
நன்றி நவிலல்
இந்தச் செருப்பைப் போல்
எத்தனைப் பேர் தேய்கிறார்களோ!
இந்தக் கைக்குட்டையைப் போல்
எத்தனைப்பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ!
இந்தச் சட்டையைப் போல்
எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ!
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்துடனாவது விட்டதற்கு!
கவிஞர் ஆத்துமாநாம்
ஆத்மாநாம் படைப்புகள்
Leave a Reply