தலைப்பு-ஊக்கமதுகைவிடேல், பா.உலகநாதன் ; thalaippu_uukkamadhu_kaividel_ulaganathan-myanma

ஊக்கமது கைவிடேல்!

எல்லைகள் வேண்டா!
உன்மன வெளியில்
நிற்பாய் நடப்பாய்
சிறகுகள் விரிப்பாய்!
ஊக்கமது கைவிடேல்       இளைஞனே!

எதுவரை முடியும்
அதுவரை ஓடு
அதையும் கடந்து
சில அடி தாண்டு!
ஊக்கமது கைவிடேல்       இளைஞனே!

இலக்குகள் நிருணயி
பாதைகள் வடிவமை
தடைகளைத் தகர்த்தெறி
பயணங்கள் தொடங்கு!
ஊக்கமது கைவிடேல்       இளைஞனே!

காரிருள் என்பது
கருக்கல் வரைக்கும்
விடியலில் ஒளியின்
கதவுகள் திறக்கும்
ஊக்கமது கைவிடேல்       இளைஞனே!

காலங்கள் மாறும்
வருடங்கள் ஓடும் – உன்
கனவுகள் ஒருநாள்
நிச்சயம் நிறைவேறும்!
ஊக்கமது கைவிடேல்       இளைஞனே!

ஒளியாய் நீயே
இருளைக் கிழித்து
கதிராய் எழுந்து
வெளியே வருவாய்!
ஊக்கமது கைவிடேல்       இளைஞனே!

[15.10.2016, சனிக்கிழமை அன்று, தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம் (மியான்மா), இனிய நந்தவனம் அறக்கட்டளை (தமிழ்நாடு) இணைந்து யாங்கோன் ஓர்ச்சிட்டு உணவகத்தில் நிகழ்த்திய இலக்கியப் பெருவிழாவில் பாடிய கவிதை வரிகள்]

இனிய தமிழுடன்
– பா.உலோகநாதன்
மாணவன்

தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம்
யாங்கோன், மியான்மா.

கவிதைத்தாள்,ஊக்கமது கவைிடேல், பா.உலகநாதன் ; uukkamadhukaivedel_loganathan