சுந்தரமூர்த்தி கவிதைகள்
சிலேடை  அணி 5

ஊர்சுற்றும், ஓரிடத்தில் உன்னதமாய் நில்லாதாம்,
தார்வேந்தன் போலத் தலைதூக்கும்-மார்தட்டும்
சண்டையிடச் சக்திகொண்டு சாதிக்கும், கோமாடும்
விண்ணேர் இளைஞனும் ஒன்று.

பொருள்

கோயில்மாடு & இளைஞன்.

1) ஊர்சுற்றித் திரியும்.
2) ஒரிடத்தில் நிற்காமல் அங்குமிங்குமாக அலையும்.
3) மன்னன் தலைதூக்கிப் பார்ப்பதுபோல் பார்க்கும்
4) எதிரி யாரெனினும் மார்தட்டிச் சண்டையிடும்.
5) வெற்றி பெறும்வரையில்  போராடும்

எனவே, கோயில் மாடும் இளைஞனும் ஒன்றாம்

 

கட்டிக்குளம் ஒ .சுந்தரமூர்த்தி

கட்டிக்குளம்
ஒ .சுந்தரமூர்த்தி