தலைப்பு-வ.உ.சி.யின்மெய்யறம்,தாய்தந்தையரைத் தொழுதல் : thalaippu_va.u.chi._meyyaram_thaaythanthaiyaraithozhuthal

மெய்யறம் (மாணவரியல்)

[வ. உ. சிதம்பரம்(பிள்ளை) கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூல்.]

3.தாய்தந்தையரைத் தொழுதல்

  1. தாயுந் தந்தையுந் தம்முதற் றெய்வம்.

நம்முடைய முதல் தெய்வம் தாயும், தந்தையுமே ஆவர்.

  1. அவரிற் பெரியர் யாருமிங் கிலரே.

அவர்களைவிடப் பெரியவர் இவ்வுலகில் யாரும் இல்லை.

  1. 23. அவரடி முப்பொழு தநுதினந் தொழுக.

நாள்தோறும் மூன்று பொழுதும் அவர்தம் அடிகளைத் தொழுதல் வேண்டும்.

  1. அவர்பணி யெல்லா மன்பொடு செய்க.

அன்புடன் அவர்களுக்குப் பணிவிடை செய்தல் வேண்டும்.

  1. அவருரை யெல்லா மறிந்துளங் கொள்க.

அவர்களின் அறிவுரைகளை அறிந்து கடைப்பிடித்தல் வேண்டும்.

  1. அவர்பொருள் செய்தற் காந்துணை புரிக.

அவர்கள் பொருள் ஈட்டுவதற்குத் தேவையான உதவிகளைச் செய்தல் வேண்டும்.

  1. அவர்நட் பெல்லா மவர்போற் கொள்ளுக.

பெற்றோர்களின் நண்பர்களை அவர்களைப் போன்றே மதிக்க வேண்டும்.

  1. அவர்பகை யெல்லா மவர்போற் றள்ளுக.

அவர்தம் பகைவர்களை அவரைப்போல் தவிர்க்க வேண்டும்.

  1. அவர்பெயர் விளங்கிட வறிவமைந் தொழுகுக.

அவர்கள் புகழ் விளங்குமாறு விவேகத்துடன் நடத்தல் வேண்டும்.

  1. இல்வாழ் வரசிற் கியைந்தவ ராகுக.

இல்வாழ்க்கைக்கு ஏற்ற தகுதிகளை உடையவராதல் வேண்டும்.

 

வ.உ.சிதம்பரனார்

அட்டை-மெய்யறம்01 : attai_meyyaram 01