இராகுலுக்கு வாழ்த்துகள்!  ஆனால் …… இலக்குவனார் திருவள்ளுவன்

இராகுலுக்கு வாழ்த்துகள்!  ஆனால் …… இந்தியத் தேசியப் பேராயத்தின் எண்பத்தேழாவது தலைவராகப் பொறுப்பேற்றுள்ள இராகுலுக்கு வாழ்த்துகள்! 1885 இல் தொடங்கப்பெற்ற  பேராயக்கட்சியில் 1919 இல்  36 ஆம் தலைவராகப் பொறுப்பெற்றார் மோதிலால் நேரு. இவருக்குப்பின்  100 ஆண்டுகளை நெருங்கும் இந்த ஆண்டில் இக்குடும்பத்தின் 6ஆவது வழிமுறையினராக, இக்கட்சியின் 87 ஆம் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார் இராகுல்(காந்தி); ஆள் எண்ணிக்கை அடிப்படையில் 6 ஆவது வரிசைமுறை என்றாலும் (சவகர்லால் நேரு 8 தடவை தலைவர் பொறுப்பேற்றதுபோல்) பதவிஆண்டு வரிசையில் குடும்பத்தில் 44ஆம் வரிசையில் பொறுப்பேற்றுள்ளார். அஃதாவது 132…

மாவீரர்களை வணங்குவது நம் நலத்திற்காகவே! ஈழமலர்ச்சிக்காகவே!  – இலக்குவனார் திருவள்ளுவன்

  மாவீரர்களை வணங்குவது நம் நலத்திற்காகவே! ஈழமலர்ச்சிக்காகவே!    தமிழீழத்தை மனக்கண்களில் கண்டவர்கள்! தங்கள்  நெஞ்சில் சுமந்தவர்கள்! மனக்கண்களில் கண்ட தமிழீழம் உருவாகும்; அங்கே ஈழத்தமிழ் மக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் தன்னுரிமையுடனும் தன்மதிப்புடனும் வாழ்வார்கள்; அடிமைத்தளையறுந்து, பட்ட துயரங்கள் மறைந்து, இன்னல்கள் நீங்கி, இன்பவாழ்வு வாழ்வர்; தமிழும் தனக்குரிய இடத்தை நாட்டிலும் உலகத்திலும் பெறும்; என்னும் நம்பிக்கையில், தங்கள் இன்னுயிரை நீத்தவர்கள் மாவீரர்கள்! இவர்களை வணங்குவது நமக்காகத்தான்! ஆம்! நமக்காக மறைந்தவர்களை – புகழால் வாழ்பவர்களை – நாம் வணங்குவது அவர்கள் கனவுகளை நாம்…

சீவனாவின் கனவை நிறைவேற்றுங்கள்!

சீவனாவின் கனவை நிறைவேற்றுங்கள்! போரின் நெருப்பில் சிரிப்பை இழந்த மழலை! தீருமா அவளின் வேதனை?  2009 ஆம் ஆண்டு 3 ஆம் மாதக் காலப்பகுதியில் தமிழின அழிப்பின் மிக உச்சக்கட்ட நடவடிக்கைகள் புதுமாத்தளன் பகுதிகளில் நடந்து கொண்டிருந்தன. அத்தருணத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் துடிதுடித்து இறந்து கொண்டிருந்தனர்.   அதிலும் குறிப்பாகக் குழந்தைகள் மிகக் கொடூரமாக அங்கவீனமாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். முல்லைத்தீவு உடுப்புக்குள ஊரைச் சேர்ந்த இரத்தினராசா  சீவனா (அகவை 11) என்னும் சிறுமி, படுகொலை நடவடிக்கையில் சிக்கிப் போர்க்காயங்களுடன் ஊனமாக்கப்பட்டு மீண்டுள்ளார்.   2009 ஆம்…

படைமுகாம்களில் இன்னும் நூறாயிரம் பேர்! – மு.நியாசு அகமது

  ஈழம் இன்று – இளையவிகடன் செய்தியாளரின் நேரடி அலசல் இராணுவ முகாமில் இன்னும்  நூறாயிரம் பேர்!   இலங்கை இறுதிப் போரை நிச்சயம் எவராலும் மறக்க முடியாது. ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன, எழுத்தில் வடிக்க முடியாத துயரம் நிகழ்ந்து. இப்போது எப்படி இருக்கிறார்கள் தமிழ் மக்கள்? அவர்கள் கோரிக்கையாக என்னவெல்லாம் இருக்கிறது? அவர்களது வாழ்வாதாரம் மேம்பட்டு இருக்கிறதா? அவர்கள் தமிழக மக்களிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கி றார்கள்?… இந்தக் கேள்விகளுக்கான விடை தேடி இலங்கைக்குப் பயணமானோம்.   யாழில் பரவிய தமிழக ஒழுகலாறு!   தீவு…

வீரமும் ஈரமும் செறிந்தவனே! பிரபாகரனே! – அரங்க கனகராசன்

ஈழம் எமக்கு நிழலாகும்! இனியவனே ! இன்னுயிரை துச்சமெனக் கொண்டு மண்ணுயிரை – தமிழ் மண்ணுயிரை இனம் காட்டியவனே! தமிழர் என்றோர் இனம் தரணிதனில் அழிந்திடவில்லை என்றே பறை செய்தவனே! வீரத்தின் வேரை பாரின் விளிம்புக்கும் பாய்ச்சியவனே – தமிழர் மாண்பினை போர்முனையிலும் அழகு செய்தவனே! நீ வாழி! நின் எண்ணம் திண்ணமாகும்! ஈழம் எமக்கு நிழலாகும்! அரங்க கனகராசன்  

செத்து மடிந்தது போதுமடா – உலோக நாதன்

செந்தமிழா சேர்ந்தெழடா ! உலகத் தமிழினம் உறைந்தது ஒருகணம் ஊமை விழிகளும் உற்றங்கு பார்த்தது புலரும் பொழுதினில் புத்தனின் தத்துவம் போட்டது குண்டினை, புறா அங்கு வீழ்ந்தது நித்திய புன்னகை நீள்துயில் கொண்டதுசத்திய சோதனையா? செத்து மடிந்தது போதுமடா செந்தமிழா சேர்ந்தெழடா ! கத்திக்கத்தி பேசி, காலம் கடத்தியேகல் நட்டது போதுமடா! சொல் வட்டத்துக்குள் நின்று குட்டக்குட்ட குனிந்தது போதுமடா! கொத்தும் கழுகோடு குள்ளநரிகளும்ஒத்திங்கு ஊதுதடா! வாய் பொத்திக்கிடந்தது போதுமடா வாள் கத்தி கொண்டு நீ எழடா புலரும் பொழுதினில் புத்தனின் தத்துவம் போட்டது…

வைகோ சொல்பவர் நீங்கள்தாமா? தடம் புரளலாமா?

வைகோ சொல்பவர் நீங்கள்தாமா? தடம் புரளலாமா? தலைக்குனிவிற்கு ஆளாகலாமா?   தமிழ்நாட்டில் மாறி,மாறி இரு கட்சிகள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கவும் இரு கட்சிகளுடனும் மாறி மாறிக்  கூட்டணி வைத்து, வெறுப்படைந்ததாலும் வைகோ முதலானவர்கள் புதிய கூட்டணியை உருவாக்க எண்ணுவது தவறல்ல! ஆனால்,    கூட்டணியின் பொதுவான கொள்கைகளுக்காகத் தனக்கே உரிய கொள்கைகளை விட்டுக் கொடுப்பது முறையல்லவே! வைகோ பொதுவான கருத்தொற்றுமைக்காகத் தமிழ்ஈழம் பற்றியும் கூடங்குளம் பற்றியும்பேசப்போவதில்லை என்கிறார். நாளை இவர் ஆட்சி அமைத்தால், கருத்தொற்றுமைக்காக எந்தக் கொள்கையையும் விட்டுக் கொடுப்பார் என்றுதானே பொருள்.  தமிழ்ஈழத்திற்காகக் குரல்…

இனப்படுகொலை – ஆவணப்படம் வெளியீடு

அன்பார்ந்த தோழர்களே , உலகம் கண்டிராத இனப்படுகொலை அவலம் நம் ஈழத்தமிழ் உறவுகளுக்கு திட்டமிட்டு இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க சக்திகளால் நிகழ்த்தப்பட்டு 6 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் “இது,திட்டமிட்ட இனப்படுகொலை!” என்பதை மறைக்கும் சதியை முறியடிக்க வேண்டும். நீதி கேட்கும் நெடும் பயணத்தில்,செறிவான ஆவணப்படம் மூலம் உலகின் மனச்சான்றை உலுக்கும் வகையில் இயக்குநர்.வ.கவுதமன் அவர்களின் “இது, இனப்படுகொலையா இல்லையா?” எனும் நெருப்புப் படைப்பு சித்திரை 30, 2046, மே 13 ,2015 அன்று மாலை 5.00 மணியளவில் (ஆர்.கே.வி.படநிலையம், வடபழனி, சென்னை) வெளியாக உள்ளது….

அன்னை மண்ணே! – செந்தமிழினி பிரபாகரன்

நீயே என்  தாயே..!! ஈரைந்து திங்களே.. தாயெம்மைச் சுமந்தாள்… மூவைந்து ஆண்டுகள் என்னைச் சுமந்த அன்னை மண்ணே.. என்னைத் தொலைத்தாயோடி? வெயிலோடும் வரப்போடும் விளையாட மடி தந்த அழகிய தாயவளை நெக்குருகும் நினைவுகளில் நானின்று சுமக்கின்றேன்.. நானென்ன உன் தாயா? பொழுதெல்லாம் பொங்கும் உணர்வு ஊற்றுகளில் உருக்குலைந்து போகாமல்.. போற்றியிங்கு பாடுகின்றேன்.. சுழன்று வீசிய காலச் சுழலில் அகதியென உலக மூலைகளில் திக்கொன்றாய்.. தூக்கி வீசப்பட்ட தூசுகளாக நாம்… காலச் சதியில் சிதறிய முத்துகளாய்.. உறவுகள் நாம் பிரிந்தோம்.. எங்கெங்கோ தொலைந்தோம்.. முகமிழந்து போன…

புதிய அரசிற்கு வாழ்த்துகள்!

  எளிமையின் காரணமாக, இரண்டாம் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அரசிற்கு வாழ்த்துகள்! தங்கள் தலைவியின் நிழலவையாகத்தான் இந்த அரசை நடத்துவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! எனினும் தங்கள் தலைவி, தமிழ்நலச்செயல்களில் ஈடுபட்டதை நிறுத்தாமல் தொடர வேண்டும். தமிழ் ஈழம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் முன்னிலும் ஈடுபாடு காட்ட வேண்டும். இத்தகைய செயல்கள்தாம் அவருக்கு உலக அளவில் பரிவான போக்கை அமைத்துத்தந்ததை உணர வேண்டும். அதே நேரம் தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறைக் கொட்டடியிலும் கொடுமையாக ஈழத்தமிழர்கள்…

ஈழப்படுகொலைகள் தொடர்பில் சான்றுகள் அளிப்பதற்கான ஐ.நாவின் கேள்விப் படிவங்கள்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வல்லுநர் குழுவினர் உசாவல்களைத் தொடங்கி விட்டனர். அதற்கான, சான்றுரைகளைத் திரட்டுவதற்கான கேள்விக்கொத்து, அக்கேள்விக் கொத்துகளை உள்ளடக்கிய மாதிரிப் படிவம் கீழே தரப்பட்டுள்ளன. மனித உரிமை மீறல்களை ஐ.நா மனித உரிமை ஆணையகம் 12 வகையாக வகைப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழரும் தங்களுக்கு எந்த வகை பொருந்துகின்றதோ அப்படிவத்தைப் பூர்த்தி செய்து ஐக்கிய நாடுகள் சபையின் மின்னஞ்சல் முகவரிக்கோ ஐக்கிய நாடுகள் சபையின் அஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்….

அகதிகள் அனாதைகள் அல்லர்!

எதிர்வரும் சனி  ( 28.06.ஆனி 14, 2045 / 2014) மாலை 4:30 முதல் 8:30வரை பொதுக்கூட்டம் இலங்கை இனப்படுகொலை அரசை நோக்கி ஏதிலியர் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகின்றனர்! உலகம் முழுவதும் அவலத்துள்ளும் அச்சத்துள்ளும் வாழும் ஈழத் தமிழ் ஏதிலியர் திட்டமிட்டு இலங்கையை நோக்கிக் கடத்தப்படுகின்றனர். மலேசியாவிலிருந்து  ஏதிலியராக ஏற்கப்பட்ட தமிழர்கள் கடத்தப்பட்டனர். பிரித்தானியா,பிரான்சு, செருமனி,கனடா போன்ற நாடுகளிலிருந்து ஆப்பிரிக்க நாடுகள் உட்பட உலகம் முழுவதும் வாழும் தமிழ்  ஏதிலியரின்  நிலை கேள்விகுறியாகியுள்ளது. இவற்றைக் கண்டித்து தமிழ்  ஏதிலியருக்கான போராட்டக்குழு ஐக்கிய நாடுகளுக்கான ஏதிலியர்…