தாத்தாசந்தர் சுப்பிரமணியன்

 

தாத்தா எங்கோ நடக்கும் போதும்

சத்தம் கேட்கிறது!

‘டொக்டொக்’ சத்தம் கேட்கிறது! – கோலைத்

தாங்கித் தாங்கி நடக்கும் ஓசை

பக்கம் கேட்கிறது!

எனக்குப் பக்கம் கேட்கிறது!

 

சட்டைப் பையில் ‘சாக்லெட்டு எடுத்துத்

தாத்தா தந்திடுவார்!

எனக்குத் தாத்தா தந்திடுவார்! – நான்

சரியாய்ப் பள்ளி செல்லும் நேரம்

தாத்தா வந்திடுவார்!

என்முன் தாத்தா வந்திடுவார்!

 

வீட்டில் இருக்கும் வேளை கணக்கில்

விளக்கங்கள் சொல்வார்!

வேண்டும் விளக்கங்கள் சொல்வார்! – என்

வெள்ளைத் தாளில் வண்ணம் தீட்டி

வேடிக்கை செய்வார்!

நன்றாய் வேடிக்கை செய்வார்!

 

சந்தர் சுப்பிரமணியன்

புன்னகைப் பூக்கள்:  பக்கம் 30