83. சனாதன் என்றால் புனிதம் என்பது சரியா? 84.சனாதனத்திற்கு ஆதரவாகப் பலரும் எழுதுவது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 82 தொடர்ச்சி)
சனாதனம் – பொய்யும் மெய்யும் 83. 84
? 83. சனாதன் என்றால் புனிதம் என்பது சரியா?
சனாதன் (சனாதனம்) என்ற சமற்கிருதச் சொல்லின் பொருள், மதத்தை விட்டுவிட்டுப் பொருள் தேடினால் புனிதமான, பழங்கால, மறையாத, நீண்டு நிலைக்கும், என்றைக்கும் பொருத்தமான என்ற துணைச்சொல் என்று விளக்கம் தருகிறார்களே!
சனாதனக் குறள், சனாதன இசுலாம் என்று கூடக் கூறலாம். . . . புனித சேவியர், தூய மேரி எனக் கிறித்துவர் சேர்க்கும் துணைச்சொல்தான் ‘சனாதன்’ சுருக்கம். – குருசாமி ஆறுமுகம் என்பவர் கோரா தளத்தில் இவ்வாறு கூறுகிறார். சரிதானா?
சனாதனம் என்பது இந்து மதத்தில் மட்டும் இருக்கும் பொழுது சனாதன இசுலாம் என்றெல்லாம் சொல்வது பிற சமயத்தவரையும் இழிவு படுத்துவதாகும்.
அனைவரையும் பாகுபடுத்தாத இழிவுபடுத்தாத தூய உள்ளத்திற்கு எதிரான சனாதனத்தைத் தூய என்ற அடைமொழிப் பொருளாகக் கூறுவதும் கொடுமைதான்.
உண்மையான பொருளுக்கு அதன் தீமை உணர்ந்து எதிர்ப்பு வருகையில் இல்லாத நல்ல பொருள்கள் இருக்கின்றன எனக் கற்பிதம் செய்து மக்களை ஏமாற்றுவது ஆரியர் வழக்கம். அதற்கிணங்கவே இப்போதும் தூய்மையான என்பதுபோன்ற பொருள்களைத் தந்து மக்களை ஏமாற்றுகிறார்கள். இத்தகைய பொய் விளக்கத்தில் அறிவுள்ள மக்கள் நம்ப மாட்டார்கள். சனாதனுக்கு எதிரான திருக்குறளையும் பிற சமயங்களையும் சனாதனமாகத் திரித்துக் கூறி மக்களை ஏய்க்கப் பார்க்கிறார்கள். எனவே, இத்தகைய விளக்கங்களை யெல்லாம் பொருட்படுத்தாமல் தூர எறிய வேண்டும்.
? 84 சனாதனத்திற்கு ஆதரவாகப் பலரும் எழுதி வருகின்றனரே!
வானவில் க.இரவி, செயக்குமார், சீனிவாசன் பி.ஆர்.மகாதேவன், அரவிந்தன் நீலகண்டன், பிரம்மரிசியார், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், சோபனா இரவி, இளங்கோ பிச்சாண்டி, கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், எல்.முருகன், வ.மு.முரளி, காம்கேர் கே.புவனேசுவரி, தருமபூபதி ஆறுமுகம், இராமகிருட்டிணன், சிவசங்கரன், பத்துமன், கோதை சோதிலட்சுமி, செங்கோட்டை சிரீராம், பி.ஆர்.மகாதேவன், ஆர்.என்.இரவி, சத்துகுரு சக்கி வாசுதேவு, மரபின்மைந்தன் முத்தையா, கோவை இராதாகிருட்டிணன், கே.சி.சவர்லால், நந்தலாலா, பி.ஏ.கிருட்டிணன், சடாயு, பா.இந்துவன், திருநின்றவூர் இரவிகுமார், ச.சண்முகநாதன், கோ.ஆலாசியம், ப.கனகசபாபதி, வேதா சிரீதர், பால.கௌதமன், வித்தியா சுப்பிரமணியம், பட்டுக்கோட்டை பிரபாகர், இரா.சத்தியப்பிரியன், கிருட்டிண.முத்துசாமி, சி.எசு.பாலாசி, செ.செகன், எசு.எசு.மகாதேவன், அ.பொ.இருங்கோவேள், இராசசங்கர் விசுவநாதன், சுவாமி விமூர்த்தானந்தர், கோ.சேசா, என்.ஆர்.சத்தியமூர்த்தி, எசு.ஆர்.சேகர், நீதிபதி சேசசாயி, சந்தீபு ஆத்துவர்யூ, இராம் மாதவு, நிர்மலா சீதாராமன், வ.ச.சிரீகாந்து, குரு.சிவகுமார் ஆர்.இராசசேகரன், வைரவேல் சுப்பையா, மாதா அமிர்தானந்தமயி, தேவி, ஏகநாத்து இரானடே, டேவிட்டு ஃபிராலே சுவாமி சின்மயானந்தர்,சுவாமி அபேதானந்தர், இராமகிருட்டிணர், சாய்பாபா முதலிய பலரும் சனாதனத்திற்கு ஆதரவாக எழுதியுள்ளனர். அனைத்திலும் அடிப்படையாக உள்ளமை இங்கே நாம் பார்த்துள்ள தொன்மை, சமத்துவம் முதலியவற்றிற்கான விளக்கங்கள்தாம். அவற்றை மீண்டும் தெரிவிப்பின் கூறியது கூறலாகும் என்பதால் இங்கே எடுத்துரைக்கவில்லை. இவர்களுள் சிலர் மழுப்பலாக எழுதியுள்ளனர். இருப்பினும் சனாதனம் என்பது தீங்கானது என்பதும் அதற்கான விளக்கங்கள் தவறானவை என்பதுமே உண்மை.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
- சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 116-117
Leave a Reply