பிரபாகரன் : pirapakaran

ஈழம் எமக்கு நிழலாகும்!

இனியவனே !
இன்னுயிரை துச்சமெனக் கொண்டு
மண்ணுயிரை – தமிழ்
மண்ணுயிரை
இனம் காட்டியவனே!

தமிழர் என்றோர் இனம்
தரணிதனில் அழிந்திடவில்லை என்றே
பறை செய்தவனே!

வீரத்தின் வேரை
பாரின் விளிம்புக்கும்
பாய்ச்சியவனே – தமிழர்
மாண்பினை
போர்முனையிலும் அழகு செய்தவனே!

நீ வாழி!
நின் எண்ணம் திண்ணமாகும்!
ஈழம் எமக்கு நிழலாகும்!

அரங்க கனகராசன்