ஆ.வெ.முல்லைநிலவழகன்

ஆ.வெ.முல்லைநிலவழகன்

 

பாடு சிட்டே பாடு ! பண்பாடு !

 

(மார்கழி 13, 2045 / திசம்பர் 28,2014 தொடர்ச்சி)

காட்சி – 5

(நாடகக் காட்சி – 1)

அங்கம்   :     அருண் மொழி, பூங்குயில்

இடம்      :     அருண்மொழி இல்லம்

நிலைமை  :     (அருண் மொழி  வருகைக்காகத்

திருமகள் காத்தே இருக்க

வருகின்றான் அருண்மொழி ஆங்கே!

பெறுகிறாள்! பூங்குயில் இன்பம்!)

அருண்   :     கண்ணானக் கண்ணே!

                     ஏனிந்த வாட்டம்?

                           பெண்ணே! நான் நீங்கிச்

              சென்ற நாள் ஒன்றே!

                          மனம் வேறு தவறு

                                 செய்யாத போது

                         சினமென்னும் உறவைத்

                             துணை கொள்ளலாமோ?

பூங்            :     கண்ணான கண்ணா!

        ஏனிந்த வாழ்வு?

                           உண்மை! நீர்! சென்ற

                                நாள் ஒன்று அறிவேன்!

                            மனமென்னும் கோயில்

                              தெய்வம் நீ! போக

                            வணங்குவது யாரை!

                            சொல்லுவாய்க் கொஞ்சம்?

அருண்    :     எங்கிருந்தாலென்ன?

அறியாத பெண்ணா?

அங்கமே நீங்கும்!

                            மனமென்றும் நீங்கா!

 பூங்       :     என்சொல்லைக் கேட்கும்

                                  இதயமோ எனக்கில்லை

                        என்ன! நான் செய்வேன்?

வழியொன்று சொல்வாய்?

அருண்    :     நனிக்கனியில் சொல்லும்

                               சுவையுள்ள பொருளும்

                         ஒன்றாகச் சேர்த்து

                                       உரையாடும் போது

 

சொல்லவோர் வழியும்

                                  இல்லையே கண்ணே!

செல்வமே கோபம்

இன்னுமா! உனக்கு?

பூங்       :     வீசுந்தமிழ்க் காற்றாய்

வெயிற் கேற்ற நிழலாய்

பேசும் மொழி கண்ணா

பேசியது போதும்!

ஏங்கியது உள்ளம்

உன் மொழி கேட்க!

நீங்கியது வாட்டம்!

நெருங்கவே வெட்கம்!

அருண்    :     சிணுங்கியது போதும்!

புசிப்போமா கனியை!

கனியே நான் சென்ற

ஊர் பற்றிச் சொல்வேன்!

பூங்       :     உம் சொல்லே இன்ப

வெள்ளமாய் ஓட!

நமக்கென்ன! கனியும்

வேண்டுமா? அத்தான்!

அருண்:     ஐயய்யோக் கண்ணே!

இது என்ன பெண்ணே!

பைங்கொடி உண்ண

நான் காண வேண்டும்

பூங்       :     நீர் உண்ணும் முன்னே

நான் உண்ணலாமா?

விருந்தோம்பல் அறியா

தமிழ்ப் பெண்ணும் உண்டா?

அருண்    :     உணராதார் சொன்ன

தமிழ்நூல்கள் இல்லை

பெண்மைக்குச் சான்று

நீதாண்டிக் கண்ணே!

 (காட்சி முடிவு)

 

two-sparrows05

(பாடும்)