ஏற்காடு இடைத்தேர்தலில்,  திசம்பர், 4 இல் நடைபெற உள்ள, ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான, வேட்புப்பதிவு கடந்த, 9 ஆம் நாள் தொடங்கி, நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதுவரை, அ.தி.மு.க., – தி.மு.க., வேட்பாளர்கள் உட்பட, 27 பேர்  விண்ணப்பித்துள்ளனர்.  இவர்களில், இரண்டு பேர், அ.தி.மு.க., Ercaduவேட்பாளர் சரோசா, தி.மு.க., வேட்பாளர் மாறன். மற்ற இரண்டு பேர், அவர்களுக்கான மாற்று வேட்பாளர்கள்; மீதமுள்ள, 25 பேர்  தனியர்கள். அ.தி.மு.க., – தி.மு.க., தவிர, மற்ற அரசியல் கட்சிகள் எதுவும், இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.  வேட்புப்பதிவைத் திரும்பப் பெற கடைசி நாள் : 20.11.13