தலைப்பு-பறவையே பெருந்தச்சன், மாம்பலம் ஆ.சந்திரசேகர்  : thalaippu_paravaiye_perunthacchan_mambalamchanthirasekar

தனக்குத் தானே கட்டிக்கொள்!

பறவையே பெருந் தச்சன்!
பாரினில் முதல் சிற்பி!

திறமையாக கட்டும் கலைஞர் !
தெரியுதே தேர்ந்த தன்கூட்டில்!

சிறகுதான் பறக்கும் விமானம்!
சிற்றலகுதான் சுமக்கும் வாகனம்!

உறவுக்கு சொந்த இல்லம்!
உலகுக்கே வீட்டுப் பாடம்!

கட்டுமான வீட்டின் அடித்தளம்
எட்டடி தோண்டினாலும் விழுதே!

கற்றுக்கொள் பறவை பாடம் !
கல்வியதுவே தொழில் நுட்பம்!

விட்டுவிட்டு வீசும் தென்றல்
ஆட்டிவிட்டு அச்சுறுத்தும் மரம் !

ஒட்டிகிளையில் விழாத கூடு!.
முட்டைவிழா அற்புத வீடு !

தொங்கும் தோட்டக் குடிலில்
தங்கிவசிக்க ஆசைக் கிளியே !

இங்கே அந்தரத்தில் இல்லம்
இனிதே கட்ட என்னவிலையே!

உன்னை மனிதன் கேட்கிறான்!
“தனக்குத் தானே கட்டிக்கொள்!

என்னைப் பார்த்து கற்றுக்கொள் ”
விண்ணில் பறந்து சொன்னதுபறவை!

மாம்பலம் ஆ.சந்திரசேகர்

மாம்பலம்  ஆ.சந்திரசேகர் : mambalam_chanthirasekar