மாவீரர்களுக்கு

வீர வணக்கம்!

தாயகக் கனவிற்காகத் தம்முயிர் நீத்தவர்களைத்

தாய் மண்போற்றுபவர்கள் மறக்கக் கூடாது.

மாவீரர்கள் மடிந்தாலும் அவர்களின் கனவுகளுக்கு

உயிர்ப்பு கொடுக்க வேண்டியவர்கள் என்பதை

உணர்ந்து உயர் கடமையாற்றத் தவறக்கூடாது.

நேற்றைக்கு அழிக்கப்பட்ட கனவுகளை மறக்காமல்

நாளை நனவாக்க இன்றைக்கு உழைக்காமல் இருக்கக் கூடாது.

மாவீரர் நாளில்  உலகெங்கும் மொழி இன நாட்டு

விடுதலைக்காகப் போராடியவர்களுக்கும்

தமிழீழ மாவீரர்களுக்கும் வீர வணக்கம்.

 அகரமுதல – மின்னிதழ்