நன்றி நவிலல் இந்தச் செருப்பைப் போல் எத்தனைப் பேர் தேய்கிறார்களோ! இந்தக் கைக்குட்டையைப் போல் எத்தனைப்பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ! இந்தச் சட்டையைப் போல் எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ! அவர்கள் சார்பில் உங்களுக்கு நன்றி இத்துடனாவது விட்டதற்கு!   கவிஞர் ஆத்துமாநாம் ஆத்மாநாம் படைப்புகள்