anna01

தமிழ்ப் பகையை மாய்க்கும் வேங்கை

அறநெறியைப் பரப்புகின்ற தலைவர் அண்ணா;

அருந்தமிழர் பெருமையதை முழக்கும் வீரர்;

திறமை மிகு பேச்சுக்கோர் வடிவம் ஆவர்;

சிந்தனை சேர் எழுத்துக்கோ ஒருவர் ஆவார்;

குறள் நெறியைப் பரப்புகின்ற கொள்கைச் சிற்பி;

கூறுபுகழ்த் தமிழ்ப் பகையை மாய்க்கும் வேங்கை;

உரனுடைய மனிதரெலாம் போற்றி நிற்கும்;

உயர் தலைவர் தமிழ் அண்ணா வாழ்க! வாழ்க!!

– கவிஞர் கதி.சுந்தரம்

குறள் நெறி