வடிம்பலம்ப நின்றானும் அன்றொருகால் ஏழிசை நூற்சங்கம் இருந்தானும் கிழக்கத்திய இசை (Oriental Music) சீரிலும் சிறப்பிலும் மிக உயர்ந்தது என்றும் மிகவும் திருத்தம் பெற்றது என்றும் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கத்திய இசை என்பதில் தமிழிசை உட்படுகிறது என்பதை அறிய வேண்டும். இது ஐந்திசை, ஆறிசை, ஏழிசை என்ற முறையில் முன்னேறித் திருத்தமடைந்துள்ளதாக, அமெரிக்கக் கலைக் களஞ்சியம் குறிப்பிட்டுள்ளது. (The Encyclopaedia Americans, Vol.19. page. 627)

– முனைவர் ஏ.என். பெருமாள்: தமிழர் இசை: பக்கம்.14