பூவரசி விருது-பாலசுப்பிரமணியன் "nighazvu_puuvarasivirudhu

  சென்னை பூவரசி அறக்கட்டளை, பூவரசி ஊடக நிறுவனங்களின் சார்பாகப் பூவரசி விருதுகள் வழங்கும் விழா சென்னையில்  நடைபெற்றது .

     இலக்கியம், இசை, சமூகத் தொண்டு போன்ற பிரிவுகளில் சிறப்பாகச் சேவை செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப் பட்டன.

  இலக்கியத்தில் கடந்த முப்பது ஆண்டுகளாகச் சிறப்பாகச் சேவை செய்துவருவதைப் பாராட்டிப்,

புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் கவிஞர் பொறிஞர் மு.பாலசுப்பிரமணியனுக்குத்

திரைப்பட இயக்குநர் மீரா.கண்ணன் ‘பூவரசி மக்கள் விருது’ வழங்கினார்

  விழாவில் நடிகர் சாருகாசன், இயக்குநர் சனநாதன், எழுத்தாளர் பிரபஞ்சன், புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து,   இதழாளர்கள் அமிர்தம் சூரியா, வெங்கடேசு, கவிஞர் மாலதி மைத்திரி, கவிஞர் தமிழ்மணவாளன்  முதலான படைப்பாளர்கள் கலந்துகொண்டனர்

 பூவரசி அறக்கட்டளை நிறுவனர் ஈழ வாணி விழாவுக்கான ஏற்பாடுகளைச்  செய்திருந்தார்.