(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160  தொடர்ச்சி)

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 161-170

(குறள்நெறி) 

  1. நற்குணம் நீங்காமல் காத்திடப் பொறுமையைக் காத்திடு!.
  2. பொறுத்தவரைப் பொன்போல் போற்று!
  3. ஒறுத்தால் ஒருநாள் இன்பம்; பொறுத்து என்றும் புகழ் பெறு!
  4. பிறர் திறனல்ல செய்யினும் நீ அவர்க்கு அறனல்ல செய்யாதே!
  5. செருக்கினை வெல்ல பொறு!
  6. துறவியினும் தூயராகத் தீச்சொல் தாங்கு!
  7. தீச்சொல் பொறு!
  8. அழுக்காறு இன்மையை ஒழுக்காறு ஆகக் கொள்!
  9. இணையற்று வாழ அழுக்காறு இன்றி இரு!
  10. அறன் ஆக்கம்  வேண்டுமெனின், பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்படாதே!  
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

[காண்க : வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 171-180]