tholkappiyam_peyar04puthakam

நூலில் நீக்க வேண்டிய சிதைவுகள்

சிதைவெனப் படுபவை வசையற நாடின்,

கூறியது கூறல், மாறுகொளக் கூறல்,

குன்றக் கூறல், மிகைபடக் கூறல்,

பொருள்இல் கூறல், மயங்கக் கூறல்,

கேட்போர்க் குஇன்னா யாப்பிற் றுஆதல்,

தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல்

என்ன வகையினும் மனம்கோள் இன்மை,

அன்ன பிறவும் அவற்றுவிரி ஆகும்.

தொல்காப்பியர், தொல்காப்பியம், மரபியல்: 110