kalvi

யாவினும் புண்ணியம் கல்வியறிவித்தலே!

வீதிதோறும் இரண்டொரு பள்ளி

நாடு முற்றிலும் உள்ளனவூர்கள்

நகர்க ளெங்கும் பலபல பள்ளி

தேடு கல்வியி லாதொ ரூரைத்

தீயி னுக்கிரை யாக மடுத்தல்

கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை

கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்

… …. …

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்

இனிய நீர்த்தண் சுனைக ளியற்றல்

அன்ன சத்திர மாயிரம் வைத்தல்

ஆல யம்பதி னாயிர நாட்டல்

… ….

அன்ன யாவினும் புண்ணியங் கோடி

ஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல்.

bharathiyar01

பைந்தமிழ்த் தேர்ப்பாகன் சுப்பிரமணிய பாரதியார்: வெள்ளைத் தாமரை

(படங்கள் : த.இ.க.கழகம், விக்கிபீடியா, அனைவருக்கும் கல்வி மாநாட்டறிக்கை & பல்லடம் தாய்த்தமிழ்ப்பள்ளி)