(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170 தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180

(குறள்நெறி) 

  1. பொறாமையால் அல்லவை செய்யாதே!
  2. (துன்பம் தரும்)  அழுக்காறு வேண்டா உனக்கு!
  3. சுற்றம் கெட வேண்டுமாயின்  பிறருக்குக் கொடுப்பதைத் தடு!
  4. செல்வம் சேர வேண்டாமெனில், பிறர் செல்வம் கண்டு பொறாமை  கொள்!
  5. நடுவுநிலை தவற விரும்பாவிடில், பிறர் பொருள் விரும்பாதே!
  6. பொறாமையாளனின் செல்வமும் பொறாமையற்றவனின் கேடும் மாறும்.
  7. அழிவினுள் தள்ளும் அழுக்காறு கொள்ளாதே!
  8. (உயர வேண்டுமெனில்,) பொறாமை கொள்ளாதே!
  9. உன் குடி அழிய வேண்டுமாயின், பிறர் பொருள் விரும்பு!
  10. பிறர் பொருள் பயன் விரும்பிப் பழிச்செயல் புரியாதே!
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 181-190]