(மார்கழி 28, 2045 / திசம்பர் 14, 2014 தொடர்ச்சி)

 Jpeg

 

காட்சி –3

அங்கம்    :     கவிஞர், அன்பரசன்,

இடம்      :     கவிஞரது குடில்

நிலைமை  :

(கூரிய விழியாம்! உழைக்கும் தோளாம்!

                   வீரிய நெஞ்சாம்! அன்பரசன்

தனக்குத்தானே குடில் முன்னே!

மனக்குறையோடு உரைக்கின்றான்!)

அன்ப :   காலம் உணர்ந்த கவிஞருக்கு

ஞாலப்பரிசு ஒரு குடிலோ;

வணக்கம் புலவரே! வணக்கம்!

மனநிறைவான வணக்கம்!

கவி     :  யாரது? ஓகோ! வா! வா! தம்பி

அன்ப   :  பார்த்து நாட்கள் ஆன தென?

கவி     :  பார்க்க வந்தீர்! நலந்தானே!

அன்ப :   பார்க்க நலமே! நீவீர் நலமா?

கவி     :  நலமே! நலமே! உடலும் உள்ளமும்

வலிமையாய் உள்ளதால்! நலமே! நலமே!

அன்ப   :  நாடகம் பார்க்க அழைத்ததால்! என்னை

ஓடோடி வந்தேன்! உம் சொல் எண்ணி!

கவி       :     அறிவேன் ஆமாம்! குடிலின் வாசலில்

சிறிதே அமர்ந்து நாடகம் காண்போம்!

அன்ப   :  தெருவின் கோடியில் இருக்கும் நமக்கும்

உருவம் தெரியும் வகையினில் பெரிய

மேடை அமைத்தே உள்ளார்! இதனால்

பாடம் நமக்கும் தெளிவாய் கேட்கும்!

கவி     :  கட்டிலை வீட்டு வாசலில் போட்டே

செட்டாய் அமர்ந்தே நாமும் காண்போம்!

(காட்சி முடிவு)

two-sparrows02

 

(பாடும்)