பிரபாகரன் வாழ்த்து - இலக்குவனார் திருவள்ளுவன் : prapakaran vaazhthu_ila.thi.

 

பிரபாகரன், ஈழத்தலைவர் மட்டுமல்லர்!

தமிழ் ஞாலத்தலைவருமாவார்!

பிரபாகரன் பிறந்ததால் தமிழர் தம் வீரம் உணர்ந்தனர்

தமிழ்மானம் தெளிந்தனர்!

அடிமை விலங்கொடிக்கும் துணிவைப் பெற்றனர்!

இந்தியக் கூண்டிற்குள் அடைபட்டிருந்த தமிழினத்தை உலகு அறியவில்லை!

பிரபாகரன் செயல்களால் தமிழினம் அறிந்தனர்! தரணியெங்கும் போற்றினர்!

வாராது வந்த மாமணியாய் இருபதாம் நூற்றாண்டில் பிரபாகரன் வந்தார்!

தமிழர் தாயகம் இருபத்தோராம் நூற்றாண்டில் விடுதலை பெறும் என்னும் செய்தி தந்தார்!

வாழ்க பிரபாகரன்! வெல்க தமிழீழம்! உயரட்டும் தாய்த்தமிழகம்!

பிரபாகரன் வாழும் காலத்தில் வாழ்கிறோம் என்னும் பெருமையை எமக்கீந்த தலைவா!

கடந்துபோன ஆண்டுகளுடன் மேலும் அறுபது ஆண்டுகள் வாழ்வாயாக!

தமிழ்ஈழ மக்களரசின் தலைமைப் பொறுப்பில் தமிழர்தாயகத்தை தலைசிறந்த நாடாக மாற்றி வாழ்வாயாக!

நானிலம் போற்றும் உன்னை, நாங்களும் போற்றுகிறோம்!

வாழ்க! வாழ்க! என்றும் வாழ்க!

வாழ்த்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

(அகரமுதல 107 :  கார்த்திகை 10, 2046 / நவ. 26, 2015)

 

AkaramuthalaHeader