(அகரமுதல 103  ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015 தொடர்ச்சி)

attai_ezhilarasi036

 

அழகிய தையலை யன்புடன் மணக்க

செம்ம லெவனுமி ச்சிறந்த நகரில்

மனப்பெரு மையுடன் மகிழ்ந்து வருவன்

  1. மணத்தால் நமது பணத்தைப் பகுக்க

எண்ணினோ மல்ல; எண்ணி னவளும்

வேளி ரொருவனை விரும்பி மணப்பின்

பெருமை யுமுண்டு பெரும்பய னுறுவோம்.

அவ்வித மின்றி யனைவரும் வெறுக்க

  1. அழகிய தங்கை யற்பக் கூலியை

சிறுத்துப் பெருத்துஞ் செல்வ மிலானை

மணந்தால் வருவது மானக் கேடென

எழிலர சிக்குறு மின்ப வாழ்விற்

சிறுதி பயக்க எண்ணினர் சூழ்ச்சி.

  1. அதுதான்

அயிர்ப்பில் லாதா டலனைக் கொல்லின்

அவனுருக்காணா அவ்வெழி லரசி

“நம்மை மறந்து நங்கை யொருத்தியை

மணந்திவண் வந்திலன் போலு” மென்று

  1. மறப்பினும் மறப்பள் மாவெழில் வேளை

மறவா தொழியின் மனவே தனையால்

“ஆடவ ரென்போ ரற்பரே” யென்று

காளை களையவள் காண வெறுத்து

கவுந்தீயாய்ப் பாழியைக் கடிதினி லடைவளால்

  1. அவட்குரி த்தாயவும் அடையலா மென்பதே.

பொருள்வேட்கையப் புன்வன் றொழிலை

செய்யத் தூண்ட பொய்க்கஞ் சாது

வேட்டை விழைந்து வெளியிற் செல்வதாய்

செப்பினர் துணிந்து. சேயிழை யறிய

  1. ஆடலன் தன்னையும் அவருட னழைத்தனர்

என்றும் போலவே அன்றும் நினைத்து

அவர்நிலை நாடா தவனு மொருப்பட

ஆடல னோடே அவனிழல் போலவே

ஒக்கவுறையும் தக்கவ னொருவனும்

  1. சேர்ந்தே ஐவரும் சென்றனர் அடவி.

(எழில் கூடும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(வித்துவான் படிப்பு மாணாக்கனாக இருந்த பொழுது

படைத்த தனித்தமிழ்ப் பாவியம்.)

பேராசிரியர் சி.இலக்குவனார்