சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் தமிழ்த்துறை மாணவியர் படைப்பு வெளியீட்டு விழா

சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் தமிழ்த்துறை மாணவியரின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில், பொழில் என்ற சிற்றிதழும், மாணவமணி என்ற செய்தித்தாளும் வெளியிடப்பட்டன.

விழாவில் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர்  செல்வி வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் பத்மாவதி பொழில் என்ற சிற்றிதழை வெளியிட்டு மாணவியர் படைப்புகளைப் பாராட்டி, மேன்மேலும் தங்கள் படைப்புத்திறன்களை வெளிப்படுத்திட வாழ்த்துக்களைக் கூறினார். மாணவியர் காலத்தால் அழியாத பதிவுகளைத் தருதல் வேண்டும் என்றும், சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கானப் படைப்புகளைப் படைத்திட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

துணைமுதல்வர் முனைவர் வாசுகி மாணவமணி என்ற செய்தித்தாளை வெளியிட்டுப், பாடம் சாரா திறன்களை மாணவியர் ஆர்வத்தோடு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், உள்ள உணர்வுகளைத் தாய்மொழி வழியே வெளிக்கொணர்ந்து, இதுபோன்ற முன்மாதிரி செய்தித்தாள்களை உருவாக்கிட வேண்டுமென்று கூறினார்.

உதவிப்பேராசிரியர் முனைவர் இராசகுமாரி நன்றி கூறினார்.

நன்றி:  ‘நம்ம திருச்சி’ இதழ்