என்பதாகும். அப்பெயர் ஆங்கிலமொழியில் ஒட்டகமண்டு எனத் திரிந்தும், ஊட்டி எனக் குறுகியும் வழங்கி வருகின்றது. ஒத்தைக்கல் மந்தை(ஒற்றைக்கல்மந்தை) என்பதே இவ்வாறு சிதைந்து வழங்குவதாகத் தெரிகின்றது.

 

அட்டை-தமிழகம் ஊரும்பேரும், இரா.பி.சேதுப்பிள்ளை :attai_thamizhagam uurum pearum

– சொல்லின் செல்வர் இரா.பி.சேது(பிள்ளை):

தமிழகம் ஊரும் பேரும்:

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_gnanaprakasan_peyar