தலைப்பு- பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்து, இலக்குவனார் திருவள்ளுவன் ; prapakaran_vaazhthu_ilakkuvanar-thiruvalluvan

கார்த்திகை 11,  தி.பி. 1985 / நவம்பர் 26, கி.பி. 1954

அன்று தமிழாய்ப்பிறந்த

தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு

பிரபாகரன்  பிறந்த நாள் பெருமங்கலம்!

தமிழ் என்றால் இனிமை.

தமிழ் என்றால் அழகு.

தமிழ் என்றால் வீரம்.

தமிழ் என்றால் அன்பு.

 

தமிழ்போல் இனிமையும் அழகும் வீரமும் அன்பும் கொண்டவரே தலைவர் பிரபாகரன்.

பிரபாகரன் பிறந்ததால்தான் உலகம்  தமிழரின் வீரத்தை உணர்ந்தது! தமிழரின் செம்மையை அறிந்தது!

தமிழ்ஈழம் இன்றைக்கு உரிமை இழந்து நிற்கலாம். ஆனால், நாளை மீண்டும் எழும்! மலரும்! தனியரசாய்த் தலைநிமிர்ந்து நிற்கும்!

மலரப் போகும் தமிழர் தாயகத்தின் மாபெரும் தலைவர்,

தமிழ்உரிமை காக்க வந்த தன்னிகரில்லாத் தலைவர்,

தமிழ் ஈழத்தின் ஆட்சியாளர்  மேதகு பிரபாகரன் 

மேன்மையும் புகழ்மையும் நலமும் மகிழ்வும் எய்திப்

பன்னூறு ஆண்டுகள் வாழியவே! வாழிய வாழியவே!

 

வாழ்த்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ஆசிரியர்,

‘அகரமுதல’ பன்னாட்டு மின்னிதழ்

AkaramuthalaHeader